முகப்பு

Saturday, 9 July 2011

காட்டான் பிடித்த கிளி..

காட்டான் பாரீஸ் வந்து விட்ட கொஞ்ச காலத்தின் பின் தான் வைத்திருந்த திருக்க வண்டியை ஆச்சி வித்திட்டா என்று கேள்விபட்டவுடன் உண்ணாவிரதமிருக்க தொடங்கிவிட்டான்..? ஆனால்  வாழ்கை முழுவதும் மூக்கு முட்ட ஊர் அரிசிசோத்த சாப்பிட்டவனுக்கு இதில வேற அவண்ட நாய்கும் அதே அளவு வைக்க வேண்டும் இல்லாவிட்டால் வீடே சுனாமி வந்த புக்குசிமா மாதிரியாகிவிடும்..அதனால்
காலையில் தொடங்கிய உண்ணாவிரதத்த மாலையே முடித்துவைத்தான் ..!

காட்டான் பசி தாங்க மாட்டான் இப்ப நினைத்து பார்த்தால் தழிழ் ஈனத்தலைவர்(எழுத்து பிழை இருந்தா மன்னிச்சிடுங்க உங்களுக்கு தெரியும்தானே காட்டானின் கல்வியறிவு..!) இருந்த உண்ணா விரதத்தை விட கூட நேரம் இருந்திருக்கிறான்...!!?

அப்புறமா ஆச்சி டெலிபோன்ல சொன்னா  அட காட்டானே அத நான் வித்தது கந்தயர் வீட்டுக்குதான் அங்க ஒரு அழகான கிளி இருக்கடா எதிர் காலத்தில அந்த கிளிய உன்ர கையில பிடிச்சு கொடுக்கலாமெண்டு யோசிக்கிறன்..? அப்ப நீ வீட்டோட மாப்பிளயாய் இருக்கேக்க அந்த திருக்க வண்டி உதவும்டா..நீ கவலையை விட்டுட்டு வேலையை பாரடான்னா..

அதுக்கு பிறகு காட்டானுக்கு எங்க வேல ஓடபோது..!காட்டானுக்கும் அந்த கிளிய நல்லா தெரியும் அட அந்த கிளி காட்டாண்ட தங்கச்சியோடதான் படித்தது ஆனா ஊரில காட்டானை கண்டா..!!?

மாப்பிளங்களா அது வேற ஒன்னுமில்ல அவ அப்பண்ட தோட்டத்தில வெள்ளரிக்காய்கள் களவு போகுதாம்.. இதில காட்டான் சம்பந்தபட்டிருக்கலாமென யாரோ ஒரு நல்லவாயன் போட்டு கொடுத்திட்டான் இதுக்கெல்லாம் நாங்க என்ன மறுப்பறிக்கையா கொடுக்க முடியும்??இல்ல அந்த அறிக்கையை எழுதவாவுதல் காட்டானுக்கு தெரியுமா..?

இப்ப ஆச்சி திருக்கையை அட்வான்சா கொடுத்து காட்டான்மேல் இருக்கும் காட்டத்த குறைச்சு கிளிமேல கண்ண வைச்சிட்டா என்றவுடனேயே காட்டாண்ட பின் பக்கமெல்லாம் லா..லா என்று வெள்ள உடுப்பில பறக்கினம் தேவதைகள் ...!!

என்றாலும் காட்டானுக்கு ஒரு சந்தேகம் அந்த கிளி யாழ்பாணத்தில பெரிய படிப்பெல்லாம் படிக்க போகுதாமே என்றேன்  ஆச்சியிடம் அட காட்டுப்பயலே உனக்கென்னடா குறைச்சல்.!? நீயும் பெரிய பெரிய காரெல்லாம் வைச்சு ஓடுரேயே அவங்கதான் காட்டானின் குடும்பத்தில வர்றத்துக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமெண்டா அப்பதான் காட்டானுக்கு ஓடி விளங்கிச்சு..!!ஆச்சி படமனுப்பு என்று அடிக்கடி கேட்கேக்க காட்டான் புறாகூடு வீட்டில படமெடுத்து அனுப்பினா ஆச்சி கவலைப்படும்ன்னு ரோட்டில் பாக்கிங்பண்னி இருக்கும் ஒவ்வொரு காருக்கும் முன்னால நின்னு படமெடுத்து அனுப்பியது..!

என்றாலும் காட்டானின் மனசுக்க பிரான்சுக்கு வந்ததில ஒரு லாபம்..?பெரிய படிப்பு படிக்கும் பொண்டாட்டி கிடைக்கப்போறாள் அதுக்கு காட்டான் தன்னை தயார்படுத்த தொடங்கினான்..!?

அதன் முதல் படி ஆச்சி நம்பிக்கொண்டு இருப்பதுபோல் நானும் கார் வாங்கினால் என்ன..?மாட்டு வண்டியிலேயே காலத்தை கழித்தவனுக்கு கார் கனவு நடு இருட்டில துரத்துர நாயப்போல துரத்த தொடங்கியது..!?

அப்பதான் காட்டானுக்கு ஒரு உண்மை விளங்கியது பிரான்சில கார் வாங்குறது ஒன்றும் பெரிய விசயமில்ல ஊரில பல்லி முட்டா வாங்கிறமாதிரி வாங்கலாம் ஆனா அத ஓட்ட லைசன்சு வேனுமாம்..!அட இந்த காட்டான் மாட்டு வண்டி ஓட்டும்போது ஒரு கம்புதான் வைத்திருப்பான் வேற ஒன்றுமே தேவையில்ல..  இப்ப லைசன்சு வாங்கோனும்னா பள்ளிக்கூடம் போகவேனும்ன்னுட்டாங்க இஞ்சதான் காட்டானுக்கு வகுத்த கலக்கதொடங்கியது சின்ன வயசில பள்ளிக்கூடம் போவென்றாவே காச்சட்டையை நனைக்கிற காட்டான் ஒரு கிளிக்காக பள்ளிகூடம் விரும்பி போக தொடங்கினான்..!!

அடிப்படையிலேயே இங்கிலீசு தெரியாத காட்டான் பிரன்சை பக்கென்று பிடித்ததற்கு காரணம் வேலைத்தலத்தில் எல்லோருமே பிரன்சுக்காரர்கள் அத்தோட நாலைஞ்சு பொண்ன்னுங்க வேற அவங்க எதைப்பற்றி கதைத்தாலும் காட்டானிக்கு தன்னைப்பற்றிதானோ கதைக்கிறார்கள் என்று யோசிப்பான் அதனால காட்டான் பிரன்சை மெல்ல மெல்ல அவர்களுடன் கதைத்து பழகிற்றான் காட்டான் அடிப்படையிலேயே வெக்கப்படமாட்டான் அதுவும் அவனுக்கு கை கொடுத்தது ..!

என்றாலும் பள்ளிகூடத்தில சொல்லி தருகிறது விளங்குவது கஸ்ரமாகத்தான் இருந்தது அப்பதான் இந்த வாத்திமார்களின் சைக்கில் காத்த புடிங்கி விட்டதெல்லாம் தேவையில்லாமல் ஞாபகபடுத்திசென்றன..!?

என்றாலும் காட்டானா கொக்கா எழுத்து தேர்வு நடந்த கோலில் நின்று எல்லோரையும் நோட்டம் விட்டான் இலுப்பகட வைரவரை நினைத்துக்கொண்டு  ஒரு சைனீஸ் பெண்னுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்..!?தேர்வும் முடிந்தது நாற்பது கேள்விகளுக்கு முப்பதொன்பது சரியாக செய்து விட்டான் இந்த காட்டான் சந்தோசத்தில் அந்த பெண்னை திரும்பி பார்த்தான் ஒரு வித நன்றியுணர்வோடு ஆனால் இந்த காட்டானுக்கு இன்றும் விளங்கவில்லை ஏன் அந்த பெண் தேர்வில் தோற்றாள் என்று..!!

அடுத்த தேர்வு காரை ஓட்டி காட்டுவது ஏனோ தெரியவில்லை காட்டான் இதில சுலபமாக வென்று விட்டான்..!??அப்புறமென்ன ஊரில சங்க கட கூப்பன் காட் போல ஒன்றை தந்து இதுதான் உன்ர லைசன் இனி நீ கார் ஓடலாமென அனுப்பி வைத்தார்கள்..

  அடுத்து கார் வாங்கும் படலம் ஒரு பழைய R19 காரையும் வாங்கிவிட்டேன் அதன் முன்னால நின்று ஒரு படத்த எடுத்து ஆச்சிக்கு அனுப்பினா அங்க இருந்து அச்சி சொல்கிறா என்னடா இந்த காட்டானுக்கு என்ன கிறுக்கு பிடிச்சிடிச்சோ? நல்ல நல்ல காரெல்லாம் வைச்சிருந்தான் இப்ப என்னடான்னா பேரீசம் பழத்திற்குகூட பெறுமதியில்லாத கார் வாங்கியிக்கிறான்னா..!!

ஆனா பாருங்கோ ஆச்சி கிளிய பிடிச்சு பிரான்சுக்கு அனுப்பும்வரை அந்த படத்த கண்னுல காட்டல்ல கிளிக்கு..!? இப்பதான் யோசிக்கிறன் கிளி படத்த பார்த்திருந்தா ஏர்போட்டிலேயே யோசித்து பார்த்து பறந்திருக்கும்..?இப்ப பாருங்கோ இந்தகாட்டானோட இன்னும் ரெண்டு காட்டான் குட்டிகளை பெத்துபோட்டு....விட்டு சொல்லுறாள் இஞ்ச பாருங்கோ இரவுசாப்பாட்டிற்கு இடியப்பத்த அவிச்சு வையுங்கோ நானும் லைசன்சுக்கு படிக்க பள்ளிகூடம் போட்டு வாரேன்கிறாள்..! ஆச்சிய நினைச்சிகொண்டு இரவுச்சாப்பாட்ட ரெடி பண்னபோறேன்..அது சரி கறி என்ன வைக்கிறதெண்டு சொல்லாம போட்டாளே.. மாப்பிளைங்களா இண்டைக்கு நான் அடிவாங்காம படுக்கபோறதில்லைன்னு தெரியுது எப்புடி இருந்த நான்.!!!?

Wednesday, 6 July 2011

ஆசை நூறுவகை...!!??

நீண்ட நாள் எனக்கு ஒரு ஆசை பாரீசின் புகழ் பெற்ற தமிழ் கடை வீதியில் அந்த ஆசையை நிறை வேற்றுவதற்காக காத்திருந்தேன்..

ஆடி மாத சம்பளமும் ஆடியசைந்து என் கைக்கு வர புறப்படி  விஸ்வமடுவிற்கு என்ற மாதிரி (அதை விட கொஞ்சம் பணிவாக..!?)மனைவியிடம் கூறி விட்டு  பிள்ளைகளை தயார் படுத்தினேன் அட ஆமாயா உந்த வேலையெல்லாம் நான் தான் செய்ய வேண்டியிருக்கு..

என்னுடய  மனைவி இதை செய்ய சென்றால் பொடியங்கள் அனுமதிப்பதில்லை கேட்டால் இவங்கள் குட்டி காட்டான்கள் அப்பா செல்லம் என்கிறாள் இதுவும் ஒரு யுக்திதானப்பு..! அப்புறம் வண்டியை எடுத்துக்கொண்டு பாரீஸ் வந்து சேர்ந்தேன் அட என்ர மாட்டு வண்டிக்கே பாரீசில் மணித்தியாலத்திற்கு இரண்டு யூரோக்கள் வசூலிக்கிறார்கள் என்ன கொடுமை சார் இது..!?  இத தட்டிக்கேட்க ஆளில்லையா..?இதற்காகவே  வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரீஸ் மேயர் பெர்தொன் து நோயே சார்ந்திருக்கும் பார்டி சோசியால் கட்சிக்கு வோட்டு போடுவதில்லை என என்ர அப்புச்சி போட்டோ மேல் சத்தியம் செய்திருக்கிறேன்..??

பின்ன என்னப்பு இரண்டு மணித்தியாலங்கள் மாட்டு வண்டிய நிப்பாட்டியதற்கே நாலு யூரோக்கள் காலி  சம்பளம் வாங்கியதிலிருந்து பத்து நாளைக்கு இதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை இந்த காட்டான்..!!?(அதுக்கு பிறகு வரவு எட்டணா செலவு பத்தணாதான்..!?)ஆனால் அதை விட இந்த காட்டானுக்கே ஆட்டையை போட்டு விட்டார்கள் நம்மவர் நம்மவர் என்று கூவிகொண்டு திரியும் நம்மவர்கள்..?? ஆமாயா கடைகளில் சாமான்கள் வாங்கும் போது மிக கவனமாய் இருங்கோ மாப்பிளங்க... இவர்கள் எல்லா மரகறிகளுக்கும் ஒரே விலையை ஏன் அடிக்கிறார்கள்..? அதுவும் ஒரே சாமான்களை இரண்டுதரம் அடிக்கிறார்கள்..!  நான் கேட்கிறேன் இந்த காட்டானாலேயே ஒரு பதிவை தமிழில் போட முடியுமெண்டால் உங்கள் பண பட்டறை இயந்திரத்தை ஏன் ஒவ்வோர் பொருட்களின் பெயர்களையும் தனி தனியாக அடிக்க முடியாது..?

ஆம் இவர்கள் ஆட்டையைபோட வேண்டுமென்றே முடிவெடுத்து விட்டே பட்டறையை தொடுகிறார்கள் போலும்?? இதல் இவர்களிடம் பணிபுரியும் புதிதாய் வந்தவர்களை நினைத்து பார்கவே பயமாக இருக்கிறது இவர்களை பார்கும்போது வேண்டாம்...!?உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்..!?எனது மகனுக்கு ரொட்டி(பரோட்டா)என்றால் உயிர் லாச்சப்பல் செல்லும் ஒவ்வொரு முறையும் அவனுக்கு இவற்றை வாங்கி கொடுக்காமல் வருவதில்லை வழமையாய் செல்லு சாப்பாட்டு கடைக்கே சென்றேன் அது கிழமைக்கொரு முதலாளி மாறும் கடபோலும்..? இரண்டு ரொட்டிக்கு இரண்டு யூரோக்களும் கொஞ்ச பருப்புக்கு இரண்டரை யூரோக்களும் எடுத்து எனை சிதம்பர சக்கரத்தை பேய் பார்தது போலாக்கிவிட்டார்கள்.

இதை விட இஞ்ச ஒரு கூத்து நடந்தது இலங்கை பொருட்களை புறக்கனிங்கோ புறக்கனியுங்கோவெண்டு நானும் இரண்டாண்டுகளாக இலங்கையிலிருந்து வரும் சோம பாணங்களை தொடுவதில்லை..? அட புறக்கனிக சொன்னவங்களே அத விக்கும்போது இந்த காட்டான் என்ன கேனையனா அவர்கள் கடயிலேயே அந்த சோம பாணத்த வாங்கிக்கொண்டு வரும்போதுதான் காட்டானின் ஆசை??நினைவுக்கு வந்தது அவர்களிடமே பாக்கு வெத்தலை சுண்னாம்பு வாங்கி போட்டுக்கொண்டு வெளியில் வந்து துப்புவதற்கு இடத்தை தேடினால் இந்த காட்டானே வெக்கபடுமளவு மரத்தை சுத்தி துப்போ துப்பென்று துப்பி வைத்துள்ளார்கள் இந்த காட்டானின் முன்னோடிகள்..இதோ காட்டான் சுத்தி சுத்தி துப்பிய இடம்..?

Friday, 1 July 2011

களவும் கற்று மற....??


பாத்தீங்களா மாப்புங்களா..இதுதானப்பு நான் புதுசா வாங்கின கால இயந்திரம் என்ன யோசிக்கிறீங்க மாட்டு வண்டிய வைச்சிகினு காலன் கீலன்னு ரீலு விடுகிறேன்னு ஆமாயா இது நிசமாவே ஒரு கால இயந்திரம்தானய்யா இப்ப நாம போகப்போறது எனக்குள்ளார குந்தின்னுகிர கிராமத்து பொருதாரமேதை காட்டான் கந்தசாமியை கூட்டிக்கினு வரத்தான்

பொருளாதாரத்தைப் பற்றி இந்த கம்முனாட்டி கதைக்கப்போறான்னாலே எலி மூஞ்சியில சோத்தான் கைய வைக்க போறீங்களே...மாப்புக்களா இது நீங்க நினைக்கிற பொருளாதரமில்லங்க..! வாங்க.. வாங்க ..நேரிலேயே போய்பாப்பம்  குய்ங்.. குய்ங்..அட சக்கரத்த கொஞ்சம் வேகமா சுத்தீட்டன்போல.!

கொய்யா மக்கா உன்மையிலேயே ஏமாந்திட்டிங்களா..!? ஏதோ வந்திட்டிங்க அதுகாச்சும் ஒரு மொக்க பதிவ போடுவம் இந்த காட்டான் எப்பூடி தன் சிறுவயதில் பொருளாதார தேவைகளை தீர்தான் என சொல்லுறான் சிறுவயதில் உனக்கென்னடா பொருளாதார தேவை என்றுதானே கேட்கிறியல்  நீங்க மட்டும் என்ன சிறுவயதில் பல்லிமுட்டஇனிப்பு,புலுட்டோ,தோடம்பழஇனிப்பு, இப்பூடி சாப்பிட்டிருப்பிங்கதானே..!? அட நானும் அதுக்குத்தான் காச எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் செல்வது இத சில பெருசுகள் களவெடுக்கிறனாம்..!!

அட நான் கேட்கிறேன் இத களவெண்டே வைத்துக்கோ நான் காச எடுத்து நாளு நாளாச்சு நல்லா கல்பனுசு,வறுத்த விசுக்கோத்து இப்பூடி சாப்பிட்டத கண்டு பிடிக்க வக்கில்ல உங்களுக்கு ஏதோ சித்தப்பு வாங்கி தந்த சோடா சேட்டுல பட்டுட்டு அதவைச்சு கண்டு பிடிக்கிறீங்களே உங்களுக்கு வெக்கமா இல்ல.!!?எனக்கு அது இல்லையப்பு...இது ஒரு திறம மாட்டாம ஆட்டையைப் போடுவது எப்பூடி அட அப்பூடி மாட்டினாலும் தப்புவது எப்பூடி..? அததான் சொல்லப்போறான் இந்த காட்டான்..

மாப்புங்களா  ஒருத்தரிடமே தொடர்ந்து ஆட்டையை போடாதீர்கள் பின்னர் அவர்கள் எதைத் தொலைத்தாலு முதலாவதாய் வந்து நிற்பது உங்கமுன்னால!?அதன்பின் தொழிலுக்கு தொங்கு திசைதான் ??

முதலில் அம்மாவிடம் இருக்கும் சில்லரைகளை ஆட்டை போடுவதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவைகள் அம்மா வெளியூர் சென்று வந்தாரா..!?ஆமெனில் இதை விட சிறந்த சந்தர்பம் வேறேதுவுமில்லை கடைக்காரர்களும் பஸ் கண்டக்டர்களும் கொடுக்கும் சில்லரைகள் பர்ஸ்சுக்குள் நிறைமாத கர்பிணிபோலிருக்கும்..! இதை அம்மா கணக்கு பார்க முன்னர் ஆட்டையை போட வேண்டும் ஏனெனில் சில்லரைகள் குறைந்தாலும் எங்களை சந்தேகப்படாது கடைக்காரர்களையும் கண்டக்டர்களையும் திட்டித்தீர்பார்..!அப்பொழுது நீங்கள் பால் மணம் மாறா பச்சபுள்ளபோல் மூஞ்சிய வைத்திருத்தல் அவசியம்..!?

அட இவ்வளவு கஸ்ரப்பட்டு எடுத்தாலு சில வேளைகளில் எமது துரோகிகள் காட்டிக் கொடுத்தால்? (அட  வீட்டுக்கதான் இருப்பாங்க வேற எங்கேயுமில்ல..!?)இப்ப அம்மான்னா சுமா இல்லேடாவென பிரப்புடன் வருகிறாவா? அமைதி ஓடாதே ஓடினால் அண்ணனோ அக்காவோ பிடித்து கொடுப்பார்கள் அதன் பின்னர் வரும் பூசை பலமானதாய்விடும் சாத்தியம் அதிகம் இப்ப நீ செய்யவேண்டியது இதுதான் பிரம்புடன் சேர்த்து அம்மாவை இறுக்க அனைத்துக்கொள்ளுங்கள் ராசா என்னை விட்டுடு என்று சொல்லும் வரை இப்போது வலது காலை மெதுவாக பின்நகர்த்துங்கள் விடு யுட் ஆனாலும் ஒரு அடி பலமானதாய் முதுகில் விழும் அரசியல்ல இதல்லாம் சகசமப்பு...!

அடுத்து நாம ஆட்டையை போடப்போவது அக்காவிடம் அக்காக்கள் இல்லாதவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதபங்கள் அக்காக்கள் இன்னுமொரு அம்மாக்களே...!?அதற்காக ஆட்டையை போடாதீர்கள் என்று சொல்லவரவில்லை அம்மாவிடமே ஆட்டையை போடும் நாங்க அக்காவிடம் ஆட்டையை போடாவிட்டால் எங்க பாசத்த நிறுபிக்க முடியாது..?இவ் விசயத்தில் நீங்கள் மிக மிக அவதானமாக இருத்தல் அவசியம்..? சரி அக்காவிடம்தானே பர்ஸ் இல்லையே புதையல் எங்கிருக்கும்?அட அனுபவசாலிகளுக்கு இதெல்லாம் ஒரு யுபி யுபி அட அந்த புதயலே அக்காவின் கொம்பாஸ்தான் என்ன என்ன மாப்புங்களா உடனே கொம்பாசை நோக்கி ஓடுகிறீங்க...!?பொரும பொரும கொம்பாச திறக்கமுன் கவனிக்க வேண்டியது அது எந்த திசையில் இருந்தது திறந்தவுடன் மயிலிறகு எப்படி இருந்தது ஆக்கு,ரப்பர் போன்றவை எங்கிருந்தது போன்றவை அவசியம் இதில் ஒரு பொருளை இடம் மாற்றி வைத்தால்..?சங்குதான் சிங்கங்களே..

அடுத்து நாம போற இடம் பாட்டிமார் ஆரம்பத்திலேயே சொல்கிறேன் இவர்களிடம் ஆட்டையை போடுவது சிரமமே..!இவரிடமிருக்கும் புதயல் உள்ளங்கை நெல்லிக்கனி வேற எங்க இருக்கும்? முந்தானை முடிச்சிலதான் ஆனால் இவர்களுக்கு நாம அடிக்கடி தேவைப்படுவோம் கடை தெருக்களுக்கு சென்று வர.. அப்போது வெற்றிலை,பாக்கின் விலையில் விளையாடலாம் விதவிதமாக..!?அத்தோடு கோவில் திருவிழாக்களில் பக்தி மயமாக பாட்டியுடன் கோவிலை சுத்திவந்தால் சுண்டலுடன் முந்தானை முடிச்சும் உங்களுக்கே..!!

அடுத்து நாம போறது தாத்தாமார்கள் எனக்கு தெரிந்து இவர்களிடம்தான் ஆட்டையை போடுவது சுலபம்..? மாமாக்கள்,சித்தப்புக்கள் மாதாமாதம் பாட்டிமார்க்ளுக்கு கைச்செலவுக்கு காசை கொடுப்பார்கள் அப்படியே பாட்டிமார்களுக்கு தெரியாமல் தவறனை செலவுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அழுவார்கள் இதுதான் எங்களுக்கு பொன் முட்டையிடும் வாத்து இதை ஒரே போடாக போடாமல் முட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு வரவேண்டும்(கொஞ்சம் கொஞ்சமாக)ஒரு கட்டத்தில் தாத்தாவுக்கு சந்தேகம் வந்து விட்டால்?இடத்தை மாற்றி விடுவார் அதை கண்டு பிடிப்பது ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை..!இப்ப நீங்க மாலை வகுப்புகள்  முடித்து வருகிறீர்கள் தாத்தாவும் குட்டித் தூக்கம் போட்டு பாட்டி குடுத்த ஆட்டுப்பால் கோப்பிய ருசித்துக்கொண்டு இருக்கிரார் இப்ப பாட்டிய தேடாதீங்கோ அவங்க கோப்பிய குடுத்த கையோட பக்கத்து வீட்டு பரமாச்சியோட அரட்டையரங்கத்தில இருக்கா..!

இஞ்சதான் நீங்க கவணமாய் காய் நகர்த்த வேண்டும் பக்கதில் ஏதாவது மறைவில் ஒளித்துக் கொள்ளுங்க தாத்தாவின் கோப்பி பேனி வாயிலே கண்ணு முகட்டிலேயா கவலையே வேண்டாம் புதையலை நெருங்கி விட்டோம் எதற்கும் தவரனைக்கு காசு எடுக்க முகட்டில் கை வைக்கும்போது உறுதிப்படுத்திகொள்க..!இதில ஒரு நல்ல விசயம் என்னவெனில் நாங்கதான் முட்டையை பொறுக்குகிறோம்மென தாத்தாவுக்கு தெரிந்தாலும் அவர் நிலமை  திருடனுக்கு தேள் கொட்டியதுதான்..?

இதில சிறு சிக்கல் என்னவெண்டால் இந்த தாத்தாக்கள் அடுத்த முறை தங்கள் பிள்ளைகள் வரும்போது ரகசியமாய் போட்டு கொடுப்பார்கள் அவர்களும் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாததால ..!டேய் போய் பள்ளிகூட புத்தகத்தை கொண்டுவாடா என்பார்கள் இதுக்கு பிறகுதான் இருக்கு மாப்பிள ஆப்பு கோழி முதல் வந்ததா முட்ட முதல் வந்ததா?? போன்ற அறிவுபூர்வமான கேள்விகள் கேட்டு ஆப்படிப்பார்கள் இங்கு பாட்டிமார் இருந்தால் தப்பித்தோம் இல்லையென்றால் குத்துங்க எசமான் குத்துங்கதான்..!

இதெல்லாம் கானாட்டி நம்ம நண்பன் பக்கத்து கடை பாலு கல்லாபெட்டியில் இருக்கும் போது போய் அஞ்சு ரூபா கொடுத்து இனிப்பு வாங்குங்க அக்கம் பக்கம் பாத்திட்டு அம்பது ரூபா மிச்சம் தருவான் பாதி உங்களுக்கே..!! மீதிய பள்ளிகூடத்தில அவனிட்ட  கொடுத்தா கணக்கு தீர்ந்து போச்சு..!?(நாணயம் முக்கியம்)இதுதாங்க கஸ்டபடாம ஆட்டைய போடுறது??அரசியலில் இதெல்லாம் சகசமப்பு..!

அடுத்து நாங்க போக போற இடம் தம்பி அல்லது தங்கச்சியிடம் மாப்பிளங்களா பொரும பொரும இஞ்சயெல்லாம் ஆட்டய போடாதீங்க.. இவங்க எங்கள் எதிர் கால அன்னங்கள் இவர்களில் வகுப்பு தோழிகளில் ஒருவர் எங்கள் வருங்கால தமயந்தியாகலாம்??ஆகையால் மற்றவர்களிடம் ஆட்டையை போடும் காசில் இவர்களையும் கவனித்து வைத்திருத்தல் அவசியம்..!

அது சரி இதல்லாம் உன் சொந்த அனுபவமான்னா கேக்கிறீங்க..?ஐய்யோ மாப்புங்களா எனக்கு தொண்ட கட்டிப்போச்சு காதும் சரியா கேக்குதில்லீங்க ...!!கருத்துக்களில் போட்டு தாக்குங்க இந்த உடம்பு எவ்வளவோ தாங்கினது இதையும் தாங்கும்?குத்துங்க எசமான் குத்துங்க..!!?