முகப்பு

Friday, 1 July 2011

களவும் கற்று மற....??


பாத்தீங்களா மாப்புங்களா..இதுதானப்பு நான் புதுசா வாங்கின கால இயந்திரம் என்ன யோசிக்கிறீங்க மாட்டு வண்டிய வைச்சிகினு காலன் கீலன்னு ரீலு விடுகிறேன்னு ஆமாயா இது நிசமாவே ஒரு கால இயந்திரம்தானய்யா இப்ப நாம போகப்போறது எனக்குள்ளார குந்தின்னுகிர கிராமத்து பொருதாரமேதை காட்டான் கந்தசாமியை கூட்டிக்கினு வரத்தான்

பொருளாதாரத்தைப் பற்றி இந்த கம்முனாட்டி கதைக்கப்போறான்னாலே எலி மூஞ்சியில சோத்தான் கைய வைக்க போறீங்களே...மாப்புக்களா இது நீங்க நினைக்கிற பொருளாதரமில்லங்க..! வாங்க.. வாங்க ..நேரிலேயே போய்பாப்பம்  குய்ங்.. குய்ங்..அட சக்கரத்த கொஞ்சம் வேகமா சுத்தீட்டன்போல.!

கொய்யா மக்கா உன்மையிலேயே ஏமாந்திட்டிங்களா..!? ஏதோ வந்திட்டிங்க அதுகாச்சும் ஒரு மொக்க பதிவ போடுவம் இந்த காட்டான் எப்பூடி தன் சிறுவயதில் பொருளாதார தேவைகளை தீர்தான் என சொல்லுறான் சிறுவயதில் உனக்கென்னடா பொருளாதார தேவை என்றுதானே கேட்கிறியல்  நீங்க மட்டும் என்ன சிறுவயதில் பல்லிமுட்டஇனிப்பு,புலுட்டோ,தோடம்பழஇனிப்பு, இப்பூடி சாப்பிட்டிருப்பிங்கதானே..!? அட நானும் அதுக்குத்தான் காச எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் செல்வது இத சில பெருசுகள் களவெடுக்கிறனாம்..!!

அட நான் கேட்கிறேன் இத களவெண்டே வைத்துக்கோ நான் காச எடுத்து நாளு நாளாச்சு நல்லா கல்பனுசு,வறுத்த விசுக்கோத்து இப்பூடி சாப்பிட்டத கண்டு பிடிக்க வக்கில்ல உங்களுக்கு ஏதோ சித்தப்பு வாங்கி தந்த சோடா சேட்டுல பட்டுட்டு அதவைச்சு கண்டு பிடிக்கிறீங்களே உங்களுக்கு வெக்கமா இல்ல.!!?எனக்கு அது இல்லையப்பு...இது ஒரு திறம மாட்டாம ஆட்டையைப் போடுவது எப்பூடி அட அப்பூடி மாட்டினாலும் தப்புவது எப்பூடி..? அததான் சொல்லப்போறான் இந்த காட்டான்..

மாப்புங்களா  ஒருத்தரிடமே தொடர்ந்து ஆட்டையை போடாதீர்கள் பின்னர் அவர்கள் எதைத் தொலைத்தாலு முதலாவதாய் வந்து நிற்பது உங்கமுன்னால!?அதன்பின் தொழிலுக்கு தொங்கு திசைதான் ??

முதலில் அம்மாவிடம் இருக்கும் சில்லரைகளை ஆட்டை போடுவதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவைகள் அம்மா வெளியூர் சென்று வந்தாரா..!?ஆமெனில் இதை விட சிறந்த சந்தர்பம் வேறேதுவுமில்லை கடைக்காரர்களும் பஸ் கண்டக்டர்களும் கொடுக்கும் சில்லரைகள் பர்ஸ்சுக்குள் நிறைமாத கர்பிணிபோலிருக்கும்..! இதை அம்மா கணக்கு பார்க முன்னர் ஆட்டையை போட வேண்டும் ஏனெனில் சில்லரைகள் குறைந்தாலும் எங்களை சந்தேகப்படாது கடைக்காரர்களையும் கண்டக்டர்களையும் திட்டித்தீர்பார்..!அப்பொழுது நீங்கள் பால் மணம் மாறா பச்சபுள்ளபோல் மூஞ்சிய வைத்திருத்தல் அவசியம்..!?

அட இவ்வளவு கஸ்ரப்பட்டு எடுத்தாலு சில வேளைகளில் எமது துரோகிகள் காட்டிக் கொடுத்தால்? (அட  வீட்டுக்கதான் இருப்பாங்க வேற எங்கேயுமில்ல..!?)இப்ப அம்மான்னா சுமா இல்லேடாவென பிரப்புடன் வருகிறாவா? அமைதி ஓடாதே ஓடினால் அண்ணனோ அக்காவோ பிடித்து கொடுப்பார்கள் அதன் பின்னர் வரும் பூசை பலமானதாய்விடும் சாத்தியம் அதிகம் இப்ப நீ செய்யவேண்டியது இதுதான் பிரம்புடன் சேர்த்து அம்மாவை இறுக்க அனைத்துக்கொள்ளுங்கள் ராசா என்னை விட்டுடு என்று சொல்லும் வரை இப்போது வலது காலை மெதுவாக பின்நகர்த்துங்கள் விடு யுட் ஆனாலும் ஒரு அடி பலமானதாய் முதுகில் விழும் அரசியல்ல இதல்லாம் சகசமப்பு...!

அடுத்து நாம ஆட்டையை போடப்போவது அக்காவிடம் அக்காக்கள் இல்லாதவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதபங்கள் அக்காக்கள் இன்னுமொரு அம்மாக்களே...!?அதற்காக ஆட்டையை போடாதீர்கள் என்று சொல்லவரவில்லை அம்மாவிடமே ஆட்டையை போடும் நாங்க அக்காவிடம் ஆட்டையை போடாவிட்டால் எங்க பாசத்த நிறுபிக்க முடியாது..?இவ் விசயத்தில் நீங்கள் மிக மிக அவதானமாக இருத்தல் அவசியம்..? சரி அக்காவிடம்தானே பர்ஸ் இல்லையே புதையல் எங்கிருக்கும்?அட அனுபவசாலிகளுக்கு இதெல்லாம் ஒரு யுபி யுபி அட அந்த புதயலே அக்காவின் கொம்பாஸ்தான் என்ன என்ன மாப்புங்களா உடனே கொம்பாசை நோக்கி ஓடுகிறீங்க...!?பொரும பொரும கொம்பாச திறக்கமுன் கவனிக்க வேண்டியது அது எந்த திசையில் இருந்தது திறந்தவுடன் மயிலிறகு எப்படி இருந்தது ஆக்கு,ரப்பர் போன்றவை எங்கிருந்தது போன்றவை அவசியம் இதில் ஒரு பொருளை இடம் மாற்றி வைத்தால்..?சங்குதான் சிங்கங்களே..

அடுத்து நாம போற இடம் பாட்டிமார் ஆரம்பத்திலேயே சொல்கிறேன் இவர்களிடம் ஆட்டையை போடுவது சிரமமே..!இவரிடமிருக்கும் புதயல் உள்ளங்கை நெல்லிக்கனி வேற எங்க இருக்கும்? முந்தானை முடிச்சிலதான் ஆனால் இவர்களுக்கு நாம அடிக்கடி தேவைப்படுவோம் கடை தெருக்களுக்கு சென்று வர.. அப்போது வெற்றிலை,பாக்கின் விலையில் விளையாடலாம் விதவிதமாக..!?அத்தோடு கோவில் திருவிழாக்களில் பக்தி மயமாக பாட்டியுடன் கோவிலை சுத்திவந்தால் சுண்டலுடன் முந்தானை முடிச்சும் உங்களுக்கே..!!

அடுத்து நாம போறது தாத்தாமார்கள் எனக்கு தெரிந்து இவர்களிடம்தான் ஆட்டையை போடுவது சுலபம்..? மாமாக்கள்,சித்தப்புக்கள் மாதாமாதம் பாட்டிமார்க்ளுக்கு கைச்செலவுக்கு காசை கொடுப்பார்கள் அப்படியே பாட்டிமார்களுக்கு தெரியாமல் தவறனை செலவுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அழுவார்கள் இதுதான் எங்களுக்கு பொன் முட்டையிடும் வாத்து இதை ஒரே போடாக போடாமல் முட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு வரவேண்டும்(கொஞ்சம் கொஞ்சமாக)ஒரு கட்டத்தில் தாத்தாவுக்கு சந்தேகம் வந்து விட்டால்?இடத்தை மாற்றி விடுவார் அதை கண்டு பிடிப்பது ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை..!இப்ப நீங்க மாலை வகுப்புகள்  முடித்து வருகிறீர்கள் தாத்தாவும் குட்டித் தூக்கம் போட்டு பாட்டி குடுத்த ஆட்டுப்பால் கோப்பிய ருசித்துக்கொண்டு இருக்கிரார் இப்ப பாட்டிய தேடாதீங்கோ அவங்க கோப்பிய குடுத்த கையோட பக்கத்து வீட்டு பரமாச்சியோட அரட்டையரங்கத்தில இருக்கா..!

இஞ்சதான் நீங்க கவணமாய் காய் நகர்த்த வேண்டும் பக்கதில் ஏதாவது மறைவில் ஒளித்துக் கொள்ளுங்க தாத்தாவின் கோப்பி பேனி வாயிலே கண்ணு முகட்டிலேயா கவலையே வேண்டாம் புதையலை நெருங்கி விட்டோம் எதற்கும் தவரனைக்கு காசு எடுக்க முகட்டில் கை வைக்கும்போது உறுதிப்படுத்திகொள்க..!இதில ஒரு நல்ல விசயம் என்னவெனில் நாங்கதான் முட்டையை பொறுக்குகிறோம்மென தாத்தாவுக்கு தெரிந்தாலும் அவர் நிலமை  திருடனுக்கு தேள் கொட்டியதுதான்..?

இதில சிறு சிக்கல் என்னவெண்டால் இந்த தாத்தாக்கள் அடுத்த முறை தங்கள் பிள்ளைகள் வரும்போது ரகசியமாய் போட்டு கொடுப்பார்கள் அவர்களும் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாததால ..!டேய் போய் பள்ளிகூட புத்தகத்தை கொண்டுவாடா என்பார்கள் இதுக்கு பிறகுதான் இருக்கு மாப்பிள ஆப்பு கோழி முதல் வந்ததா முட்ட முதல் வந்ததா?? போன்ற அறிவுபூர்வமான கேள்விகள் கேட்டு ஆப்படிப்பார்கள் இங்கு பாட்டிமார் இருந்தால் தப்பித்தோம் இல்லையென்றால் குத்துங்க எசமான் குத்துங்கதான்..!

இதெல்லாம் கானாட்டி நம்ம நண்பன் பக்கத்து கடை பாலு கல்லாபெட்டியில் இருக்கும் போது போய் அஞ்சு ரூபா கொடுத்து இனிப்பு வாங்குங்க அக்கம் பக்கம் பாத்திட்டு அம்பது ரூபா மிச்சம் தருவான் பாதி உங்களுக்கே..!! மீதிய பள்ளிகூடத்தில அவனிட்ட  கொடுத்தா கணக்கு தீர்ந்து போச்சு..!?(நாணயம் முக்கியம்)இதுதாங்க கஸ்டபடாம ஆட்டைய போடுறது??அரசியலில் இதெல்லாம் சகசமப்பு..!

அடுத்து நாங்க போக போற இடம் தம்பி அல்லது தங்கச்சியிடம் மாப்பிளங்களா பொரும பொரும இஞ்சயெல்லாம் ஆட்டய போடாதீங்க.. இவங்க எங்கள் எதிர் கால அன்னங்கள் இவர்களில் வகுப்பு தோழிகளில் ஒருவர் எங்கள் வருங்கால தமயந்தியாகலாம்??ஆகையால் மற்றவர்களிடம் ஆட்டையை போடும் காசில் இவர்களையும் கவனித்து வைத்திருத்தல் அவசியம்..!

அது சரி இதல்லாம் உன் சொந்த அனுபவமான்னா கேக்கிறீங்க..?ஐய்யோ மாப்புங்களா எனக்கு தொண்ட கட்டிப்போச்சு காதும் சரியா கேக்குதில்லீங்க ...!!கருத்துக்களில் போட்டு தாக்குங்க இந்த உடம்பு எவ்வளவோ தாங்கினது இதையும் தாங்கும்?குத்துங்க எசமான் குத்துங்க..!!?

Wednesday, 22 June 2011

சீமானுடன் ஒரு சந்திப்பு..!!

வாங்க பங்காளி  வாங்க..! இப்படி ஒரு தலையங்கம் போட்டுத்தான் உங்களை என்னுடைய வலைப்பதிவுக்க..!வரவைக்கவேண்டியிருக்குது..!?இல்லாட்டி ஏதோ பரம்பரை பகையாளியை கண்டவன் மாதிரி பம்முறிங்களே பங்காளிங்க..

எனது ஈழத்து வாழ்கை முழுவதையும் கிராமத்திலேயே கழித்த
எனக்கு பாரீஸ் வந்த ஆரம்ப காலங்களில்  தவிர்கமுடியாத காரணங்களால் அதிக நெருக்கடி மிக்க இடத்தில் வாழவேண்டி இருந்த அந்த நாட்களை நினைக்கும்போது..! ஐய்யோ  வேனாம் விட்டிடுங்க...!

ஆனாலும் இப்பொழுது  எனது வேலை தலம் அமைந்திருப்பது 14ம் luis மன்னனின் வெர்சை கோட்டைக்கு அருகில் அழகிய காட்டு பகுதியில்..  காட்டுக்கு மத்தியில் மூன்று சிறிய குளங்கள் மான்,முயல் போன்ற சிறிய சாது மிருகங்களும் இருக்கின்றன வேலை நேரங்களில் போக்குவரத்து இடர்பாடு ஏற்பட்டால் (கோடை காலங்களில்)இக்குளக்கரையில் அமர்ந்து பத்திரிக்கைகள் பார்பது அல்லது கணணியில் மேய்வது என பொழுதை கழிப்பேன்..!

 இங்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதத்தின் மத்தியில் வரும் சனி ஞாயிற்று கிழமைகளில் தண்ணீர் திருவிழா (உண்மையானh20!!)நடத்துவார்கள் இது ஒரு சிறுவர்களிற்காண நிகழ்சி..!?கடந்த 10வருடங்களாக இவ்விழாவிற்கு வந்து (நானும் சின்னப்புள்ளதானுங்கோ..!!?)செல்கிறேன். இப்போது இப்படியான விழாக்களிக்கு முன்னர் போல் அதிகமானவர்கள் பங்கு பெறுவதில்லை.. கணணியுகத்தில் எல்லோரும்  வீட்டிக்குள் முடங்குகிறார்கள் இன்னும் சில ஆண்டுகளின் பின்னர் இப்படியான விழாக்கள் காணாமல் போகலாம்..!? இவ்வாண்டு கென்னிய நடனக்குழுவை ஏற்பாடு செய்திருந்தார்கள் ..

எனக்கோர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது பிரான்ஸ் வந்த ஆரம்ப காலங்களில் என்னுடன் நட்பு பாராட்டிய சைமனை(தமிழில் சீமான்..!??)சந்தித்தேன் சைமன்   ஒரு சுவாரசியமான மனிதர் வாழ்கையின் போக்கை அதன் வழியே செல்லவிட்டு தான் அதன் பின்னே பறக்கும் ஒரு சுதந்திர பறவை..!

சைமன் மதங்களை பின் பற்றாத ஒரு யூதர் இவர் பிறந்தது மொரோக்கோ நாட்டின் காசபுலோங்கா நகரத்தில் இவருக்கு பதினொரு சகோதர சகோதரிகள்.(எனக்கு ஒரு சகோதரனை மட்டுமே தெரியும்)ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட பிரான்சுக்கெதிரான போராட்டத்தினால் தனது ஐந்து வயதிலேயே பிரான்ஸ்க்கு குடிபெயர்ந்து விட்டார்..!ஆரப்ப நாட்களில் எனக்கு சைமனை ஒரு தொழிலதிபராகவும்(பத்திற்கு மேற்பட்டோர் இவரி தளபாட பட்டறையி வேலை செய்தார்கள்) நல்ல மனிதராகவும்..!? தெரியும்..அன் நாட்களில் லைலா என்ற பெயருடைய அரேபிய பெண்னுடன் வாழ்ந்தார் திருமண ஒப்பந்தமின்றி..?(இருவருக்குமிடையி இருபது வயது வித்தியாசம் அது மட்டுமன்றி இவரின் குடுப்பத்திலும் குழப்பம் இதனால் ...?)

சீன பொருட்களின் இறக்குமதியும் பெரும் பல்பொருள் அங்காடிகளின் வரவும் சைமன் போன்ற சிறு தொழிலதிபர்களை நடுத் தெருவில் விட்டு  விட்டது..!? சைமன்  மட்டுமா? இவரை சார்ந்திருந்த பத்துக் குடும்பங்களையும் சேர்தே !!!?? (இப்படி எத்தனை சைமன்களோ?)இப்பொழுது சைமன் ஒர் கூலித்தொழிலாலி கையில் காசை வைத்திருக்கமாட்டார் அதைப்பற்றி கேட்டால் நாளை நான் இருப்பேனா தெரியாது ஆனால் எனது மனதுக்குள் ஒரு வைராக்கியம் இருக்கிறது இந்த உலகிற்கு எந்த ஒரு சல்லிக்காசையும் விட்டுச் செல்லமாட்டேன்.!!(சமூகத்தின் மேல் கோபம்!!??)

பேச்சு குடும்ப வாழ்கை பற்றி திருப்பியது மிசல்(எனது பெயரை இங்குள்ளவர்கள் உச்சரிக்க சிரமப்படுவதால் எனக்கு நானே இட்ட பெயர்)உனக்கு எத்தனை பிள்ளைகள்?எனக்கு இரண்டு பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டே கைதொலைபேசியில் உள்ள பிள்ளைகளின் புகைபடத்தை காட்டினேன் சிரித்துக்கொண்டே கூறினார் மிசல் நான் ஏன் பிள்ளைகளைப் பெறவில்லையென்று தெரியுமா.!?இப்ப உன்னை போன்ற ஒருவர்
செலவலிப்பது நான்கு பெயருக்கு போகிறது ஆனால் நான் செலவலிப்பது எனக்கு மட்டுமேயென்றான் சிரித்துக்கொண்டே..
இத்துடன் நகைசுவையாக கூறினார்..!!எனக்கு பிள்ளைகள்  பிறந்தால் அனாதையில்லதில் விட்டு விட்டு பதினெட்டு வயது வந்தவுடன் மகனே! நாந்தாண்டா உன் அப்பன் என்று கூறி வீட்டிற்கு அழைத்து வந்து வேலைக்கனுப்புவேன் அப்பணத்தில் மிஞ்சிய வாழ்க்கையை  ஓட்டுவேன் என்கிறார்...!சிரித்துக்கொண்டே..!

நீண்ட அமைதியின் பின்பு சைமனே தொடங்குகிறார்..மிசல் உனக்கு தெரியாததல்ல இப்போதைய எனது நிலையில் திருமண பந்தத்தை நினைத்து பார்க்க முடியாது எனது எஞ்சிய காலத்தை இப்படியே கழிக்கப் போகிறேன்..ஏனெனில் எனது நட்பு வட்டாரத்தையும்  சொந்தங்களையும் பார்க்கிறேன் அதிகமானவர்கள் விவாகரத்து மீண்டும் திருமணபந்தம் இப்படி போகிறது அவர்கள் வாழ்க்கை இதில் எனக்கு இஸ்டமில்லை...

மாறிவரும் உலகம் வெற்றி பெற்றவர்களையே கணற்கில்  கொள்கிறது..?இவ்வுலகத்திற்கு சைமன் போன்ற சிறுதொழிலதிபர்கள் தேவை என்பதை கணற்கிட மறுக்கிறது உலகத்தில் உள்ள தொழிலாலர்களில் 70%மானவர்கள் சிறுதொழிலை நம்பியே வாழ்கிறார்கள்...சிறுதொழில் நலிவடைவது  உலகம் நலிவதற்குச் சமம்...??

Thursday, 16 June 2011

ஏதோ சொல்லுறேங்க..

அணு...!இந்த வார்த்தையை  இதன் செயல்பாட்டை..பள்ளியில்
வாத்தியார்(விஞ்ஞான பாட நேரம் முகட்டிலிருக்கும் மூஞ்சுருக்களைதானே பார்த்துக்கொண்டிருந்தோம்..!?) தலையால் தண்ணி குடித்து
சொல்லித்தந்தாலும் என் போன்ற மரமண்டைகளுக்கு புரியவே புரியாது..!

மார்ச்11க்கு  பின் இப்பொழுதெல்லாம் உலகம் முழுவதும்
அணுவுலைகலைப்பற்றி பேசாதவர்களே இல்லையெனலாம்.. ஜப்பானின் புக்கிசுமா
சம்பவம் உலக அணுவுலைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.!?

தலையிடியும்..காய்ச்சலும் தனக்கு  தனக்கு வந்தால்தான் தெரியுமென்பதுபோல்..!
இப்பத்தான் நானும் முளிச்சுப்பாக்கிறேன்
பிரான்சில் 90%க்கு மேல் அணு மின்சாரம்தானாம்( இலங்கையில் இருக்கும் போதுBBCதமிழ் ஒலி கேட்பதற்காக இரவு
9மணியிலிருந்து 10மணிவரை சைக்கிளை  சுத்திச் சுத்தி நாங்களும் மின்சாரம் தயாரிச்சிருக்கோம்க..!)


ஆற்காட்டாரால் ஆட்சியே போயுள்ள இந்தக்காலத்திலும்கூட..? அணுமின்சாரம் அவசியம்தானா? மிக வளர்சியடைந்த யப்பானாலேயே அணுக்கதிர் வீச்சை கட்டுப்படுத்த முடியாது கையை பிசைந்து
நிற்கும் இன்நேரத்தில் இந்தியாவில் மின்சாரத்திற்காக அதிக அணுவுலைகலை
உருவாக்க திட்டமிடுகிறார்கள்..!?

பிரான்சில் இப்பொழுது அணுவுலைகளைப் பற்றி அனைத்துக்கட்சிகளிடமும்  கருத்து
வேறுபாடுகள்.! பசுமைக்கட்சியைத் தவிர.?மற்றவர்கள் மதில் மேல்
பூனைகளே...ஏனெனில் உலகத்தில் அதிக அணுவுலைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பிரான்சின் அரேவா நிறுவனமும் ஒன்று.

இதற்காகத்தான் நம்ம சித்தப்பு சார்கோசி
அடிக்கடி இந்தியாவுக்கு வந்து சர்தாஜித்
தாத்தாவை சந்திச்சு பல ஒப்பந்தங்களை
போட்டுக்கொண்டு வாரார்? ஆனாலும் ஜரோப்பாவில் அணுவுலைகளுக்கு பரவலான எதிர்பு வளர்ந்து வருகிறது.!?

நான் பிரான்ஸ் வந்த ஆரம்ப நாட்களில்
இல்லாத ஒரு மாற்றத்தை கடந்த 5வருடங்களாக உணர்கிறேன்..! அது என்னவெனில் கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில்
உள்ள வீடுகளின் கூரைகளில் மின்சார உற்பத்தி பலகைகலையும் வயல் வெளிகளில் காற்றாலைகலையும் காணக்கூடியதாய் இருக்கிறது.. அத்துடன்
வாகன தரிப்பிட  இயந்திரங்கள் இயங்குவது சூரிய ஒளியிலேயே(இந்த குளிர்நாட்டிலேயே..!?)

இவை மட்டுமா? 14/06/2011இல் பெல்ஜியத்தின் தலை நகர் புருக்சலில் இருந்து solarimpulse என்று பெயரிடப்பட்ட சூரிய ஒளி விமானம் பாரிஸ் வந்தடைந்தது.! பாருங்கோப்பு சூரிய ஒளியில் விமானமே ஓட்ட முடியும்போது..(என்ன விமானத்தை காரின் வேகத்திற்கு  இனையாக ஓட்டினார்கள்...!?)
வீட்டுத்தேவைக்கு மின்சாரம் தயாரிக்க முடியாதா மக்கா..?

13/06/20011இல் இத்தாலியில் எடுக்கப்பட்ட
வாக்கெடுப்பில் சில்வியோ பெர்லஸ்கோனி(என்ன கன்றாவிப் பெயரோ..?)அரசின் அணுக்கொள்கையை
எதிர்த்து 95%மான மக்கள் வாக்களித்துள்ளார்கள்(இவருடைய பாலான செயல்பாட்டிற்கும் சேர்த்து குத்தோ குத்தென்று குத்தி விட்டார்கள் வாக்கால்)

இவ்விடயத்தில் சிறந்த செயல்பாடுகளை
யேர்மனியின் அஞ்சேலா மேர்கல் அரசு செயல்படுத்துகிறது 2022க்குள்
அனைத்து அணுவுலைகளையும் மூடவுள்ளது
அதனால்தான் ஜரோப்பாவில் பாச்சா பலிக்காதெண்டு சித்தப்பு இந்தியாவோடு
குழையிரார் இன்னும் இளிச்சவாயர்கள்
இருக்கிறார்களா  என்றுவேறு தேடுகிறார்..!?

இவ்விடயத்தில் இத்தாலியம்மா தன்னுடைய தாய்நாட்டு
மக்களின் முடிவை நினைத்தாவுதல் சித்தப்பு போன்றோரிடம் கவனமாக இருக்கலாம் (இஞ்ச ஆட்டோ வாராதென்று
நினைக்கிறேன்.!) இந்தியாவிற்கு சிறப்பான
மாற்று வழி சூரிய மின்சக்தியும் காற்றாலைகலுமே..!?

இந்திய குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் காற்றாலைக் கருவிகலால் ஜரோப்பாவில் ஏற்கனவே மின்சாரம் தயாரிக்க தொடங்கிவிட்டார்கள்..!(எல்லாவற்றையும் கண்டு பிடித்து கொடுப்போம் ஆனால் அதை அனுபவிக்க மாட்டோம்?)

நான் நினைக்கிறேன் ஊரான் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளருமெண்டதை தவறாக விளங்கி விட்டார்களோ!? இதில வேற கனவுகானு..கனவுகானு..! 2020இல் நாமதான் வல்லரசு(இதுக்கு விளக்கமென்னப்பு.?) என்று கூவிக்கொண்டு திரியுரவர் நாங்க யுரேனியத்த பாவிக்கேலமக்கா... தோரியத்ததான் தோண்டுறம்ன்கிறார் கொக்கமக்கா தோரியம் வெடிச்சான்னா...!?
மனிதன்,மிருகம்ன்னு பிரிச்சு மேயுமோ.!?

தலையை சுத்தி மூக்க தொடாம விசயத்திற்கு வாரன் கொக்க மக்கா இந்தியாவில 365 நாளும் சூரிய ஒளி இருக்கு மக்கா  நன்றாக வீசக்கூடிய ..?
தென்மேற்கு பருவக்காற்று  இருக்கு மக்கா
இதுவும் காணாதென்னா மூன்று பக்கமும்
கட(ன்)ல் இருக்கு மக்கா (விழுந்தும் சாகலாம்,அலைகலை வைத்து மின்சாரமும்
செய்யலாம்) ஆனால் அரசியல் வாதிகளுக்கு தொலை நோக்கு பார்வைகள்..!இல்லை.? (உ+ம்  கலைஞர் போல் நீண்ட கால திட்டமிடல் ..!?இல்லை பின்ன என்ன மக்கா இலவச
தொலைக்காட்சியை கொடுத்த கையோடு கலைஞர் TVயை திறப்பது, கட்சிக்கு வருங்கால தலைவர் பதவிக்கு அண்ணன் தம்பிகளை மோத விடுவது யார் வென்றாலும் குடும்பத்துக்குள்ளாரதான் கட்சி ...!?)

அட நம்ம ராஜபக்ச ஐய்யாவே யப்பான்  மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் (இதவிட்டா வேற இடம் தெரியாது..!?)1237 மெகாவற் சக்தி கொண்ட சூரியசக்தி மின்நிலையம் ஒன்று அமைக்கப்படள்ளதாக 2010டிசம்பரில் அறிவித்திருந்தார்(இப்ப மாத்தையா யப்பானுக்கு உதவி செய்கிறார்..!!??)

எதுவாக இருந்தாலு ஜெயலலிதாம்மா கொண்டு வந்த மழை  நீர் சேகரிப்பு (இப்ப என்ன நிலை..!?சமசீர் கல்விக்கு ஆத்தா அடிச்ச ஆப்பு போல் மழை நீர் சேகரிப்புக்கு தாத்தா ஆப்படித்தாரா..!?) திட்டம் போல் புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்திலும் சூரிய ஒளி சேகரிப்பு பலகைகள் அமைக்க உத்தரவிடவேண்டும்.
அதுவரை அம்மா சொல்வதுபோல் குஜராத்தில இருந்து கொண்டுவாராக, மத்தியதொகுப்பில் இருந்து கொண்டுவாராங்க என்று சொல்வதை கேட்போம் காதுகள் எதற்கு இருக்கின்றன..?