கிருபானந்த வாரியார் ஒரு குட்டிக்கதை சொல்லுவார்.. சாகக்கிடக்கும் ஒரு தந்தை தன்னுடைய மகனை அழைத்து ஏதோ சொல்ல முற்படுகையில் இறந்து விடுவாராம்.. மகன் தந்தை என்ன சொல்லவந்தாரென்று தெரியாமல் அவர் கையில் இருக்கும் சுருட்டை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் சுருட்டுன்னு அர்த்தப்படுத்திக் கொண்டது போல் நானும் எதை எதையோ மாற்றி மாற்றி விளங்கிக்கொள்கிறேன்..!?
இன்று காலையில் வேலைக்கு செல்கையில் பிரான்சின் புகழ் பெற்ற France info ரேடியோவை கேட்டுக்கொண்டு செல்கையில் நானும் கிருபானந்தவாரியார் சொன்ன அந்த கதையில் வருகின்ற மகன் மாதிரித்தானோன்னு ஒரு சந்தேகம் வந்துவிட்டது..!?
அது ஒன்றுமில்லை ஐரோப்பாவிலேயே கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்..
ஐரோப்பாவில் எனக்கு தெரிந்து ஹாலாந்தில்தான் சட்ட பூர்வமாக கனபி பாவிக்கலாம்.. அங்கு காட்டானும் 95ம் ஆண்டுகளில் அடிக்கடி சென்று வந்ததால்தான் சொல்கிறேன்.. கனபி பாவிப்பதற்கல்ல..!!?? எனது பழைய நண்பரை பார்பதற்காக அந்த காலங்களில் அடிக்கடி செல்வதுண்டு வேறு ஒன்றுமில்லை நம்புங்கோ மாப்பிளைங்களா..!!?
இப்ப விசயத்திற்கு வாரன் மாப்பிள.. பிரான்சில் பசுமை கட்சி கனபி பாவிப்போர் மீது ஒருவித மென்மையான போக்கே கொண்டுள்ளது அக்கட்சியின் முன்னால் தலைவர் நோயல் மம்மேர் கனபியை சட்ட பூர்வமாக்க வேண்டும் என்கிறார்..!
இப்ப இவர் போற இடமெல்லாம் சின்னபொடியங்க ஐயா கனபி தாங்கையா கனபின்னு ரவுசு பண்ணுறானுங்கோ மாப்பிளையும் அசடு வழியுறார்.. ஆனா காட்டானுக்கு மாப்பிளைய பிடிக்கும் தப்பா நினைக்காதீங்க.. அவர் பகிரங்கமாகவே தான் ஹோமோ செக்ஸ்சுக்கு ஆதரவெண்டு சொன்னது மட்டுமல்லாது.. தன்னுடைய நகர சபையில் சட்டம் அங்கீகரிக்காது என்று தெரிந்தும் இரண்டு ஆம்பிளைகளுக்கு திருமணம் செய்து வைச்சிட்டு ஓவென்று கதறி அழுத காட்சிய பார்த்த காட்டானும் கண் கலங்கீட்டான்யா...!!??
அட இவர விடுவம் இவர் ஒரு முன்னால் காலநிலை செய்திவாசிப்பாளர் மழை வருமோ வராதோனுகூட சரியா சொல்லமுடியாத இவர் சொல்லுறத எல்லோரும் கேப்பினமா..!? ஆனா ரேடியோவில வந்து கனபிய பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறவர் ஒன்றும் காட்டானில்லை.. பிரான்சில் பிரபலமான sorbonne university பொருளாதார பேராசிரியர்.. இஞ்ச இருக்கிறவ காசோடதானே எல்லாத்தையும் பாப்பினம் இவர் சொல்கிறார் கனபியை அங்கீகரித்து அதை கடைகளில் விற்கவிட்டால் அரசுக்கு எவ்வளவோ மில்லியார் யூரோ வருமானம் வருமாம்...!?
அட காச பாக்கிற இவர்கள் எதிர்கால இளைஞர்களை யோசிக்கேல்ல நானும் ஆரம்பத்தில இஞ்ச இருக்கிற பொடியங்க சின்ன வெள்ள பேப்பரில சிக்கிரட்டு தூள வைச்சு சுருட்டேக்க பாத்திருக்கேன் என்ர அப்புச்சி சுருட்ட உறுட்டுற மாதிரி இவனுங்க இத உறுட்டுறாங்கன்னு.. அப்புறம் பார்த்தாதான் தெரியுது இவனுங்க கனபியதான் இப்பிடி செய்யுறாங்கன்னு..
கனபிய நிற்பாட்டுறதுக்கு வழிய பார்காம அதை எதிர்காலத்தில் சட்டபூர்வமாக்கினால்..!!!?? சின்ன பொடியங்க கெடுவது மாத்திரமில்ல.. இனிப்பு வாங்க காச களவெடுத்த காட்டானைப்போல... இவர்கள் ரோட்டில் போற வர்ற ஆட்களை கொள்ளையடிக்க போகிறாங்க.. இப்பவே இது பரவலா இஞ்ச நடக்குது.. இனி இது தேசியமயமாகிடும்..!!?
இதில சோசலிசம்ன்னு கும்மியடிக்கிறவய நம்ப முடியாது..அதோட எங்கட தமிழ் பொடியங்க இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நல்லா படிச்சுக்கொண்டு வாராங்க.. இவங்க பெற்றோரில கூடுதலானவங்க காசு காசுன்னு ஓடுவதையும்தாண்டி...!!?
இஞ்ச கனபி விக்கிறவங்க எங்கட ஊரில பள்ளிகூடத்துக்கு முன்னால நிக்கிற ஐஸ்பழகாரன் போல பள்ளி பிள்ளைகள குறிவைச்சுத்தான் திரியுராங்க ஏன்னா இவங்கதான் எதிர்கால கஸ்ரமர்ன்னுராங்க.. முதல்ல இவர்களின் நண்பர்கள் மூலம் இலவசமாதான் கொடுப்பாங்க.. அதுக்கு பிறகு இவர்கள் அதற்கு அடிமையாகிட்டா..கதை கந்தல்தான்..!!?
அதுக்கு பிறகு பிள்ளய அடிச்சோ பிடிச்சோ திருத்த முடியாது.. எப்பிடியோ நாட்ட விட்டு வெளிக்கிட்டவ திரும்பிப்போய் அங்கேயே இருப்பார்கள் எண்டுறது பொய்..!? இப்பிடிதான் மணியண்ணை நான் இஞ்ச வந்த ஆரம்ப நாட்கள்ல டேய் காட்டான் இன்னும் ரெண்டு வருசத்தில காச உழைச்சுக்கொண்டு ஊருக்கு போய் என்ர மனிசி பிள்ளைகளோட செட்டிலாகப்போறேன்னு என்னட்ட அடிக்கடி சொல்லுவார்.. இப்ப இருவது வருசமாச்சு கொழும்பில வீட்டையும் வாங்கி விட்டிருக்கார் ஆனா இப்ப அங்க போற ஐடியா இல்லன்னுறார் கேட்டா குடும்பத்தை இஞ்ச கூப்பிட்டாச்சு பிள்ளைகள் இஞ்ச படிக்கினம் அவர்களுக்கு ஒரு கல்யாணம் காட்சி பார்க்கவேண்டாமோன்னுரார்.. இன்னும் கொஞ்ச காலம் போனா பேரப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் போயினம் அவர்கள நாங்க பார்கோனும்பார்... அதையும் விட்டா பேரபிள்ளைங்க வளர்ந்திட்டார்கள்ன்னு சொல்லிக்கொண்டே போவார்... இது எல்லாருக்கும் ஒரு காலத்தில வாறதுதான்...
சரி காட்டான் இதுக்கு என்ன செய்யலாம்ன்னு நீங்க கேக்கலாம் முதல்ல ஒன்றை சொல்கிறேன்.. காட்டானுக்கு இதில பெரிய அனுபவமில்லன்னாலும்.. எனக்கு தெரிந்த சில வழிகள சொல்லுகிறேன்... உங்களுக்கும் தெரியும் எப்படி எங்கட பிள்ளைகளை இதில இருந்து காப்பாத்துறதெண்டு அத நீங்க உங்க கருத்துக்களா சொல்லுங்கோ அது மற்றவர்ளுக்கு பிரயோசனமாஇருக்கும்...!!!!!
எப்பிடியோ இண்டைக்கில்லாட்டியும் ஒரு நாள் இவர்கள் கனபிய பிரான்சில சட்டபூர்வமாக்கிடுவாங்கன்னுதான் காட்டான் நினைக்கிறான்...!? இப்ப இவர்கள் நூல் விட்டு பாக்கினம்.. இப்பிடியான.. பேராசிரியர்கள்,அரசியல்வாதிகள் மூலம்.. அதுக்கு முன்னால நாங்க உசாராகிடோனும்..
தோளுக்கு மேல வளர்ந்தா தோழன்னு சொல்வதுபோல்..! நான் உன்ர அப்பண்டா அப்பிடிதாண்டா இருப்பேன் நான் சொல்லுறததாண்டா நீ கேக்கோனும்ன்னு இருக்காம.. அவர்களோடு நண்பர்களா,நண்பிகளா பழகுவோம்.. வாழ்க்கைக்கு காசு தேவைதான் அத இல்லைன்னு சொல்லல காட்டான்... ஆனா பிள்ளைகளுக்கும் கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்... லீவு நாட்களில் பிள்ளைகளை அவர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு அழைத்து செல்வோம்.. முக்கியமாக அவர்களின் நண்பர்களை தெரிந்து கொண்டு அவர்களுடனும் நண்பர்களாக பழகுவோம்..
இப்படியான சில செயற்பாடுகள் மூலம் கட்டாயம் அவர்கள் எங்களிடம் எதையும் மறைக்க மாடார்கள்...!? இது அவர்களை நல்வழிப்படுத்தும்..காட்டானுக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது பிரன்சில் அடுலேசோன் என்று அழைக்கப்படும் டீனேச் பசங்களப்பற்றி.. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.... காட்டானிடமும் வருங்கால டீனேச் பொடியங்கள் இருக்கிறார்கள்.. உங்கள் அனுபவம் எனக்கும் தேவை...!!!?
இன்று காலையில் வேலைக்கு செல்கையில் பிரான்சின் புகழ் பெற்ற France info ரேடியோவை கேட்டுக்கொண்டு செல்கையில் நானும் கிருபானந்தவாரியார் சொன்ன அந்த கதையில் வருகின்ற மகன் மாதிரித்தானோன்னு ஒரு சந்தேகம் வந்துவிட்டது..!?
அது ஒன்றுமில்லை ஐரோப்பாவிலேயே கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்..
ஐரோப்பாவில் எனக்கு தெரிந்து ஹாலாந்தில்தான் சட்ட பூர்வமாக கனபி பாவிக்கலாம்.. அங்கு காட்டானும் 95ம் ஆண்டுகளில் அடிக்கடி சென்று வந்ததால்தான் சொல்கிறேன்.. கனபி பாவிப்பதற்கல்ல..!!?? எனது பழைய நண்பரை பார்பதற்காக அந்த காலங்களில் அடிக்கடி செல்வதுண்டு வேறு ஒன்றுமில்லை நம்புங்கோ மாப்பிளைங்களா..!!?இப்ப விசயத்திற்கு வாரன் மாப்பிள.. பிரான்சில் பசுமை கட்சி கனபி பாவிப்போர் மீது ஒருவித மென்மையான போக்கே கொண்டுள்ளது அக்கட்சியின் முன்னால் தலைவர் நோயல் மம்மேர் கனபியை சட்ட பூர்வமாக்க வேண்டும் என்கிறார்..!
இப்ப இவர் போற இடமெல்லாம் சின்னபொடியங்க ஐயா கனபி தாங்கையா கனபின்னு ரவுசு பண்ணுறானுங்கோ மாப்பிளையும் அசடு வழியுறார்.. ஆனா காட்டானுக்கு மாப்பிளைய பிடிக்கும் தப்பா நினைக்காதீங்க.. அவர் பகிரங்கமாகவே தான் ஹோமோ செக்ஸ்சுக்கு ஆதரவெண்டு சொன்னது மட்டுமல்லாது.. தன்னுடைய நகர சபையில் சட்டம் அங்கீகரிக்காது என்று தெரிந்தும் இரண்டு ஆம்பிளைகளுக்கு திருமணம் செய்து வைச்சிட்டு ஓவென்று கதறி அழுத காட்சிய பார்த்த காட்டானும் கண் கலங்கீட்டான்யா...!!??
அட இவர விடுவம் இவர் ஒரு முன்னால் காலநிலை செய்திவாசிப்பாளர் மழை வருமோ வராதோனுகூட சரியா சொல்லமுடியாத இவர் சொல்லுறத எல்லோரும் கேப்பினமா..!? ஆனா ரேடியோவில வந்து கனபிய பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறவர் ஒன்றும் காட்டானில்லை.. பிரான்சில் பிரபலமான sorbonne university பொருளாதார பேராசிரியர்.. இஞ்ச இருக்கிறவ காசோடதானே எல்லாத்தையும் பாப்பினம் இவர் சொல்கிறார் கனபியை அங்கீகரித்து அதை கடைகளில் விற்கவிட்டால் அரசுக்கு எவ்வளவோ மில்லியார் யூரோ வருமானம் வருமாம்...!?
அட காச பாக்கிற இவர்கள் எதிர்கால இளைஞர்களை யோசிக்கேல்ல நானும் ஆரம்பத்தில இஞ்ச இருக்கிற பொடியங்க சின்ன வெள்ள பேப்பரில சிக்கிரட்டு தூள வைச்சு சுருட்டேக்க பாத்திருக்கேன் என்ர அப்புச்சி சுருட்ட உறுட்டுற மாதிரி இவனுங்க இத உறுட்டுறாங்கன்னு.. அப்புறம் பார்த்தாதான் தெரியுது இவனுங்க கனபியதான் இப்பிடி செய்யுறாங்கன்னு..
கனபிய நிற்பாட்டுறதுக்கு வழிய பார்காம அதை எதிர்காலத்தில் சட்டபூர்வமாக்கினால்..!!!?? சின்ன பொடியங்க கெடுவது மாத்திரமில்ல.. இனிப்பு வாங்க காச களவெடுத்த காட்டானைப்போல... இவர்கள் ரோட்டில் போற வர்ற ஆட்களை கொள்ளையடிக்க போகிறாங்க.. இப்பவே இது பரவலா இஞ்ச நடக்குது.. இனி இது தேசியமயமாகிடும்..!!?
இதில சோசலிசம்ன்னு கும்மியடிக்கிறவய நம்ப முடியாது..அதோட எங்கட தமிழ் பொடியங்க இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நல்லா படிச்சுக்கொண்டு வாராங்க.. இவங்க பெற்றோரில கூடுதலானவங்க காசு காசுன்னு ஓடுவதையும்தாண்டி...!!?
இஞ்ச கனபி விக்கிறவங்க எங்கட ஊரில பள்ளிகூடத்துக்கு முன்னால நிக்கிற ஐஸ்பழகாரன் போல பள்ளி பிள்ளைகள குறிவைச்சுத்தான் திரியுராங்க ஏன்னா இவங்கதான் எதிர்கால கஸ்ரமர்ன்னுராங்க.. முதல்ல இவர்களின் நண்பர்கள் மூலம் இலவசமாதான் கொடுப்பாங்க.. அதுக்கு பிறகு இவர்கள் அதற்கு அடிமையாகிட்டா..கதை கந்தல்தான்..!!?
அதுக்கு பிறகு பிள்ளய அடிச்சோ பிடிச்சோ திருத்த முடியாது.. எப்பிடியோ நாட்ட விட்டு வெளிக்கிட்டவ திரும்பிப்போய் அங்கேயே இருப்பார்கள் எண்டுறது பொய்..!? இப்பிடிதான் மணியண்ணை நான் இஞ்ச வந்த ஆரம்ப நாட்கள்ல டேய் காட்டான் இன்னும் ரெண்டு வருசத்தில காச உழைச்சுக்கொண்டு ஊருக்கு போய் என்ர மனிசி பிள்ளைகளோட செட்டிலாகப்போறேன்னு என்னட்ட அடிக்கடி சொல்லுவார்.. இப்ப இருவது வருசமாச்சு கொழும்பில வீட்டையும் வாங்கி விட்டிருக்கார் ஆனா இப்ப அங்க போற ஐடியா இல்லன்னுறார் கேட்டா குடும்பத்தை இஞ்ச கூப்பிட்டாச்சு பிள்ளைகள் இஞ்ச படிக்கினம் அவர்களுக்கு ஒரு கல்யாணம் காட்சி பார்க்கவேண்டாமோன்னுரார்.. இன்னும் கொஞ்ச காலம் போனா பேரப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் போயினம் அவர்கள நாங்க பார்கோனும்பார்... அதையும் விட்டா பேரபிள்ளைங்க வளர்ந்திட்டார்கள்ன்னு சொல்லிக்கொண்டே போவார்... இது எல்லாருக்கும் ஒரு காலத்தில வாறதுதான்...
சரி காட்டான் இதுக்கு என்ன செய்யலாம்ன்னு நீங்க கேக்கலாம் முதல்ல ஒன்றை சொல்கிறேன்.. காட்டானுக்கு இதில பெரிய அனுபவமில்லன்னாலும்.. எனக்கு தெரிந்த சில வழிகள சொல்லுகிறேன்... உங்களுக்கும் தெரியும் எப்படி எங்கட பிள்ளைகளை இதில இருந்து காப்பாத்துறதெண்டு அத நீங்க உங்க கருத்துக்களா சொல்லுங்கோ அது மற்றவர்ளுக்கு பிரயோசனமாஇருக்கும்...!!!!!
எப்பிடியோ இண்டைக்கில்லாட்டியும் ஒரு நாள் இவர்கள் கனபிய பிரான்சில சட்டபூர்வமாக்கிடுவாங்கன்னுதான் காட்டான் நினைக்கிறான்...!? இப்ப இவர்கள் நூல் விட்டு பாக்கினம்.. இப்பிடியான.. பேராசிரியர்கள்,அரசியல்வாதிகள் மூலம்.. அதுக்கு முன்னால நாங்க உசாராகிடோனும்..
தோளுக்கு மேல வளர்ந்தா தோழன்னு சொல்வதுபோல்..! நான் உன்ர அப்பண்டா அப்பிடிதாண்டா இருப்பேன் நான் சொல்லுறததாண்டா நீ கேக்கோனும்ன்னு இருக்காம.. அவர்களோடு நண்பர்களா,நண்பிகளா பழகுவோம்.. வாழ்க்கைக்கு காசு தேவைதான் அத இல்லைன்னு சொல்லல காட்டான்... ஆனா பிள்ளைகளுக்கும் கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்... லீவு நாட்களில் பிள்ளைகளை அவர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு அழைத்து செல்வோம்.. முக்கியமாக அவர்களின் நண்பர்களை தெரிந்து கொண்டு அவர்களுடனும் நண்பர்களாக பழகுவோம்..இப்படியான சில செயற்பாடுகள் மூலம் கட்டாயம் அவர்கள் எங்களிடம் எதையும் மறைக்க மாடார்கள்...!? இது அவர்களை நல்வழிப்படுத்தும்..காட்டானுக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது பிரன்சில் அடுலேசோன் என்று அழைக்கப்படும் டீனேச் பசங்களப்பற்றி.. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.... காட்டானிடமும் வருங்கால டீனேச் பொடியங்கள் இருக்கிறார்கள்.. உங்கள் அனுபவம் எனக்கும் தேவை...!!!?









