முகப்பு

Sunday 27 November 2011

மூன்று தகவல்கள் ...

வணக்கம்..!!

டிஸ்கி- எல்லாரும் டிஸ்கியை கடைசியாக தான் எழுதுவாங்க. ஆனா நான் பதிவு எழுதணும் எண்டு எழுதல, என்ர மாப்பிள எழுதுற சங்கிலியன் தொடர் பிடிச்சிருக்கு.. இது கட்டாயம் அதிகமான பேரை சென்றடையவேண்டும் என்ற காரணத்தால அது பற்றி என் வலைத்தளத்திலே அறிமுகத்துடன்; என்ர மூஞ்சி புத்தகத்தில் போட்ட இரு தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த தொடர் உண்மையிலே நாம தெரிஞ்சுக்க வேண்டியது. யாரும் தவறவிடாதேங்கோ. 


நான் பார்த்தவரை இலங்கை இந்தியா போன்ற கீழத்தேய நாடுகளில்தான் பெண் அதிபர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அல்லது இருந்திருக்கிறார்கள்...!!??


இன்னும் குறிப்பாய் வல்லரசுகள் என்னும் வீட்டோ அதிகார நாடுகளில் அதிபர்கள் அனைவருமே ஆண்கள்.. பிரான்சில் அதிபர் தேர்தலில் (அங்கேலா மேர்கர் அம்மையார் போன்றோர் விதி விலக்கு..).போட்டியிடும் பிரதான இரண்டு வேட்பாளர்களும் ஆண்களே...! ஆகையால் இன்னும் ஐந்து வருடம் இங்கும் பெண் அதிபர்கள் வரமாட்டார்கள்...!!!

ஐயா நான் காட்டானுங்க.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..?

 மேலை நாட்டுக்காரர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறார்கள் என்றாலும் அதி முக்கிய பதவிகள் ஆண்களுக்கே ஒதுக்குகிறார்கள்..!! 

ஆனால் கீழத்தேய நாட்டில் பெண்களுக்கு சம உரிமை இல்லை.. ஆனால் பெரிய பதவிகளில் பெண்கள் அலங்கரிக்கிறார்கள். உலகத்தின் முதல் பிரதமர் சிறீமாவோ தொடக்கம் முதலாவது இஸ்லாமிய பிரதமர் பெனாஷிர் பூட்டோ வரை பட்டியல் நீளம்

ஐயா..! 
எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிபர்களாக இல்லாததுதான் காரணமா


டிஸ்கி:- நான் பெண்களின் எதிரி இல்லைங்கோ!!!))) 

-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊரில் ஆச்சி அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை தை பிறந்தால் வழி பிறக்கும் என்று.??!!

இதை நான் பல இடங்களில் வெவ்வேறு அர்த்தத்தில் பேசுவதை கேள்விப்பட்டிருக்கிறேன்..

1 :-தை பிறந்தால் விவசாயிகள் அறுவடை முடித்து தானியங்களை விற்பனை செய்து வரும் வருமானத்தில் சந்தோஷமாய் நற் காரியங்கள் செய்வார்கள்.(திருமணங்கள் கூடுதலாக தை மாதத்தில்தான் செய்கிறார்கள்..!!! அப்போதுதான் ஆடி மாதத்தில் மாசமான பெண்னை பிரித்து வைக்கலாம்.. ஹி ஹி ஹி!!)

2:-இப்படியும் சொல்கிறார்கள் அந்த காலத்தில ஒவ்வோர் ஊருக்கும் இடையில் இப்ப இருப்பது போல் சாலை வசதி இல்லை.. விவசாய நிலங்களாலும் நீராலும் சூழப்பட்ட கிராமத்தில் மாரி காலத்தில் பாதை அடைபட்டு போகின்றது. 

தை மாதத்தில் நீரும் வற்றி அறுவடையும் முடியும்போது பாதை அதாவது வழி தெரிகின்றது.. ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் சொல்கிறார்கள்...!!!!!!))) 

எது சரி? இக்காலத்திலும் இந்த பழமொழி எமக்கு சரி வருமா..? தை பிறந்தால் இப்போ இருக்கும் விவசாயிகளும் முன்னைப்போல் சந்தோஷமாய் இருக்கிறார்களா..? 

Saturday 5 November 2011

சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?

வணக்கமுங்க!
இப்ப கொஞ்ச நாளா நான் என்ர வீட்டுக்கு பின்னால இருக்கிற  'பொட்டால' தான் வீட்டுக்குள்ள போய்வாறன். ஏன்னா படலையில ஒருத்தன் மண்ணெண்னை டின்னோட நிண்டுகொண்டு என்னை வெருட்டுறான்; என்ர பொட்டைய தனக்கு கட்டிவைன்னு.  அட இவன் தீ குளிக்கப்போறேன்னு சொன்னானோ இல்ல 'என்ர மாமனோட' சேர்ந்து டீ குடிக்கப்போறேன்னு சொன்னானோன்னு ஒரு சந்தேகமுங்கோ!

அட! இவண்ட வெருட்டுக்கு நான் பயந்து என்ர பொட்டைய கட்டி வைச்சேன்னா எனக்கு உலகம் பூரா இருக்கிற மருமோன்களோட பிரச்சனையா போகும். இஞ்ச பக்கத்தில இருக்கிற அப்பாவி மூஞ்சிக்காரனுக்கே இப்பிடி எண்ணம் வருகுதென்னா மற்றவங்களை நினைச்சுப்பார்த்தா நடுக்கம்தான் வருகுது..

ஆனா எனக்கு ஒரு விஷயம் இன்னும் விளங்கலேங்கோ; யாற்ற கண்ணுலேயும் படாம பொத்தி பொத்தி வளர்த்த என்ர பொட்டைய இவனுங்க என்னன்னு கண்டுபிடிக்கிறாங்கண்னு எனக்கு விளங்கல.. அதுவும் சரிதானே ஊர் உலகத்தில இல்லாத அழகி என்ர பொட்ட, அப்படிப்பட்டவள இவனுங்க கண்ணுபடாம நான் வளர்க்கிறதுக்கு படுற பாடு இருக்கே..! அப்பப்பா.. சொல்லி மாளாது..!!
                                                      (என்ர பொண்ணு அழகுக்கு இவ எம்மாத்திரமுங்க! )
நானும் என்னடா எல்லாரும் வேலாயுதம் படம்பார்க்க இப்படி அடிச்சுப்பிடிச்சு ஓடுறாங்களேன்னு பார்த்தன். அட! அவங்க அங்க ஹன்சிகான்னு ஒருத்திக்காகதான் இந்த ஓட்டம் ஓடுறாங்கன்னு பின்னதான் தெரிஞ்சுது. அவங்களுக்கே இப்படி ஓடுற என்ர மருமோன்கள், அவள விட நூறு மடங்கு வடிவான என்ர பொட்டைய கண்டுட்டுத்தான் மாமா மாமான்னு இப்ப என்பின்னாடி நிக்கிறாங்க...

எப்பிடியோ என்ர கிளிய வளர்த்து இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும். இதில எந்த பூனை நல்ல பூனைன்னு என்னால கண்டுபிடிக்க முடியாம இருக்குங்கோ! பிரான்சில இருக்கிற என்ர மண்ணெண்ணை டின் மருமோனுக்கு கட்டி வைக்கலாம்தான்; அப்படி செய்தா என்ன இந்த வெருட்டு வெருட்டினவன் என்னை கண்டா பெட்டிப்பாம்பா இருக்கிறதுக்கு நான் என்ர பொட்டைய கொண்டு "ஆவன"செய்யலாம்.  ஆனா, காட்டான் நாக்கு தவறினாலும் வாக்கு தவறமாட்டான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு இருக்குங்கோ. ஒருத்தனுக்கு வாக்க கொடுத்திட்டு மற்றவங்கள நான் ஏமாத்த விரும்பல..!

அதுதான், நேற்று இதே யோசனையா இருந்ததில நித்திரை வரல்ல. அப்பத்தான் என்ர மணியண்ண டெலிபோன் எடுத்து "காட்டான் நீ உன்ர கிளிக்குஞ்ச பத்தியோ, உந்த மருமோன்கள பத்தியோ யோசிச்சு மண்டைய உடைக்காத. கொஞ்சம் "பூசிமெழுகி" நித்திரைய கொள்ளடா நாளைக்கு நான் வந்து கதைக்கிறேன்" எண்டார்.. ஹி ஹி ஹி அதுதான் நேற்று கொஞ்சம் கூடுதலாவே "பூசீ"ற்றன் போல! என்ர அப்புச்சி கனவில, சிவலயன கையில பிடிச்சுக்கொண்டு நிக்கிறார். "டேய் காட்டான்! இதுக்கேண்டா தலைய போட்டு உடைக்கிறாய்? எங்கட குடும்பத்துக்கும் உன்ர பொட்டைக்கும் தோதான மாப்பிளைய சிவலயன வைச்சு பிடியடா! இல்லாட்டி வெத்தில போடவைச்சு பிடியடா" எண்டுட்டு போட்டார்.. ஹி ஹி அதொன்னுமில்லைங்கோ யார் என்ர சிவலயன அடக்குறாங்களோ அவனுக்குதான் என்ர பொட்ட.. அடுத்து வெத்தில வைச்சு பிடிக்கிறது ஒண்டும் சிக்கல் இல்லிங்கோ! அந்த முறை என்ர அப்புச்சி அடிக்கடி செய்யுறதுதாங்கோ.
                                                                             (மாப்பிளைங்களா ரெடியா)
யாராவது அப்புச்சியிட்ட கடன் வாங்க வந்தால் என்ர அப்புச்சி முதல்ல அவனுக்கு வெத்தில குடுத்துட்டுதான் பேச்ச ஆரம்பிப்பார். வெத்திலய வாங்கினவன் முழு வெத்திலையையும் வாங்கி போட்டான்னா அப்புச்சி காசு கொடுக்கமாட்டார். ஏன்னா, அவனிட்ட கொடுத்த காசு திரும்பி வராதாம்..! கொஞ்சமா எடுத்து போடுறவனுக்குதான் கடன் கொடுப்பார்; அவனுக்குதான் காசின் அருமை தெரியுமாம்.. அதைப்போல யாராவது உழவுக்கு சிவலயன கேட்டு வந்தா முதல்ல 'அடியே சின்னபொட்ட(ஹி ஹி ஆச்சி பேரு) ராசையனுக்கு வெத்தில பெட்டிய கொடடி'ன்னுவார். வந்தவர் வெத்தில போடலைன்னு வைச்சுக்கோங்க அவருக்கு கட்டாயம் சிவலயன கொடுக்கமாட்டார்! ஏன்னா வெத்தில போடுறவன் மாட்ட உழுதுகொண்டு இருக்கேக்க  இடையில இளைப்பாற விட்டுட்டு வரப்பில வேலை செய்யுற பெண்டுகளோட வெத்திலைய போட்டு கொஞ்சம் "அறப்படிச்சிட்டு" தானுங்க திரும்பி வருவான்! அந்த இடைப்பட்ட நேரத்தில மாடுகளும் கொஞ்சம் ஓய்வு எடுத்திடும். இப்ப வேலையில இருக்கிற பொடியங்க 'வெள்ளசுருட்டு' பத்த வெளியில போறாங்களே அதப்போல.. 

 என்ர சிவலயன அடக்கிறவனுக்குத்தான் நான் என்ர பொட்டைய கட்டிக்குடுக்குறதுன்னு முடிவெடுத்தா போதாது; இஞ்ச இருக்கிற நகர சபையில நான் அனுமதி வாங்கோனுமாம்!  நம்ம நாட்டிலன்னா மேசைக்கு கீழால தள்ளியாவது அனுமதி வாங்கலாம். இவனுங்க தானும் செய்யான், மற்றவங்களையும் விடான்னு நிக்கிறவங்க! அதுதான்  நேரடியாவே போய் கேட்டேன் அவங்களிட்ட..  'ரெம்ப சந்தோஷமா வைச்சுக்கோங்க, இஞ்ச பிரெஞ்சுக்காரங்களுக்கும் அது ஒரு புது அனுபவமா இருக்குமென்னாங்க. ஆனா அதுக்கு எல்லா ஒழுங்கும் செய்து அனுமதி வாங்க உன்ர மருமோன்களோட படத்தோட சிவலயனின் படத்தையும் வைச்சு அனுப்புங்கோ நான் அனுமதி வாங்கித்தாரன்'னு அந்த பிள்ளை சொன்னத நம்பி வீட்டுக்கு வந்தா, ரெண்டு நாள் கழிச்சு அந்த பிள்ள டெலிபோனில மிசு(mr) காட்டான் ஒருக்கா நேரில வாங்கோ கதைப்பமெண்டாள்.  அங்க போனா என்ர தலையில இடிய போடுறாள்; மிசு காட்டான் உன்ர சிவலயனைப்பற்றி எங்களுக்கு ஒண்டும் ஆட்சேபனையில்ல. ஆனா, நீங்க தந்த உங்க மருமோன்களோட படத்த பாத்திட்டு அனுமதி தர முடியாதுன்னுட்டாங்களாம்!  ஏன்னா இதுவரை எங்களுக்கு மிருக வதைச்சட்டத்ததான் தெரியும். உன்ர சிவலயனால எங்க நாட்டில மிருகங்களால மனித வதைச்சட்டம் போடனும்போலன்னு சொல்லுறாள். பின்ன நான் குடுத்த போட்டோக்களில எல்லாம் இப்படி நோஞ்சாங்களா நின்னா யார்தான் அனுமதி தருவாங்க...!


அட ஏற்கனவே இதையெல்லாம் கேள்விப்பட்டு கதிகலங்கிப்போய் இருந்த என்ர மருமோன்களுக்கு ரெம்ப சந்தோஷமாய் போச்சு; என்ர சிவலயனிட்ட இருந்து தப்பீடோமெண்டு..

அட சிவலயனதான் விட்டாலும் நான் அடுத்த பரீச்சைக்கு என்ர மருமோன்களுக்கு அழைப்பு வைச்சேன்; அதுதாங்க வெத்திலய வைச்சு அவங்கள்ல யார் என்ர பொட்டைக்கு நல்ல மாப்பிள்ளைன்னு கண்டுபிடிக்கதான். அதுக்குதான் நான் இப்ப உங்களையெல்லாம் வரச்சென்னனான். ஹி ஹி ஹி அட இதிலேயும் சில கில்லாடி மருமோன்கள் தாங்க வெத்திலையே போடுறதில்லைன்னு சொல்லி எஸ்கேப்பாகுறானுங்கோ. அட எங்கேயாவது "பூசி"போட்டு வீட்ட போகேக்க மட்டும் மணம் தெரியாம இருக்க வெத்திலைய சப்பிக்கொண்டு போவானுங்க. ஆனா போட்டிக்குமட்டும் "மாமா நான் ரெம்ப நல்லவன் எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு" ரீலு விடுறானுங்கோ. அட உந்த கதையெல்லாம் என்னட்ட சரிப்பட்டு வராது, நீங்க வந்து வெத்தலைய மடிச்சு எனக்கு எடுத்து தாங்கோ வந்திருக்கிற சபையோரே பாத்துக்கீத்து உங்கள்ள யாரு சிறந்த மருமோன்னு சொல்லட்டும்...

அட அது என்ன ஒரு வெத்திலைய மடிச்சு எடுத்தத வைச்சு என்னன்னு நீ மாப்பிளைய பிடிப்பாய்ன்னு கேட்கிறீங்களா..? நம்ம பண்டைய தமிழர்களின் வாழ்க்கையில வெத்தில ஒரு முக்கியமான பொருளைய்யா! யாருமே வெத்தில பெட்டிய இரவல் கொடுக்கமாட்டாங்க! அது லஷ்சுமியாம் அத்தோட பிறப்பில இருந்து இறப்பு வரை நடக்கிற எல்லா நல்லதோ கெட்டதோ எந்த  காரியத்துக்கும் தமிழண்ட வாழ்க்கையில வெத்தில இருக்குது. அந்த காலத்தில ஊரில யாருடைய வீட்டிலயாவது சூரிய அஸ்த்தமனத்துக்கு பிறகு வெத்தில கேட்டா உங்கள அடிக்க வருகிற மாதிரி பாப்பாங்க. அப்படியே வெத்திலைய தந்தாலும் அத கிள்ளிப்போட்டுத்தான் தருவாங்க. அப்படி செய்யாட்டி லஷ்சுமி வீட்ட விட்டு போயிடுவாள்ன்னு நம்பினாங்க. அப்படிப்பட்ட வெத்திலய நம்ம முன்னோர்கள் மற்றவர்களின் குண நடைகளை அறிவதற்கும் பயன்படுத்தி இருக்காங்க. ஒருத்தன் பொண்ணு பார்க்க வரும்போது பொண்ணோட சொந்தக்காரங்கெல்லாம் சேர்ந்து மாப்பிள முன்னால உக்காந்துடுவாங்க. மாப்பிள எப்பிடி வெத்தலைய தொட்டார்? எப்படி அதை இரண்டாக பிரித்தார்? எப்படி பாக்கை வெட்டினார்? எவ்வளவு சுன்னாம்பை சேர்த்தார்? அதை எப்படி வாய்க்குள் கொண்டுபோனார்ன்னு எல்லாத்தையும் அவதானிப்பாங்கோ. ஒவ்வொரு செயலின் பின்னாலு அந்த மனிதனின் குண நலன்கள்'ன்னு எல்லாத்தையும் அறியலாமாம்..!!??
                                                               (இது தான்என்ர அப்புச்சின்ர வெத்தில தட்டு)
உண்மைய சொன்னா எனக்கு என்ர பக்கத்தில இருக்கிற மருமோனுக்கு உதெல்லாம் பார்க்காம கட்டி குடுக்க ஆசைதான். அப்பிடி கட்டி குடுத்து வீட்டோட மாப்பிளையா வைச்சு அவரை ஒரு பெட்டிப்பாம்பாக விருப்பம்தான்! ஆனா மற்ற மருமோன்கள் என்னோட சண்டைக்கு வாராங்க. 'அதெப்படி மாமா உனக்கு அவந்தான் முக்கியமா போச்சோ'ன்னு! அதுதாங்க நான் உங்களையெல்லாம் வரவழைச்சிருக்கேனுன்ங்கோ. என்ர மருமோன்கள் பயங்கர கில்லாடிங்கோ; அவங்களுக்கு இடம் கொடுத்தீங்க ஒட்டகத்துக்கு இடம்கொடுத்ததைப்போல போயிடும். நீங்கதான் இவங்கள்ள யாரு என்ர பொட்டைக்கு தோதான மாப்பிளைன்னு பார்த்து சொல்லோனும்! உங்கள நம்பி அந்த பொல்லாத பொடியங்கள கூப்பிடுறன் சரிதானேங்கோ!!

டிஸ்கி :-இந்த  டெம்லேட் அமைக்க உதவி செய்தவர் நிகழ்வுகள் வலைத்தளத்தின்  முதலாளி கந்தசாமிக்கு நன்றி. (இதை அமைத்து தந்ததுக்காக போட்டியில் விசேட சலுகைகள் தரப்பட மாட்டாது என்பதை அறியத்தருகிறேன்)

Tuesday 23 August 2011

நம்மவர்கள்......

வணக்கமுங்கோ............

இப்பிடித்தாங்கோ ஒரு நாள் ஊரில என்ர சிவலயயோட வீட்ட போகேக்க அங்க அப்புச்சி தலைமையில அவசர அமைச்சரவை கூட்டம் நடந்துகிட்டிருந்தது.. அதில அடிக்கடி காட்டான்னு என்ர பேர சொல்லேக்க எனக்கு விளங்கீற்று இண்டைக்கு என்னைப்பற்றித்தான் முக்கிய மந்திராலோசனை நடக்குதெண்டு..

இதில வேற எனக்கு உள்ளூர ஒரு பயம் விளம்பரத்துக்கு எழுதி போட்ட மாதிரி எழுதி எல்லா பொம்புளபிள்ளைகளின் சைக்கிளிள் போட்டு வைச்ச கடிதங்கள யாராவது கொண்டு வந்து கொடுத்திட்டாங்களோன்னு...

அப்புறமா அப்புச்சி கூப்பிட்டார்.. என்னன்னு போனா என்னடா காட்டான் உன்ர சிவவல கந்தையண்ட காட்டுக்குள்ள மேய்சிட்டாம் நீ அப்ப என்னத்த புடுங்கிக்கொண்டு இருந்தான்னார்.. இப்பிடித்தாங்க என்ர சிவலயன் எப்பவும் என்னை மாட்டி விட்டுடுவான்..

இதில வேற காலையில கந்தையர் காட்டுப்பக்கமாதான் சிவலய ஓட்டிக்கொண்டு போகோனும் அவன மேயவிட.... நானும் என்ர யிம்மியும் சிவலய பிடிச்சுக்கொண்டு  கந்தயர் காட்டுப்பக்கம் போனா வடலீக்க செம்போட ஒதுங்கிற கந்தையர் முடிச்சது பாதி முடிக்காதது பாதின்னு ஓடிவருவார் தன்ர காட்ட மேயவிடுடுடவானோன்னு ஒரு பயத்தோட..

நாங்க ஒன்னும் சிவலய சும்மா கூட்டிற்று போறதில்லைங்கோ பழைய நீத்து பெட்டிய(புட்டு அவிக்க பனை ஓலையால் செய்த ஒரு கூம்பு வடிவிலான பாத்திரம்...!!??)அவன் வாயில கட்டித்தான் கொண்டுபோவோம் அவன் அதையும் சாப்பிட்டுவிட்டு கந்தையர் தோட்டத்திலேயும் கொஞ்சம் மேஞ்சிட்டான் அதுதான் இப்ப நடந்த அவசர கூட்டம்...

கந்தையர் வந்து கூச்சல் போட்டது அப்புச்சிக்கு கொஞ்சம் சூடாப்போச்சு சிவலயனயே மேய்க்க தெரியாத உனக்கு எதிர்கால வாழ்க்கை இஞ்ச சிரமம் உன்ன வெளிநாட்ட அனுப்ப போறம்ன்னு முடிவெடுத்திட்டோம்ன்னார்.. அப்புச்சியிட்ட இன்னோரு சான்ஸ் கேட்டேன்.. சிவலயனபோல பத்து பேர மேய்ப்பேன்னு உந்த கதையெல்லாம் வேண்டாம் இப்ப நான் சொல்லுறத செய்பாப்போம்ன்னு ஊற வைச்ச எள்ளு புண்ணாக்க நிறைய தண்ணி விட்டு தந்தார் இத உன்ர சிவலயன் முழுக்க குடிச்சா மேற்கொண்டு பேசுவோம்ன்னார்..

நானும் சிவலயனிட்ட அப்புச்சி தந்த புண்ணாக்க கொடுத்தேங்க.. அண்டைக்கு எனக்கு அடிச்சாங்க சிவலயன் ஆப்பு.. ஆமாங்க மூக்க புண்ணாக்கு தண்ணியில விட்டு சுழியோடி புண்ணாக்க மட்டும் சாப்பிட்டுட்டு தண்ணிய விட்டுட்டான்யா என்ர சிவலயன்....

அதுக்கு பிறகு அப்புச்சியிண்ட பேச்ச மீற முடியாமதாங்க நான் வெளிநாடு வந்தேனுங்க... என்ன அனுப்பேக்க மணியண்ணயிட்டதான் அனுப்போனும்ன்னு பிரான்சுக்கு அனுப்பி வச்சாங்க... பிரான்ஸ் வந்த முதல் நாள் மணியண்ண கேட்ட கேள்வி.. என்னடா காட்டான் உன்ர கோத்தைக்கும் கொப்பருக்கும் (அம்மா,அப்பா) அறிவு இருக்கோன்னு..

ஏன்னா நான் சின்ன புள்ளையாம் தனியா இப்பிடி அனுப்பக்கூடாதாம்.. அப்ப எனக்கு ஆகுலனை விட அரும்பு மீசை கூட இருந்திச்சு... அதவிட 18வயசு வேற... நானும் வந்தபோது இஞ்ச நாந்தான் வயதில குறைஞ்சவன்...

இப்ப நானும் பாக்கிறேன் 12,13 வயசி பொடியள தனியா அனுப்புறாங்க... அட மாடு மேச்ச காட்டானே இஞ்ச வரேக்க அவங்க வரக்கூடாதோன்னு நீங்க கேப்பீங்க.. யாரையா வரவேண்டாம்ன்னு சொல்லுறது ஆனா ஒண்ட மட்டும் யோசிச்சு பாருங்கோ இப்பிடி வருகிற பொடியங்கள அவங்க சொந்தக்காரங்க தன்ர பிள்ளைபோல நடத்துவார்களா..!!? அடுத்து வருகிற பொடியங்க கொஞ்சம் குழப்படியானவங்கன்னா இஞ்ச கண்டிச்சு வளர்க்க முடியுமோ..!!??

சில தாய்மார்கள் இப்பிடி வருகிற பொடியங்கள வீட்ட வித்து காணியவித்து அனுப்புறாங்க அங்க காச கொடுத்தவன் இறுக்கேக்க இவங்க இஞ்ச இருக்கிற சின்ன பொடியன இறுக்குவாங்க...!!!? அவங்க என்ன செய்வாங்க..? தொல்லை தாங்க முடியாம வயச கூட்டி விசாவ பதிவாங்க... விசாவும் கிடைச்சு வேலை செய்த முதல் மாச சம்பளத்தையும் பார்தா அவங்க என்ன செய்வாங்க.. அதுவும் எதையுமே செய்யும் சுதந்திரமுள்ள ஒரு நாட்டில..!!!??

தவறானபாதையில சிறுவர்கள போக விட்டுட்டு அங்க இருந்து குய்யோ முறையோன்னு கத்துறத்தில ஒரு பிரயோசனமும் இல்லீங்க.. ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..

ஒரு சிறுவனை அவன் வயதில் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கவிடாது.. குருவி தலையில் பணங்காய வைக்கும் எங்கட ஆட்கள் சொல்லக்கூடாது எங்கட பொடியங்கள் வன்முறைப்பாதையில் செல்கிறாங்கன்னு... அதை சொல்ல இப்பிடியான சிறுவர்களை அனுப்பும் மனிதப்பேய்களுக்கு உரிமையில்லை..??

எனக்கும் தெரியும் இப்பிடி வரும் சிறுவர்கள் மட்டும்தான் இப்பிடி செய்கிறார்களா..? இங்கு பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்காது வேலை வேலைன்னு ஓடுபவர்களின் பிள்ளைகளில் சிலரும்  இப்படி இருக்கிறார்கள்தான் அதை நான் மறுக்கவில்லைத்தான்... ஆனால் இவர்களை கண்டிச்சு திருத்தக்கூடிய சூழலலில் இங்கு பெற்றோர் இருப்பதால் திருந்துவதற்கு ஓரளவு சாத்தியம் இருக்கின்றது... ஆனால் பெற்றோர்களே இல்லாமல் தனித்து இருக்கும் சிறுவர்களை யார்  மாற்றுப்பாதையில்அழைத்துச்செல்வது..?

இதெல்லாம் காட்டான் சொன்னா எடுபடப்போறதில்லைங்கோ... ஆனா இத எழுத காரணம் என்ன பாதிச்ச ஒரு சம்பவம்தாங்கோ..என்ர மணியண்ண எப்பிடின்னா ஊரில சொல்லுவாங்களே பக்கத்து இலைக்கு பருப்பு வேணுன்னு(தனக்கு இலையில் பருப்பு இல்லைன்னா சாப்பாடு பரிமாறுபவரை அழைத்து தம்பி பக்கத்து இலைக்கு பருப்பு இல்லைன்னு சொல்லுவாங்க அவரும் பருப்புச் சட்டியோடு வரும்போது  வந்தது வந்திட்டீங்க எனக்கும் போடுங்க என்பார்கள்..!!??) அதபோல என்னடா காட்டான் ஒருகிழமைதான் லீவெண்டு பரிசில நிக்கிறாய் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு லண்டன் பக்கம் போகலாமேன்னார்... நானும் பார்தன் இவருக்கு ஒரு சொந்தகாரன் லண்டனில இருக்கிறார்தானே ஓசியில ஓட்டுமடம் போகலாம்ன்னு...!!?  லீவ பிள்ளைகளோட இன்பச்சுற்றிலா சுத்தி வருவோமெண்டு மாட்டுவண்டிய எடுத்தா ஒரு உரவாக்கோட மணியண்ண வந்து நிக்கிறார்.. அட காட்டான் சின்னவங்களோட போகேக்க நீ கஷ்டப்படுவாய் அதுதான் நானும் உன்கூட வர்ரேன்னுட்டார்...!!??

இனி என்ன செய்ய முடியும் மாட்டு வண்டியில மணியண்ணையையும் கூட்டிக்கொண்டு லண்டனுக்கு போனா அங்க அவங்கள் மணியண்ணைக்கு நெரிங்கிய சொந்தமாம்.. மணியண்ணையின் மனிசியின் சகோதரியின் கணவரின் தாயின் அண்ணனின்.......... வேண்டாம் விட்டுடுறன் இப்பிடிபட்ட நெரிங்கிய சொந்தக்காரங்களின் வீட்டில் நான் கண்ட காட்சிதான்யா என்ர மனச குடைஞ்சு இந்த பதிவ எழுத தூண்டியது....!!

அந்த வீட்டில் ஒரு நாப்பது நாப்பத்தைந்து வயசு மதிக்கக்கூடியவர் ஒரு பத்து பதினொன்னு வயசு மதிக்கதக்க தன்ர மகளோடு வந்து இருக்கிறார்.. நமக்குதானே பேச்சுக்கு ஒரு ஆள்தேவை எல்லோரும் வேலை வேலைன்னு ஓடுறாங்க இவர் வந்து ஒரு மாசம் பேச்சுக்கு நடுவே நான் கேட்டேன் என்னங்க உங்க மனிசி இல்லையோன்னு அவரு சொல்லுறார்.. இஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுவம்ன்னு...!!?? எப்ப ..!!?? முதல்ல இவருக்கு விசா கிடைக்கோனும்.. அதுக்கு பிறகுதானே ஸ்பொன்சரப்பற்றி கதைக்கலாம்.. இஞ்ச எவ்வளவு பேருக்கு பத்து பதினைஞ்சு வருசமா விசா இல்லாம இருக்கிறாங்க...!!?

என்ர மனச குடையிற கேள்வி என்னான்னா பூப்படையும் வயசில இருக்கிற தாயின் ஆலோசனைகள் தேவைப்படுகிற ஒரு சிறுமியை இங்கு தாயில்லாமல் அழைத்து வரவேண்டிய தேவை என்னையா.. ஏன் இவர் மட்டும் தனியாய் வந்து மற்றவர்களைபோல் விசா கிடைத்தவுடன் குடும்பத்தையே அழைத்திருக்கலாமே..!? அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!

நாளைக்கு நல்லதபோல ஒரு கெட்டது நடந்தா யாரையா பதில் சொல்லுறது..!? இந்த பச்ச புள்ளைய அனுப்பியதாய் ஒருகணம் நினைச்சுப்பாத்தாவா..
இதன் பாதிப்புக்களை... ?? வெளிநாட்டு மோகத்திற்கு ஒரு அளவே இல்லையாப்பா..??

எனக்கு இந்த முட்டாள் பெற்றோறை இப்பிடி எழுதி திட்டுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுப்பா..நாங்க எங்க போறோமையா....!!??

















நல்லா பாருங்கையா மணியண்ண இதுக்குள்ள தான்யா இருக்கிறார் வண்டிய கப்பலுக்கதானாம் ஏத்தோனும் லண்டன் போறத்துக்கு... இததான் பெரியவங்க சொல்லுவா ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறுமுன்னு....

Friday 12 August 2011

மணியண்ணை...

வணக்கமுங்க நான் காட்டான் வந்திருக்கேங்க...நீங்ககெல்லாம் என்ர பதிவ வாசித்து கமண்டு போடுறத பாத்தோன காட்டானு கையுமோடல காலுமோடல.. ஒங்களுக்கெல்லாம் என்ர நன்றீங்க..

இண்டைக்கு ஏதாவது எழுதிபோட்டுட்டு ஊரில கோழிக்கு அடவைச்சிட்டு மணித்தியாலத்துக்கொருக்கா கோழிய தூக்கி முட்டயெல்லாம் பொரிச்சிட்டோன்னு பாக்கிற சின்ன வயது காட்டானபோல நானும் இனி கருத்து பெட்டிய உந்த எலிமூச்சில கையவைச்சு தட்டித்தட்டி பாக்க போறேனுங்க....

இண்டைக்கு என்னத்த எழுதலாம் என்னு யோசிக்கேக்க..என்ர தங்கச்சி டெலிபோன எடுத்து என்னண்ண அக்காவ பற்றி மட்டும் எழுதுறாய் நானும் பிரான்சிலதானே இருக்கிறன் நீ சொன்னமாதுரி உன்ர வலைப்பதிவுக்க அடிக்கடி போய் உனக்கும் பிரான்சில அதிக பார்வையார்கள் இருக்காங்கன்னு தோற்றத்த ஏற்படுத்துறேனேண்ண...?? அதுக்காச்சும் என்ன பற்றி நீ எழுதலாம்தாணேண்ணன்னு சொல்லுறாள்..

அட இவளபற்றி நான் என்னத்த எழுதவெண்டு பாக்கிறன்.. ஆமாங்க சின்ன வயசில நாங்க எந்த கும்மு கும்மினாலும் அத வாங்கிக்கொண்டு  எங்களுக்கு பின்னாலேயே சுத்துவாள்.. இவளிண்ட கையில காசும் இருக்காது ஆட்டைய போட... ஆனா எனக்கு நல்ல ஞாபகமிருக்கு... அப்ப நாங்க வீடு திருத்திகொண்டிருந்தோமுங்க ஒரு பத்து பதினைந்து வேலையாள்கள் வேலைசெய்து கொண்டிருந்தாங்க அம்மாவும் ஆச்சியும் அவசர வேலையா எங்கேயோ போட்டாங்க...
பின்னேரம் எல்லாருக்கும் கோப்பி கொடுக்கோனும்..

 நானும் சும்மா தங்கச்சியிட்ட சொன்னேன் இவங்களுக்கெல்லாம் கோப்பி போடம்மான்னு அவளும் ஓடிபோய் எல்லாருக்கும் கோப்பி போட்டுக்கொண்டு வாறா.. எங்கட வீட்டிலேயே குட்டியா ஒல்லியா இருப்பாள் அப்ப அவ்ள்... வேலைக்காரஙகளிக்கெல்லாம் ஒரே ஆச்சரியமா போச்சுங்க... அப்ப அஞ்சு வயசு பிள்ளையே வீட்டு வேலையெல்லாம் அழகா செய்யும்...

இப்ப காட்டானும் பாக்கிறன் இஞ்ச இருக்கிற பிள்ளையல..!!!?? ஒரு சுடுதண்ணிகூட போட கஸ்டப்படுகிறாங்க... பருப்புக்குள்ள தாளிக்க போடுற செத்தல் மிளகாய பார்த்தாவே ஒலகத்தில இருக்கிற எல்லா சண்டைப்பயிற்சியயும் ஒண்டா செய்யிற மாதிரி  ஆ..ஒ..ஐயோன்னு சவுண்டு விடுறாங்கய்யா...

அதுதானய்யா நானும் பயத்தோட பாக்கிறேன்... போனமாசம் மணியண்ணை என்னை கூப்பிட்டு டேய் காட்டான் என்ர பிள்ளைக்கு நீதானே பேரு வைச்சாய்ன்னார்.. ஆமாண்ண அதுக்கென்ன இப்போன்னா பேரு வைச்ச நீயே அவளுக்கு ஒரு நல்ல மாப்பிளையா பாத்து சொல்லுன்னார்..!!

அட பொண்ணுக்கு நல்ல பேருதான்யா வைச்சனான் யாழினின்னு ஆனா நீங்க அவளுக்கு நல்ல படிப்ப கொடுத்து கை நிறைய சம்பாதிக்கவும் வச்சிட்டீங்க இல்லைன்னேல...  கொஞ்சம் சமைக்கவும் பழக்கியிருக்கலாம்தானேன்னன்..

அட காட்டுப்பயலே அதுக்குதானேடா உன்ன கூப்பிட்டனான் உன்ன மாதிரி சமைக்க தெரிஞ்ச மாப்பிள கொண்டு வாடான்னார் அதுதான் இப்ப நல்ல ஒரு மாப்பிளய தேடிக்கொண்டு இருந்தேன்..

 வேலைக்கு போகேக்க அடிக்கடி ஒரு பொடியன பாக்கிறனான் நல்ல அழகா அம்சமா இருப்பான்.. சும்மா பேச்சு கொடுத்து பார்தேன் பிரான்சுக்கு வந்து ரெண்டு வருசமாச்சாம் விசா இல்லையெண்டும் கொமிசனில விசா கேட்டு மூன்றாவது ரீயப்பீல் பண்ணியிருக்கெண்டார் எண்டும் சொன்னார்..

நானும் ஒரு புது புரோக்கர் என்ற நினைப்பில அவரிட்ட கதைய விட்டுப்பார்தேன் கலியாணம் கட்டிட்டியோன்னு அவனும் இல்லையென்னு சொல்ல எனக்கு தலையில பல்பு எரிஞ்சுது..  இவனும் பிரன்சில இருக்கிறான் மணியண்ணைக்கும் புது மாப்பிளைய ஸ்பொன்சர் செய்யிர தொல்லையெல்லாம் இல்லைன்னு..!! விசாவோட கைநிறைய சம்பாதிக்கிற பொண்ணு இருக்கிறா விருப்பமெண்டா சொல்லப்புன்னு என்ர டெலிபோன நம்பர கொடுத்துட்டு வந்தன்.
அட அவனுக்கு என்ன அவசரமோ தெரியல வீட்ட போய் சேரேல்ல டெலிபோன் வருகுது அம்மாட்ட கதைச்சிட்டேண்ண அவாவும் ஓமெண்டுட்டாண்ண.. போட்டோவெல்லாம் பார்க்க தேவையில்லண்ண.. சம்பந்தத்த முடிச்சிடுவோமென்னான்... எனக்கு டக்கன்னு ஒரு சந்தேகம் என்னடா இவன் இப்பிடி அமளிப்படுகிறானே ஏதாவது வில்லங்கமாச்சென்னா என்ர மகளபோல இருக்கிற அந்த பிள்ளையின் வாழ்கை பாழாகக்கூடாதுன்னு சரி தம்பி அவங்கள நேரிலபோய் கதைச்சுப்போட்டு சொல்லுறேன்னுட்டு இவனைப்பற்றி ஒரு துப்பறியும் சிங்கமாய் தோண்டிப்பார்த்தேன் இவற்ற நண்பர்களோட கதைச்சுப்பார்த்தவரையிலும் நானும் தோண்டி துலாவின வரையிலும் பொடியன் பரவாயில்லன்னு ஒரு முடிவுக்கு வந்தேங்க..

மணியண்ணையிட்ட கதைச்சு பொடியண்ட ஜாதகத்தையும் வாங்கியந்து பொருத்தமும் பாத்தோமுங்க நல்ல பொருத்தம் கல்யாணம் செய்யலாம்ன்னு சாஸ்திரியும் சொல்லீட்டார் ஆனா பிள்ளைக்கு ஏதோ தோஸம்ன்னு ரெண்டு மாசத்துக்கு பிறகுதான் கல்யாணத்த வைக்கச்சொன்னாருங்க..

அடுத்த நாள் பொடியனோட கதைச்சு வீட்டில ஆராவது பெரியவங்க இருந்தா வெத்தில பாக்கு தட்டத்தோட வாடா பொண்ணு பார்த்து நடுமாறுவம்ன்னு சொல்லி அவனை எதிர்பார்த்து மணியண்ண வீட்டில நான் குடும்பதோட போய் நின்னா அவனும் பத்து பதினைஞ்சு பால்குடியலோட வாறார் வீட்டுக்கு..

மணியண்ண என்னை ஒரு மாதிரி பாக்கிறார்.. நானும் மணியண்ண காதில சொன்னேன் இப்ப இவங்கதானே பெரியவங்க உதையெல்லாம் கணக்கெடுக்காதீங்க தாலி கழுத்தில ஏறினோன பாருங்க இந்த தம்பிமார மாப்பிளைக்கு தெரியாதெண்டு என்ர அனுபவத்த சொன்னேனுங்க....  அவரும் சரிடா காட்டான்னு தட்ட மாத்திட்டார்...

இப்ப கொஞ்சக்காலமா ஐப்பசியில வார கல்யாண வீட்டிற்கு இப்பவே கோல் புக் பண்ணுறதில இருந்து சாப்பாடு வரைக்கும் என்ர தலையில விட்டுட்டார் மணியண்ண நேற்று வரைக்கும் உந்த விசயங்களுக்குதான் ஓடி திரிஞ்சேன் சந்தோசமா... அந்த மாப்பிள  டெலிபோன் எடுக்கும்வரை...!!!!????

டெலிபோன எடுத்த அந்த மாப்பிள வாயில முட்டய வச்சிருக்கிற மாதிரி சொல்லுரார்.. அண்ண எனக்கு நேற்று விசா ஓகே பண்ணி கடிதம் வந்திருக்கென்றான்.. பாத்தியோடா அந்த பிள்ளையிண்ட ராசி உனக்கு விசா கிடைச்சிருக்கென்னேன்.. அவனோ அனுங்கிக்கொண்டு சொல்லுறான்.. அம்மாவுக்கு இந்த கல்யாணத்தில இஸ்டமில்ல நானும்அம்மா சொல்ல மீறி ஒண்டும் செய்ய முடியாதெண்டுறான்... எனக்கு வந்த ஆத்திரத்துக்கு நல்ல சுத்த தமிழ்ல நாலு விட்டன் அவனோ டெலிபோன கட்பண்ணிட்டு போட்டான்...

அட இந்த நாய்தான் இப்பிடி சொல்லுதெண்டா.. அவன் அம்மாவுக்கு எங்க போச்சு புத்தி.. இவனுக்கும் ரெண்டு சகோதரிகள் இருக்கினம்தானே அவைக்கு இந்த நாய் செய்ததுபோல யாராவது செய்தா ஓமெண்டு விடுவானோ இந்த நாய்..!!!?

வீட்ட வந்து மணியண்ணைக்கு டெலிபோன எடுக்கிறன் கையெல்லா நடுங்குது.. விசயத்த மணியண்ணையிட்ட சொன்னா அப்புறம்ன்னு சுவாரசியமா கத கேக்குற மாதிரி கேக்கிறார்.. என்ன அண்ண இப்பிடி இருக்கிறீங்கன்னா.. டேய் காட்டான் இண்டைக்கு விசா கிடைச்சோன பேசி முடிச்ச கல்யாணத்தையே வேண்டாம்ன்னு சொல்லுறவன் நாளைக்கு கல்யாணம் கட்டினா என்னவெல்லாம் செய்வான்னு யோசிச்சுப் பாரடான்னுரார்...!!!? மணியண்ண என்னோட கோவபடலைன்றதே சந்தோசம்தான் ஆனா இந்த மாப்பிளையின்ர மண்டேக்க என்ன இருக்கென்று யோசித்து பாக்குறன்...

ஆரம்பத்தில கலியானத்துக்கு செக்கு மாடு மாதிரி காட்டான சுத்தி வந்தவன்.. விசா கிடைச்சோன பாத்திருப்பான் படிச்சு வேலைக்கு போற பிள்ளை இந்த நாட்ட நல்லா தெரிஞ்ச பிள்ள பாச ஒரு பிரச்சன இல்லாத பிள்ள இவள கட்டினா தான் வீட்டில பெரிய பிஸ்தான்னு காட்ட முடியாதுன்னு யோசிட்டான் போல.. இவனுக்கு தேவையெல்லாம் ஒரு பிள்ள பெத்து போடுற,வீட்ட சுத்தம் செய்யுற,சாப்பாடு சமைச்சு போடுற,உடல் பசிய தீர்கிற ஒரு இயந்திரம்... அது எங்க இருக்கென்னு யாராவது சொன்னா புண்ணியமாபோகும்... அத வாங்கி இந்த நாயிட்ட குடுத்திட்டா ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகாதையா...!!?


 பின்குறிப்பு:- எல்லோரும் மன்னிச்சிடுங்க நாய்,பேய்ன்னு எழுதினத்துக்கு.. அடுத்து இது கற்பனைக் கதையில்ல.. காட்டான் உண்மையாகவே அனுபவித்த நிசமுங்கோ..  மணியண்ணயின் பேர மட்டும் இதற்கு பாவிச்சேன்.. அவர் என்ர குறியீடுதானே...!!??

பதிவுக்கு ஏற்ற மாதிரி அவரும் மாறுவாருங்கோ.!!!???  அப்ப மணியண்ண யார் என்கிறீர்களா.. அவர் நானாகவும் இருப்பார்..!!?? நீங்களாகவும் இருப்பார்..!!?? தானாகவும் இருப்பார்..!!? என்ர மணியண்ணை ஒரு மாயாவியுங்கோ..!!????

பாருங்கையா.. புலக்கு புலக்கென்னு திரிஞ்சதில காட்டான் தோட்டத்தை கவனிக்காம விட்டுட்டான்யா... காட்டான் புடுங்குற குழயெல்லாம் இஞ்ச இருந்து தானையா..!!!???

Wednesday 3 August 2011

காட்டானும் பார்த்தானே..

கிருபானந்த வாரியார் ஒரு குட்டிக்கதை சொல்லுவார்.. சாகக்கிடக்கும் ஒரு தந்தை தன்னுடைய மகனை அழைத்து ஏதோ சொல்ல முற்படுகையில் இறந்து விடுவாராம்.. மகன் தந்தை என்ன சொல்லவந்தாரென்று தெரியாமல் அவர் கையில் இருக்கும் சுருட்டை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் சுருட்டுன்னு அர்த்தப்படுத்திக் கொண்டது போல் நானும் எதை எதையோ மாற்றி மாற்றி விளங்கிக்கொள்கிறேன்..!?

இன்று காலையில் வேலைக்கு செல்கையில் பிரான்சின் புகழ் பெற்ற France info ரேடியோவை கேட்டுக்கொண்டு செல்கையில் நானும் கிருபானந்தவாரியார் சொன்ன அந்த கதையில் வருகின்ற மகன் மாதிரித்தானோன்னு ஒரு சந்தேகம் வந்துவிட்டது..!?

அது ஒன்றுமில்லை ஐரோப்பாவிலேயே  கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்..

ஐரோப்பாவில் எனக்கு தெரிந்து ஹாலாந்தில்தான் சட்ட பூர்வமாக கனபி பாவிக்கலாம்.. அங்கு காட்டானும் 95ம் ஆண்டுகளில் அடிக்கடி சென்று வந்ததால்தான் சொல்கிறேன்.. கனபி பாவிப்பதற்கல்ல..!!?? எனது பழைய நண்பரை பார்பதற்காக அந்த காலங்களில் அடிக்கடி செல்வதுண்டு வேறு ஒன்றுமில்லை நம்புங்கோ மாப்பிளைங்களா..!!?

இப்ப விசயத்திற்கு வாரன் மாப்பிள.. பிரான்சில் பசுமை கட்சி கனபி பாவிப்போர் மீது ஒருவித மென்மையான போக்கே கொண்டுள்ளது அக்கட்சியின் முன்னால் தலைவர் நோயல் மம்மேர் கனபியை சட்ட பூர்வமாக்க வேண்டும் என்கிறார்..!

இப்ப இவர் போற இடமெல்லாம் சின்னபொடியங்க ஐயா கனபி தாங்கையா கனபின்னு ரவுசு பண்ணுறானுங்கோ மாப்பிளையும் அசடு வழியுறார்.. ஆனா காட்டானுக்கு மாப்பிளைய பிடிக்கும் தப்பா நினைக்காதீங்க.. அவர் பகிரங்கமாகவே தான் ஹோமோ செக்ஸ்சுக்கு ஆதரவெண்டு சொன்னது மட்டுமல்லாது..  தன்னுடைய நகர சபையில் சட்டம் அங்கீகரிக்காது என்று தெரிந்தும் இரண்டு ஆம்பிளைகளுக்கு திருமணம் செய்து வைச்சிட்டு ஓவென்று கதறி அழுத காட்சிய பார்த்த காட்டானும் கண் கலங்கீட்டான்யா...!!??

அட இவர விடுவம் இவர் ஒரு முன்னால் காலநிலை செய்திவாசிப்பாளர் மழை வருமோ வராதோனுகூட சரியா சொல்லமுடியாத இவர் சொல்லுறத எல்லோரும் கேப்பினமா..!? ஆனா ரேடியோவில வந்து கனபிய பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறவர் ஒன்றும் காட்டானில்லை.. பிரான்சில் பிரபலமான sorbonne university பொருளாதார பேராசிரியர்.. இஞ்ச இருக்கிறவ காசோடதானே எல்லாத்தையும் பாப்பினம் இவர் சொல்கிறார் கனபியை அங்கீகரித்து அதை கடைகளில் விற்கவிட்டால் அரசுக்கு எவ்வளவோ மில்லியார் யூரோ வருமானம் வருமாம்...!?

அட காச பாக்கிற இவர்கள் எதிர்கால இளைஞர்களை யோசிக்கேல்ல நானும் ஆரம்பத்தில இஞ்ச இருக்கிற பொடியங்க சின்ன வெள்ள பேப்பரில சிக்கிரட்டு தூள வைச்சு சுருட்டேக்க பாத்திருக்கேன் என்ர அப்புச்சி சுருட்ட உறுட்டுற மாதிரி இவனுங்க இத உறுட்டுறாங்கன்னு..  அப்புறம் பார்த்தாதான் தெரியுது இவனுங்க கனபியதான் இப்பிடி செய்யுறாங்கன்னு..

கனபிய நிற்பாட்டுறதுக்கு வழிய பார்காம  அதை எதிர்காலத்தில் சட்டபூர்வமாக்கினால்..!!!?? சின்ன பொடியங்க கெடுவது மாத்திரமில்ல.. இனிப்பு வாங்க காச களவெடுத்த காட்டானைப்போல... இவர்கள் ரோட்டில் போற வர்ற ஆட்களை கொள்ளையடிக்க போகிறாங்க.. இப்பவே இது பரவலா இஞ்ச நடக்குது.. இனி இது தேசியமயமாகிடும்..!!?

இதில சோசலிசம்ன்னு கும்மியடிக்கிறவய நம்ப முடியாது..அதோட எங்கட தமிழ் பொடியங்க இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நல்லா படிச்சுக்கொண்டு வாராங்க.. இவங்க பெற்றோரில கூடுதலானவங்க காசு காசுன்னு ஓடுவதையும்தாண்டி...!!?

 இஞ்ச கனபி விக்கிறவங்க எங்கட ஊரில பள்ளிகூடத்துக்கு முன்னால நிக்கிற ஐஸ்பழகாரன் போல பள்ளி பிள்ளைகள குறிவைச்சுத்தான் திரியுராங்க ஏன்னா இவங்கதான் எதிர்கால கஸ்ரமர்ன்னுராங்க.. முதல்ல இவர்களின் நண்பர்கள் மூலம் இலவசமாதான் கொடுப்பாங்க.. அதுக்கு பிறகு இவர்கள் அதற்கு அடிமையாகிட்டா..கதை கந்தல்தான்..!!?

அதுக்கு பிறகு பிள்ளய அடிச்சோ பிடிச்சோ திருத்த முடியாது.. எப்பிடியோ நாட்ட விட்டு வெளிக்கிட்டவ திரும்பிப்போய் அங்கேயே இருப்பார்கள் எண்டுறது பொய்..!? இப்பிடிதான் மணியண்ணை நான் இஞ்ச வந்த ஆரம்ப நாட்கள்ல டேய் காட்டான் இன்னும் ரெண்டு வருசத்தில காச உழைச்சுக்கொண்டு ஊருக்கு போய் என்ர மனிசி பிள்ளைகளோட செட்டிலாகப்போறேன்னு என்னட்ட அடிக்கடி சொல்லுவார்.. இப்ப இருவது வருசமாச்சு கொழும்பில வீட்டையும் வாங்கி விட்டிருக்கார் ஆனா இப்ப அங்க போற ஐடியா இல்லன்னுறார் கேட்டா குடும்பத்தை இஞ்ச கூப்பிட்டாச்சு பிள்ளைகள் இஞ்ச படிக்கினம் அவர்களுக்கு ஒரு கல்யாணம் காட்சி பார்க்கவேண்டாமோன்னுரார்.. இன்னும் கொஞ்ச காலம் போனா பேரப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் போயினம் அவர்கள நாங்க பார்கோனும்பார்... அதையும் விட்டா பேரபிள்ளைங்க வளர்ந்திட்டார்கள்ன்னு சொல்லிக்கொண்டே போவார்... இது எல்லாருக்கும் ஒரு காலத்தில வாறதுதான்...


சரி காட்டான் இதுக்கு என்ன செய்யலாம்ன்னு நீங்க கேக்கலாம் முதல்ல ஒன்றை சொல்கிறேன்.. காட்டானுக்கு இதில பெரிய அனுபவமில்லன்னாலும்.. எனக்கு தெரிந்த சில வழிகள சொல்லுகிறேன்...  உங்களுக்கும் தெரியும் எப்படி எங்கட பிள்ளைகளை இதில இருந்து காப்பாத்துறதெண்டு அத நீங்க உங்க கருத்துக்களா சொல்லுங்கோ அது மற்றவர்ளுக்கு பிரயோசனமாஇருக்கும்...!!!!!

எப்பிடியோ இண்டைக்கில்லாட்டியும் ஒரு நாள் இவர்கள் கனபிய பிரான்சில சட்டபூர்வமாக்கிடுவாங்கன்னுதான் காட்டான் நினைக்கிறான்...!? இப்ப இவர்கள் நூல் விட்டு பாக்கினம்.. இப்பிடியான.. பேராசிரியர்கள்,அரசியல்வாதிகள் மூலம்.. அதுக்கு முன்னால நாங்க உசாராகிடோனும்..

தோளுக்கு மேல வளர்ந்தா தோழன்னு சொல்வதுபோல்..! நான் உன்ர அப்பண்டா அப்பிடிதாண்டா இருப்பேன் நான் சொல்லுறததாண்டா நீ கேக்கோனும்ன்னு இருக்காம.. அவர்களோடு நண்பர்களா,நண்பிகளா பழகுவோம்.. வாழ்க்கைக்கு காசு தேவைதான் அத இல்லைன்னு சொல்லல காட்டான்... ஆனா பிள்ளைகளுக்கும் கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்...  லீவு நாட்களில் பிள்ளைகளை அவர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு அழைத்து செல்வோம்.. முக்கியமாக அவர்களின் நண்பர்களை தெரிந்து கொண்டு அவர்களுடனும் நண்பர்களாக பழகுவோம்..

இப்படியான சில செயற்பாடுகள் மூலம் கட்டாயம் அவர்கள் எங்களிடம் எதையும் மறைக்க மாடார்கள்...!? இது அவர்களை நல்வழிப்படுத்தும்..காட்டானுக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது பிரன்சில் அடுலேசோன் என்று அழைக்கப்படும் டீனேச் பசங்களப்பற்றி..  உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.... காட்டானிடமும் வருங்கால டீனேச் பொடியங்கள் இருக்கிறார்கள்.. உங்கள் அனுபவம் எனக்கும் தேவை...!!!?

Saturday 30 July 2011

நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)

 வாங்க அண்ணாத்த வாங்க எப்பிடி இருக்கிறீங்க... இவ்வளவு காலமும் முகம்தெரியாம என்னை கும்முனீங்க... இப்ப நேரில கும்முங்கோன்னுதாண்ண உங்கள இந்த கடைக்கு முன்னால வரச்சொன்னது.. 

அப்புறம் ஊர் புதினம் எப்புடி.. தேர்தல் முடிவு தெரிந்தோன லாச்சப்பல்ல இனிப்பெல்லாம் கொடுத்து கொண்டாடினிங்களாம்..  ஊருக்கு இப்ப போற எண்ணம் இல்லைப்போல தெரியுது ..

 ஏன் அண்ண உடம்ப இப்பிடி ஊத விட்டிட்டிங்க.. ஒழுங்கா டொக்டர் தந்த கொலஸ்ரோல் குளிசய போடுங்கோண்ண அக்கா சொல்லச் சொல்ல கேட்காம இப்பிடி இனிப்ப சாப்பிட்டா சலரோகம் ஏன் வராது கவனமண்ண லங்கா சிறீயில வார சங்கூதப்பட்டவங்க வயத பார்கேக்க பயமா இருக்கண்ண சின்ன சின்ன பொடியங்க எல்லாம் போறாங்க உங்கள பயப்படுத்திறத்துக்கு சொல்லல கவனமா இருங்கோன்னு சொல்லத்தான்ண...!!?

கிட்டடியில ஒரு விசயம் கேள்விப்பட்டேன் அண்ண எங்கட மணியண்ணையிண்ட மனிசி ரோட்டில போகேக்க ஒரு கறுவள் வந்து மடம் உங்களோட ஒருத்தர் கதைக்கோனுமாம்ன்னு டெலிபோன கொடுக்கிறானாம்..
இந்த மனிசியும் என்னத்துக்கு எதுக்குன்னு யோசிக்காம டெலிபோன வாங்கி கதைகிறாண்ண.. அங்கால ஒரு தமிழ் குரலண்ண அக்கா உங்களுக்கு பக்கத்தில நிக்கிற ஆபிரிக்ககாரங்க பொல்லாதவங்க.. மரியாதயா உங்களிட்ட இருக்கிற நகையெல்லாம் களட்டி கொடுத்துடுங்கன்னுறான்...

திரும்பிப்பார்த்தா பத்து பன்னிரெண்டு கறுவல் சுத்தி நிக்கிறாங்களாம்.. வேற என்ன செய்ய முடியுமண்ண இருக்கிற நகைகள கலட்டி கொடுத்திட்டு வீட்ட வந்திட்டாண்ண..மணியண்ண வீட்ட வர விசயத்த சொல்லி பொலிசுக்கு போய் வழக்கு போட்டுட்டு வந்திருக்கினம்..

 இல்ல நான் தெரியாமதான் கேக்குறன் அந்த மனிசியிட்ட டெலிபோன்ல கதைச்சது என்ன ஆபிரிக்ககாரனா..? அவன் எப்பயண்ண தமிழ் கதைச்சு பழகினாண்ண..!!?

அது மட்டுமேண்ண இப்ப இஞ்ச இருக்கிற தமிழர்கள் வீட்டிலதானேண்ண அதிகமா களவுபோகுது.. எங்கட சனமும் வாயகட்டி வயித்த கட்டி உழைச்ச காச நகையிலதானே போடுகினம் ஏன்னு கேட்டா பொம்புள பிள்ளை இருக்கு நாளைக்கு தேவை எண்டினம் அப்ப இங்க இருக்கிற ஆம்பிளைகளின் கழுத்திளையும் கையிலயும் தேடா கயிறு மாதிரி ஒண்டு இருக்கிதே அது எதுக்கண்ண... அவையும் பொம்புள பிள்ளதானோண்ண...

அட இவங்கதான் இப்பிடி சொல்லினம் ஆனா இஞ்ச பிறந்த பிள்ளைகளுக்கு பவுண்ல ஆசையில்ல... அவையெல்லாம் தாங்க போடுற உடுப்புக்கும் செருப்புக்கும் ஏற்ற மாதிரி பிளாஸ்டிக்கில செய்ததைத்தானேண்ண போடுனம்.. இவ எவ்வளத்த அடம்பிடிச்சாலும் அவங்க நகை போடுறத்துக்கு விரும்பினமில்லை.. இதுவும் நல்லதுதானே..!?

இப்பிடி களவப்பற்றி காட்டான் பேசுறான்னு நக்கலா சிரிக்காதீங்கண்ண.. காட்டான் இப்ப முந்தின மாதிரி இல்ல.. காட்டானும் இப்பிடி பாதிக்கப்பட்டதாலதான் சொல்லுறேன்..

இப்பிடித்தான் போனமாசம் வேல முடிச்சுப்போட்டு அரக்க பறக்க ஓடியந்து மெற்றோவ பிடிச்சு வீட்டுக்கு வார வழியில ஒரு பத்து பதினைந்து அடையாங்கள் நிக்கிறாங்க... அவங்கள் நிக்கிற நிலமைய பார்தோன காட்டானுக்கு விளங்கிப்போச்சு இண்டைக்கு ஏதோ நடக்கப்போவுதென்னு..

அதில ஒருத்தன் மிசு உங்களிட்ட சிக்கிரட்டு இருக்கோன்னான்.. மன்னிச்சுகோங்க காட்டான் சிக்கிரட்டு பத்திறதில்லைன்னு சொல்லிமுடிக்கேல்ல இன்னுமொருத்தன் வந்து காட்டாண்ட கோவனத்துக்குள்ள சிக்கிரட்டு பக்கற் இருக்கென்னு போட்டு கொடுத்திட்டான்..!?

அட அது வேறொன்னுமில்ல வேலை முடிச்சு வீட்டுக்கு வரும் வரை டெலிபோன இந்த கள்ளன்களுக்கு பயந்து கோவணத்துக்குள்ளதாண்ண வைச்சுக்கொண்டு வாறது.. அத பாத்துட்டுதான் இவனுங்க சிக்கிரட்டு பைக்கற்தான் இருக்கெண்டு நினைச்சு அத எடுடான்னு நின்னாங்க.. காட்டானும் கோவணத்த காப்பாத்தோனுமே..!? புதுசா வாங்கின ஐபோன காட்டினேன் அதவாங்கி வைச்சிக்கொண்டு... போடான்னு அனுப்பிவைச்சிட்டாங்கண்ணே...

இந்த வயசில இவ்வளவு பேரோட அடிபடவா முடியும்... கொக்குதடிய கமக்கட்டுக்குள்ள வைச்சிக்கொண்டு திருப்பி பாக்காம வீட்ட வந்து சேர்ந்தன்..! அடுத்தநாள்தாண்ண எனக்கு ஞாபகம் வந்திச்சு டெலிபோனுக்கு இன்சுரன்சு போட்டிருக்கிறது..!

ஏன் காட்டான் இன்சூரன்சு போட்டான்னு நீங்க யோசிக்கிறது எனக்கு விளங்குதண்ண... நானும் உந்த டெலிபோன வாங்கேக்க முதல்ல எனக்கு இன்சூரன்சு வேண்டாம்ன்னுதான் சொன்னனான்.. அதுக்கு டெலிபோன வித்த அந்த அழகான பொண்னு எனக்கு கிட்ட வந்து செல்லமா சொல்லிச்சு மிசு காட்டான் இந்த டெலிபோனு விலை அதிகம்... நாளைக்கு நீங்க தொலைச்சுப்போட்டால் புதுசா வாங்கிறதுக்கு  அதிகமா செலவு செய்வீங்க..

ஆனா மாதா மாதம் ஆறு யூரோ கட்டினீங்கன்னா எது வந்தாலும் உங்களுக்கு புது டெலிபோனு நாங்க தருவோமென்னா... காட்டானும் அந்த பிள்ளை கதைக்கிறத  ஜொல்லு விட்டபடி பார்த்ததை அந்த பிள்ள பார்திட்டு அதிலேயே முத்திரைய தடவி இன்சுரன்சு கொம்பனிக்கு கடிதத்தை அனுப்பி வைச்சுட்டாண்ண...  இப்ப அது காட்டானுக்கு வாச்சு போச்சு.. இதுதானப்பு ஜொல்லு விடுவதில் தவறு இல்லைன்னு காட்டான் அடிக்கடி சொல்லுறான்...!!??

புது டெலிபோன எடுக்கிறதெண்டால் போலீஸ் அறிக்கை வேண்டுமாம்.. அதுதான் இந்த பொலீஸ் அறிக்கைய கொண்டுபோய் டெலிபோன் வாங்கின கடையில கொடுத்திட்டு இந்த புது டெலிபோன வாங்கியாறன்..!

அட எனக்கு இதெல்லாம் கவலையில்லண்ண...!? அந்த அறிக்கைய தருவதுக்கு இந்த பொலீஸ் படுத்தினாங்களேபாடு அத இந்த காட்டானால தாங்க முடியலண்ண..!!??

 எதோ காட்டாண்ட அக்கா காட்டான் வைச்சிருக்கிற ஐபோன படத்தில பார்திட்ட மாதிரியும்,அதபோல தனக்கும் தேவையென்று கேட்ட மாதிரியும்,ஊருக்கு போன மணியண்ணையிட்ட தான் வைச்சிருந்த ஐபோன கொடுத்து விட்ட மாதிரியும்,அத எப்புடி போடுறதென்னு தெரியாம அக்கா காட்டானுட்ட அடிக்கடி டெலிபோனில கேக்குற மாதிரியுமல்லோ இருக்குது அந்த பொலீஸ்காரன் பார்வையும் பேச்சுமண்ண.. இது நல்லாவா இருக்கண்ண....!? காட்டான் திருந்தி ரெம்ப நாளாச்சு அண்ணாத்த....!!!!???

Thursday 21 July 2011

காட்டானும்.. கஞ்சனும்..!?


இப்ப கொஞ்ச நாளா தடல் புடலா கல்யாண நிகழ்சிகள்தான்...
ஆடி மாதம் வந்தா நல்ல காரியங்கள் செய்ய கூடாதென்று ஆனி மாசத்திலேயே எல்லாரும் மூன்று முடிச்ச போட்டுட்டாக இதில வேற ஐய்யர் கொடுக்கிற நல்ல நாலெல்லாம் சனி ஞாயிறுலதான் வருது அதுவுமில்லாம மதியம் கரைட்டா பன்னிரெண்டுல இருந்து ஒரு மணிவரைதான் நல்ல முகூர்த்தமாம்?

நானும் என்ர பெருச்சாலி வீட்ட அடிக்கடி போகேக்க அங்க இருக்கிற மெய்கண்டான் திருக்குறள் பஞ்சாங்கத்த விரிச்சு பார்பேன்..

எவ்வளவோ நல்ல நாட்கள் சனி ஞாயிர விட இன்னும் திறமான நாட்கள் எல்லாம் இருக்கும் அதெல்லாம் இவங்க கண்னுக்கு தட்டுப்படாது..

 இப்பிடிதான் நானும் ஒரு நாள் பஞ்சாங்கம் பார்கேக்க பெருச்சாலி வந்து காட்டான் பஞ்சாங்கத்த இப்பிடி பாக்கோனும்ன்னு நிமித்தி விட்டு போனார்..!

அட பஞ்சாங்கத்த நிமித்திதான் பார்கோனுமாம் ஆனா காட்டானுக்கு எந்த பக்கம் நிமிந்திருக்கு எந்த பக்கம் கவுண்டிருக்கென்று கண்டு பிடிக்கிறது கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் என்ன செய்யுறது..!

எனக்கு இப்ப கலியாணம் கட்டிறவைய பார்த்தால் வகுறு எரியுது பின்ன என்ன மாப்பிள பொம்புளைய காலையில ஏர்போட்டில இருந்து கூட்டிக்கொண்டு வரும் வரை ரூமில இருக்கிற பொடியங்களுக்கு சொல்ல மாட்டாங்க..!வீட்டுக்கு கீழ வந்ததும் டெலிபோன் கதரும் வீட்டில இருக்கிற பொடியங்களுக்கு..  மச்சான் என்ர வருங்கால மனிசி வந்திட்டாடா வீட்ட காலிபண்னுன்னு!?

அட மாப்புள நான் தெரியாமதாண்டா கேக்குறன் பிள்ள வர முந்தி இஞ்ச அவளுக்கு அக்கா இருக்கா ஆத்தா இருக்கா என்று இவன் விட்ட கதையெல்லாம் கேட்டம் இப்ப என்னடான்னா சுடுகுது மடிய பிடின்னு இந்த பச்ச பு(ல்)ள்ளங்கள இறக்கி விடுறீங்களே இவங்க எல்லாரையும் தாங்க காட்டான் என்ன சத்திரமா கட்டி வைச்சிருக்கான்..!?

வீட்டில கடைசிவரைக்கும் அவங்கள சமரி(ரூமில் வசிப்பதற்கும், சாப்பாட்டிற்கும் சேர்த்து கொடுக்கும் பணம்)வாங்கீற்று.. வீட்ட கடைசி ரயில பிடித்து ஓடி வந்தா..!சட்டிய வழித்து வைக்கிறீங்க அட நான் தெரியாமதான் கேட்கிறேன் கடைசி ரயில பிடித்து ஒருத்தன் அரக்க பரக்க ஓடி வாரான்னா அவனுக்கு அவ்வளவு வேலை இருக்குதுன்னுதானே அர்த்தம்.?அப்படி இருக்கிறவன் வேலை தலத்தில் சாப்பிட கூட நேரம் இருந்திருக்காது..  அட வீட்ட  வந்து சாப்பிடுவம்ன்னு வந்தா மீன்சட்டிய பூனை நக்குற மாதிரி நக்கி வைச்சிருக்கீங்க..?

அட இதுவாது பரவாயில்ல.. சில நேரம் வீட்ட பூட்டிவைச்சுட்டு திறப்ப கொடுக்காம சோம பாணத்த போட்டுட்டு சுறுண்டு படுக்கிறீங்க.. எப்பிடி கத்தினாலும் கேட்காது .. பக்கத்தி வீட்டு வெள்ளைக்காரன் பாத்துப்புட்டு பரிதாபபட்டு தன்ர வீட்டில இடம் தருகிறான் இரவு படுக்க.. அட அவன் பாவப்பட்டுத்தான் தங்கவிட்டான்னு பார்த்தா அவன் பார்வை ஒரு மாதிரி  இருக்கிறத பார்த்தபிறகு..!? இரவு எங்க நித்திரை வரப்போது..

இப்பிடித்தான் காட்டான் கொஞ்ச நாளுக்கு முன்னம் பழைய நன்பர் ஒருவர சந்திச்சான்.. இவர நன்பேண்டா என்று சொல்வதை விட ரயில் சிநேகம்ன்னு சொல்லலாம்  காட்டானோட எழு எட்டு வருடங்களுக்கு முன்னம் வேலைத்தலத்திற்கு போகும் வழியில் பழக்கம்.. நீண்ட நாட்களின் பின்னர் லாச்சப்பலில் கண்டவர் மச்சான் எப்பிடி இருக்கிறாய் என்று நலம்  விசாரித்தபடியே தான் ஒரு அலுவலா ஏர்போட் போகோனும் உன்ர மாட்டு  வண்டிய தாருவாயோ ஒருக்கான்னான்..?

இப்ப கொஞ்சகாலமா காட்டான் வண்டிய இரவல் கொடுப்பதில்லைன்னு சொன்னா  கேட்கிறானில்ல பிறகுதான் விசயத்துக்கு  வந்தான் மச்சான் ஒரு விசயம் சொல்லுறன் யாரிட்டையும் சொல்லிப்போடாத என்றபடியே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என்ர வருங்கால   மனிசி வரபோறான்னான்.. அட எல்லாருக்கும்தானேடா மனிசி வாரது.. கலியாணம் கட்டுறது.. இதை ஏண்டா ரகசியமா வைத்திருக்கன்னா இல்ல மச்சான் உனக்கு ஒன்றும் விளங்காது.. நீ எதையுமே சீரியசா எடுக்கிறாயில்ல நான் நாளைக்கு ஏர்போட் போகோனும் வேனும்ன்னா நீ வண்டிய ஒட்டிவான்னான் இந்த டீல் காட்டானுக்கு பிடித்துக் கொண்டது ..

அடுத்த நாள் ஒன்பது மணிக்குதான் பொண்னு வருகுது .. இவன் காலை மூன்று மணிக்கே முப்பது தடவ டெலிபோன் அடிச்சிட்டான்.. இப்பிடிதான் புது மாப்பிளைகள்..!?

 எதோ ரெண்டு நிமிசம் லேட்டா போனா அவங்க இவங்களிடம் வரமாட்டன்னு சொன்ன மாதிரி அலக்க பறக்குறாங்க.. அட இவன் தொல்ல  ஒரு பக்கமெண்டா இஞ்சால மனிசி என்னப்பா அவந்தானே இவ்வளவு டெலிபோன் அடிச்சிட்டான் எழும்பி போனா என்ன குறைச்சோ போடுவியல்ன்னா இதுக்கு பிறகு வீட்டில நிக்க காட்டான் என்ன ........ ஆ!?

எட்டு மணிக்கே ஏர்போட் போய் சேர்தாச்சு மாப்பிள ஒரு கோப்பி கூட வாங்கித் தரல்ல திரையில இருக்குற விமான அறிவித்தல்கள பாக்குறார் நானும் உந்த திரைய இதுவரை எப்படி பாக்குறதெண்டு தெரியல மாப்பிளைய கேட்டா முழிக்கிறார் அப்பதான் அவருக்கு ஓடி விளங்கிச்சு சிலோன்ல ஒன்பது மணியண்டு சொல்லேக்க இவர் சரியா கேட்காம விட்டுட்டார்ன்னு அது பிரான்சுல இரவு ஒன்பது மணியாம் அது வரை இஞ்ச நிப்போமோன்கிறார் மாப்பிள..

பாருங்க அவசரபடுகிறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா..?  மச்சான் நீ நிக்கிறண்டா நில்லு நான் வீட்ட போட்டு வாரண்டான்னேன் சரி மச்சான் போட்டு வாடான்னான் .. அப்பதான் மாப்பிளைய உத்து பாத்தன் எனக்கு இவர தெரிஞ்ச ஆரம்ப நாட்கள்ல மாப்பிள முழு மொட்டையடித்துதான் வருவார் நானும் பார்த்தன் இப்ப இதுதானே இஸ்டையில்ன்னு விட்டுட்டன் இப்ப பார்த்தா வயல்ல மாடுமேயாத அறுகுபோல தலை முடி இருக்கு...????? சரியப்பு நடத்து நடத்துன்னு மனசுக்க சொல்லிக்கொண்டே வீட்ட வந்து சேர்ந்தேன்...

அட இரவு போய் பொண்னை கூட்டி வந்து விட்டா வீட்டுக்கு கீழ ரெண்டு பொடியங்கள் நிக்கிறானுங்க சூக்கேசோட அப்பதான் இவன் சொல்லுறான் மச்சான் வீட்டில இடமில்லை.. கொஞ்ச நாள்ல ஒரு வீடு வாங்கப்போறன் அதுவரை இவங்களை நீயே வைச்சிருடா மச்சான்னுறான்..!

நானும் அந்த இடத்தில புது பொண்னுக்கு முன்னால ஏன் தேவையிலாம கதைத்து பிள்ளைய வெருட்டுவான்னு பொடியங்கள கூட்டிக்கொண்டு மாட்டு வண்டிய எடுக்கும் போதுதான் பொண்டாட்டி முகம் ஞாபகத்தில வந்திச்சு..!?

இவங்கள வீட்ட கூட்டிப்போய் என்னுடைய இமேச்ச ஏன் கெடுப்பான் என்று என்ர மச்சானுக்கு ஒரு டெலிபோன போட்டன் அவன் ஏற்கனவே வீட்டில பத்து பேர வைச்சிருக்கான் ..

 நானும் ஒன்றும் செய்ய முடியாத நிலமை அவனோ காசுப்பேய்..!
டெலிபோன எடுத்தவன் என்ன மச்சான் இதுக்குபோய் என்னட்ட கேட்டுகிட்டு கொண்டு வந்து கொட்டிவிடு..!!?? என்று சொல்லும்போதே தெரியுது அவனைப்பற்றி வீட்ட கூட்டிக்கொண்டு போனா பணங்கிழங்கு அடிக்கி வைச்ச மாதிரி கிடக்குறாங்க பொடியங்கள்.. இவங்களையும் அங்க விட்டுட்டு வீட்ட வந்தா சாப்பாடும் ஏறல நித்திரையும் வரல அந்த பொடியங்க மூஞ்சிதான் கண்ணு முன்னால..

ஒரு ஆறு மாதம் இப்படியே போச்சு நான் மச்சான் வீட்டில விட்ட பொடியங்க இப்ப ஊர் அடியுண்டுட்டாங்க பின்ன பத்து பொடியங்களோட இருந்தா ..!?அதில ஒருத்தனை லாச்சப்பல்ல கண்டேன் அண்ணே உங்கட நம்பர் ஒருக்கா தாங்கோண்ண  உங்கட பழைய பிறண்டு கேட்டவர் கல்யாண வீட்டுக்கு சொல்லுறத்துக்குன்னான்..!

வீட்ட வந்து மனிசிட்ட சொன்னன் ஆறு மாதமா ஒன்னா இருந்தவைய ஐய்யர் நாள் பார்த்து கொடுத்திருக்கார் கலியாண வீட்டிற்குன்னேன்.. உங்களுக்கு உதுதான் வேலையாபோச்சு..?  ஏன் அவங்க மனகட்டுப்பாட்டோட இருந்திருப்பாங்க உங்கள மாதிரி எல்லோரையும் எட போடாதீங்கன்னாள் இதுக்கு பிறகு காட்டான் கதைப்பானா..!?

ஒரு நாள் வீட்ட வந்து திருமணபத்திரிகையும் வைச்சான் மாப்பிள
மச்சான் கட்டாயம் கலியாண வீட்ட வர வேண்டும் கல்யாணம் ஒரு ஞாயிற்று கிழமைன்னான்(அது தானே பார்தேன்..?)

இப்ப கொஞ்ச காலமா ஒரு முடிவுக்கு வந்திருக்கோம் நானும் மனிசியும்.. தமிழர்கள் யார் எந்த நிகழ்சிக்கு அழைத்தாலும் அவர்கள் சொல்லும் நேரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்கள் பிந்தி செல்வதென்று..!

ஆமாயா இப்படித்தான் பல விழாக்களுக்கு முத ஆளா போனா அப்பதான் மண்டபத்திற்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்கும்.. விழா முடிந்து சாப்பாடு வர பின்னேரம் மூன்று மணியாகிடும் சிறுவர்கள் பசியால் துடிப்பார்கள் என்று இதுவரை எந்த விழாக்காரர்களும் நினைத்ததில்லை ..!? பஞ்சுவாலிட்டி அப்படி இருக்கிறது எம்மிடம்..

இதில வேற என்ர மனிசி ஒரு கல்யாணத்துக்கு போட்ட சாரிய இன்னுமொன்றுக்கு போட மாட்டாவாம் வீடியோவ பாக்கிறவ இவளிடம் வேற சாரி இல்லையோன்னு ..!? சொல்லுவார்களாம்  இஞ்ச  இப்ப ஒரு கல்யாணத்துக்கு போறதெண்டால் தலை சுத்துது காட்டானுக்கு..

 இதில வேற கல்யாண மண்டபத்துக்கு போய்பார்த்தா ஏதோ வட இந்திய திருமணத்திற்கு வந்து விட்டேனோன்னு சந்தேகமாய் இருக்கு..? காட்டான போல கோவணத்தோட ஊரில நிண்ட மணியண்ணை குர்தாவோ கிர்தாவோன்னு ஒண்டோட நின்று வாடா காட்டான் வாடன்னுறார்..

இல்ல நான் தெரியாமதான் கேக்கிறன் பிரான்சில இருக்கிறாய் இவங்கள மாதிரி போட்டா ஒத்துக்கொள்ளலாம் இல்லாட்டி வேட்டி சட்டையோட நின்னாலும் பரவயில அதென்னப்பு பொம்பளயள் போடுற பஞ்சாவியமாதிரி ஒன்ன போட்டுக்கொண்டு தலையில போடுற துவாய கழுத்தில சுத்திக்கொண்டு கண்றாவியா இருக்கையா கோவணத்தோட உங்கள பார்த்த எனக்கு..!

அட கல்யாணமும் முடிஞ்சு வீட்ட வர ஆறுமணியாச்சு அஞ்சு மணிக்கு மத்தியாண சாப்பாட்ட சாப்பிட்ட எங்களுக்கு இனி இரவுச்சாப்பாடு எதுக்கெண்டு அப்பிடியே செற்றியில சாஞ்சா..

இரவு டெலிபோன் வருகுது புது மாப்பிளயிட்ட இருந்து என்னடா இப்ப முக்கியமான இடத்தில இருக்க வேண்டியவன் ஏந்தான் டெலிபோன் அடிக்கிறானோன்னு பயந்து எடுத்தா டேய்காட்டான்..!? உனக்கு வெக்கம் மான ரோசம் இருக்கோடான்னு கேக்கிறான் நானும் ஒரு நிமிசம் பயந்திட்டன் யாராவது காட்டான அந்த பிள்ளையோட தொடர்பு படுத்தி புது மாப்பிளைக்கு தூபம் போட்டுட்டாங்களோன்னு..!

அதுக்கு பிறகுதான் சொல்லுறான்.. நான் உன்ர மகன் பிறந்த நாளுக்கு எத்தனை காசு தந்தனான் தெரியுமோடான்னான்..!?அட உனக்கு அதவிட முக்கியமான வேலையிருக்கடா போய் அத பாருடான்னா கேட்கிறானா..!

கொஞ்ச நேரத்திலேயே மச்சான் என்ற வார்த்தை டேயாக மாறியது..! இதை கேட்டுக்கொண்டிருந்த மனிசி இஞ்ச தாங்கோ நான் கதைக்கிறேன்னு வாங்கினாள் டெலிபோனை..  அப்பவே புரிஞ்சு போச்சு..!? மாப்பிளைக்கு ஒரு இத்த கயிறு கிடைக்கப்போகிறதென்று.. இஞ்ச வாங்கோ இன்றுதான் உங்கள் திருமணநாள்..ஏன் தேவையில்லாத பிரச்சனைக்கு வாரீங்க..   நானும் நீங்க கதைச்சத கேட்டுக்கொண்டு இருந்தனான் நீங்க சொல்லுறபடி பார்த்தாலும் நீங்கதான் எங்களுக்கு காசு தரவேண்டும்..!?

அட நீங்க எங்கட மகன் பிறந்த நாளுக்கு எழுவது யூரோ தந்தத இல்லைன்னு சொல்லல.. நாங்க உங்கட கலியாணத்திற்கு  ஐம்பது யூரோ தந்தனாங்க மிச்சம் இன்னும் இருவது யூரோ இருக்கு நாங்க உங்களுக்குதர..!

ஆனா நானும் ஒரு கணக்கு போட்டு பார்தேன் இவர் வண்டிய ஏர்போட்டுக்கு கொண்டு வந்தது அத அங்க நிப்பாட்டினதுக்கு கூலி இதெல்லாம் ஒரு ஐம்பது யூரோ வருகுது ..!? நாளைக்கு இவர் வருவார் அத நீங்க உடனே குடுக்கிறீங்க .. இல்லாட்டா தெரியும்தானே காட்டானப்பற்றின்னே டெலிபோன கட் பன்னினாள்..!?

என்ர பக்கம் திரும்பி என்னங்க இப்பிடியான கசவாரங்களிட்ட நீங்க  இனி சிநேகிதம் வைச்சா..!? பிரன்சு சட்டம் தெரியும்தானேன்னாள்..!?  அப்பிடியே போய் அந்த கசவாரத்திட்ட காச வாங்கி ஊரில கோமதியக்கா ரெண்டு பிள்ளையோட கஸ்டப்படுகிரா அவாக்கு அனுப்பிட்டு வாங்கோன்னாள்..

அதுதான் இந்த ரெயில பிடிச்சு பரிசுக்கு போறன்.. அவனிட்ட காச வாங்கி ஊருக்கு அனுப்ப..!?

 அப்பதான் யோசிச்சன் இவனுங்க எல்லாம் காசு காசென்னு எப்படி சாகுறாங்கன்னு காட்டான் இப்ப பணகஸ்ரத்தில இருக்கான் யார் கல்யாணத்துக்கு கூப்பிட்டாலும் அதிகமா ஐம்பது யூரோவிற்கு மேல் போடுவதில்லை..


அட ஒண்ட மறந்திட்டேனே அவனும் ஒரு கணக்கோடதான் வந்தான்னா.!?காட்டாண்ட குடும்பம் கல்யாண வீட்டில சாப்பிட்ட கணக்குன்னு..

 ஐயோ வயுத்த கலக்குது இஞ்ச இருக்கிற சனங்கள நினைத்தா..? இந்த ஸ்டேசன்ல எங்கய்யா கக்கூசு இருக்குது ...!?

Thursday 14 July 2011

கோழி.. கொண்டக் கோழி..!


எரியாட்டி ஒன்றும் எரியாது எரிய வெளிக்கிட்டா தூமசீலையும் சேர்ந்து எரியுமாம்..இப்பூடி என்ற ஆச்சி அடிக்கடி சொல்லுவா இதுக்கெல்லாம் விளக்கம் என்னன்னு அப்ப தெரியாது.. ஆனா கடைசியா கோழி அடிச்சு சாப்பாடு தந்து பிரான்சுக்கு என்ன வழியனுப்பேக்க ஆச்சி சொன்ன வார்த்தைகள் இது..!! எல்லாரும் தன்னை விட்டு பிரிந்து செல்கிறார்களே என்ற விரக்தியில் சொல்லியிருக்கலாம் தூமசீலை என்றாள் கோவணம்ன்னு மட்டும் எனக்கு தெரியும்..!!? ஆச்சியின் வாயில அடிக்கடி பழமொழிகள் அவுட்டு விட்ட நெல்லிக்காய் மூட்டை போல் வந்து விழும்..

இப்ப நீங்க புலக்கு புலக்கென்று அலையிரதால ஆச்சிய அடிக்கடி நினைக்கிறீங்க.. என்னையும் பிள்ளைகளை மறந்துபோறீங்க என்கிறாள் சினுங்கிக்கொண்டே என்ர மனிசி ஆச்சிய பற்றி யார் தவறா கதைத்தாலும் எனக்கு கெட்ட கோவம்தான் வருகிறது அதுவும் என்ற மனிசிய கோழி அமுக்கிற மாதிரி அமுக்கித்தானே ஆச்சி கூட்டியந்தவா இந்த காட்டானுக்காக..!! அதனால ஆச்சிமேல இவளுக்கு ஒரு இனம்புரியாத ஒரு கடுப்பிருக்கிறது..!!?


இதுக்கு மேல கதைத்து தும்புக்கட்டைய ஏன் உடைய வைப்பான்னு காட்டானும் இடத்தை காலி பண்னிட்டான்..! இப்பவெல்லாம் காட்டான் பிரச்சனை முத்தபோகுதென்றா இடத்தை காலி பண்னிடுவான் வர வர காட்டானின் உடம்பில் தாங்கும் சக்தி குறைந்ததுகொண்டு வருகிறது..!?


கோழி என்று சொல்லேக்க எனக்கு அக்கா ஞாபகம்தான் வருது.. நம்ம கிராமத்து வீட்டில கோழி வளக்கிறதெல்லாம் அக்காதான் ஆனா அக்கா கோழிக்கறி சாப்பிட மாட்டா... முட்டையெண்டா வெளுத்து வாங்குவா எங்களுக்கு கோழி சமைத்தால் அக்காவிற்கு இரண்டு முட்டைகள் கட்டாயம் அவித்து வைப்பார்கள்..

அக்காவிற்கு கோழிய அப்புச்சிதான் தவறனையில வாரவங்களோட கதைத்து மலிவா வாங்கி வந்து கொடுப்பார்.. தனிமரம் அடிக்கடி சொல்லுவாரே சகோதர மொழி சகோதர மொழியெண்டு அத பேசுறவங்கதான் அப்புச்சியிண்ட கைய முறிச்சு நீ வீட்டோட மாப்பிளையா போன்னு அனுப்பி வைச்சாங்களாம் இது நான் பிறக்க முன்னம் நடந்த கலவரம்..!?அப்புச்சி அடிக்கடி சொல்லுவார் கைய தடவியபடியே..  ஆனா அப்புச்சி ஒற்ற கையாலேயே சுருட்ட சுத்துரதென்ன மம்பட்டிய பிடிக்குறதென்னன்னு எல்லா வேலையும் செய்வார்..

வீட்டில கோழி சமைக்கிறது வலுகுறைவு ஒன்றில் கோழிக்கு வருத்தம் வந்து ஒரு கோழி சாகோனும்..!? இல்லாட்டி தீபாவளி வரனும் அதுவும் இல்லேன்னா நெருங்கிய சொந்தங்கள் கல்யாணம் செய்து விருந்திற்கு அவர்களை கூப்பிட வேண்டும்..?

என்ன இருந்தாலும் சமைக்க கோழிய பிடித்தா அக்காவிற்கு வைச்சது வைச்சபடி ஐம்பது ரூவா கொடுக்கோனும் நானும் உந்தகாச ஆட்டைய போட தேடி களைத்துபோனதுதான் மிச்சம் இண்டைக்கு வரை அந்த காச எங்க வைத்திருந்தாலெண்டு நான் கண்டு பிடிக்கவில்ல காட்டாண்ட தொழில்ல நேர்ந்த பெரிய அவமானம் அதுதான்....!!?

அப்புச்சி 1,2, மாதகுஞ்சுகளா கொண்டு வந்து கொடுக்கேக்க அக்கா மூஞ்சிய பாக்கோனும்..!! ஓடிபோய் கயிறு கொண்டு வந்து குஞ்சுகள கட்டிவைப்பாள் இரண்டு மூன்று நாளைக்கு... அதுக்கு பிறகு குங்சுகள பிடித்து முதலில் அவற்றுக்கு அடுப்படிய காட்டி காட்ட போய் வீட்ட வா..??  காட்ட போய் வீட்ட வா..?? என்றபடியே வீட்டையும் சுத்தி காட்டுவா ஆமாய்யா அப்பதான் அதுகளுக்கு வீடு பழக்கமாகுமாம்..?

இத எல்லாம் நாங்க பார்துகொண்டிருப்போம் இன்னும் எவ்வளவு நாள்ள தீபாவளி வருதெண்டு யோசித்தபடியே...! வாங்கி வந்த கோழிகளில் சேவல்கள் அதிகமானால் கோவில் திருவிழா முடிந்தவுடன் அவற்றிக்கு சங்குதான்..!!

வளர்ந்த சேவல்களை பிடிப்பதே ஒரு கலை இரவில் வேப்ப மரத்தில் தூங்கும்போது வெளிச்சத்த கண்னுக்கடித்து பிடிக்கோனும் இதில பிசகினா  காலையில காட்டான் சேவலுக்கு பின்னால் ஒடுவத வைத்தே இண்டைக்கு வீட்டில என்ன கறியெண்டு கண்டு பிடித்துவிடுவார்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள்..

ஆனா ஆச்சி இருந்தபடியே சேவலை பிடிப்பா.. கொஞ்ச அரிசிய வாசல்ல இருந்து வீட்டு அறைவரை போடுவா கோழிகள் அவற்றை தின்றபடியே அறைக்குள் நுழைவினம் மெல்ல கதவை சாத்தியபடியே காட்டான் இஞ்ச ஓடிவாடான்னா கறிச்சேவல் காட்டான் கையில..! பிறகென்ன பின்வளவில இருக்கிற பூவரச மரத்துக்கு கீழ கிடங்க வெட்டுறதுதான்.. (தனிமரம் இப்ப தெரியுதா பூவரசம் பூவ கோயிலுக்கு ஏன் எடுப்பதில்லைன்னு..!?) மேல்கொப்பில தூக்குகயிறு ரெடியாக்கினா.. ஆச்சி வருவா கோழியின் கால்களை ஒரு கையாலும் செட்டைகளை மறு கையாலும் பிடித்தபடியே  காட்டான் ரெடியாவான் கோழியுரிக்க..! கோழியோட வந்த ஆச்சி பக்கத்தில உள்ள பனைமரத்த பார்பா...!!? இஞ்ச காட்டான் கட் பண்னுறான் கொலைக்காட்சிகளை சென்சார் அனுமதிக்காதாம் ..?

 பிரான்ஸ் வந்து சப்பிட்ட கோழியெல்லாம் பல்லில்லாதவங்களுக்குகாக வளர்கிறாங்களோ என்று என்னை சதேகபடவைக்கிதுது ஆமாய்யா கோழி இறைச்சியெண்டா புளியங்கொட்ட சப்புற மாதிரி இருக்கோனும்...!

இப்பிடியே போனா காட்டானின் நாக்கு செத்துடும்ன்னு காட்டானுக்கு பயம் வந்திட்டு அப்பதான் காட்டானுக்கு பழம் பெரும் பெருச்சாலி  ஒன்று அறிமுகமாச்சு இஞ்சேயும் ஊர்கோழி இருக்கடா என்னட்ட மாட்டு வண்டியில்லேடா  நீ வண்டிய கொண்டு வந்தா நான் அந்த இடத்த காட்டுறேண்டான்னு பேரம் பேசியது ...!?
காட்டானுக்கு சொர்கமே திரும்பி வந்த மாதிரிபோச்சு...!! அண்டைக்கு காட்டான் தொடங்கினான் வேட்டய இன்று வரை நிக்கவில்லை .. காட்டானுக்கு அங்க போறதெண்டா ஒரு சுகம் வாருங்கோ எங்கட ஊர் வயல் வெளிகள் மாதிரியிருக்கு உத கடந்துதான் காட்டான் போவான்..!

 ஏன் என்ர மாப்பிளைகளுக்காக அந்த இடங்கள காட்டக்கூடாது..!? என்று ஒரு ஆசை வந்ததன் வினை வாருங்கோ என்னோடு இதுதான் காட்டான் போற பாதை ... இதுதான் காட்டான் பிடித்த கோழி.. இவர்தான் கோழிய நிறுக்கிறவர்....கோழி விலை கிலோ மூன்று யூரோ இந்த கோழி நாலு கிலோ இந்த மிசின் பக்கத்தில நிக்கிறாரே இவர்தான் முதலாலி என்ர பத்து வருட நண்பேண்டா...?

இந்த மிசினில சுடுதண்ணி கொதிக்குது இஞ்ச கரண்டுல ஒரு சின்ன மிசினிருக்கு ...ஆச்சி பனையில செய்கிற வேலைய இந்த பட்டன்னு செய்யும் அதுக்கு பிறகு இந்த  சுடுதண்ணிக்குள்ளார கொஞ்ச நேரம் விட்டுட்டு பக்கத்தில உள்ள மிசினில விட்டா செட்டைய எடுத்து தரும்

ஆனா காட்டான் சுடு தண்ணிக்க போட விடமாட்டான் ..!? வேட்டிய மடிச்சு கட்டிற்று வேலைய தொடங்கினான்னா பத்து நிமிசத்தில முடிச்சிடுவான் வேலைய என்ன மாபிளங்கா காட்டான் எப்பிடி கோழிய உரிச்சான்னு பாக்கபோறீங்களா உந்த வேலை நம்மட்ட வேகாது பாரீஸ் பொலிசில கம்பி எண்ண காட்டான் என்ன ......!?ஆ

ஊரில ஒரு சொல்வட இருக்கு அவள தொடுவானேன்.. கவலைப்படுவானேன்னு..? அதபோல உங்களுக்கு கோழி உரிப்ப காட்டுறன்னு .. கோழிய வாங்கிட்டான் இந்த காட்டான்..! இத வீட்டில கொண்டுபோனா மனிசி சொல்லும் நீயே கறி குழம்ப வையன்னு சரி மாப்பிளங்கா.. வந்தது வந்திட்டீங்க கறி எப்படி இருக்கென்று பாத்திட்டு போங்க..!!?

காட்டான் கறிய எப்பவும் இரண்டா பிரிச்சுத்தான் வைப்பான் கோழி தசைகள வார்ந்து எடுத்து ஒருக கறியாக தண்ணீர் விடாது சமைப்பான்...!(இது சைட் டிஸ்சுக்கு மிகவும் ஏற்றது..!'?)

அடுத்தது எலுப்புகள போட்டு தண்ணீர் சேர்த்து குளம்பா வைப்பான்... இது இரவு சாப்பாட்டுக்கு அதாவது புட்டு அல்லது இடியப்பத்திற்கு நல்லது  இத எப்படி சமைக்கிறதென்று கேட்கிறீங்களா ...!?மாப்பிளங்கா ஒரு ஆண் சமைக்க தெரியாதெண்டா எப்படியப்பு நீங்கள்லாம் இந்த காலத்தில கன்னாலம் கட்டி குடும்பம் நடத்த போறீங்க ஓடிப்போய் சமையல பற்றி அப்பாவிடம் கேட்டுக்கொண்டு வாங்க....!!!?

Saturday 9 July 2011

காட்டான் பிடித்த கிளி..

காட்டான் பாரீஸ் வந்து விட்ட கொஞ்ச காலத்தின் பின் தான் வைத்திருந்த திருக்க வண்டியை ஆச்சி வித்திட்டா என்று கேள்விபட்டவுடன் உண்ணாவிரதமிருக்க தொடங்கிவிட்டான்..? ஆனால்  வாழ்கை முழுவதும் மூக்கு முட்ட ஊர் அரிசிசோத்த சாப்பிட்டவனுக்கு இதில வேற அவண்ட நாய்கும் அதே அளவு வைக்க வேண்டும் இல்லாவிட்டால் வீடே சுனாமி வந்த புக்குசிமா மாதிரியாகிவிடும்..அதனால்
காலையில் தொடங்கிய உண்ணாவிரதத்த மாலையே முடித்துவைத்தான் ..!

காட்டான் பசி தாங்க மாட்டான் இப்ப நினைத்து பார்த்தால் தழிழ் ஈனத்தலைவர்(எழுத்து பிழை இருந்தா மன்னிச்சிடுங்க உங்களுக்கு தெரியும்தானே காட்டானின் கல்வியறிவு..!) இருந்த உண்ணா விரதத்தை விட கூட நேரம் இருந்திருக்கிறான்...!!?

அப்புறமா ஆச்சி டெலிபோன்ல சொன்னா  அட காட்டானே அத நான் வித்தது கந்தயர் வீட்டுக்குதான் அங்க ஒரு அழகான கிளி இருக்கடா எதிர் காலத்தில அந்த கிளிய உன்ர கையில பிடிச்சு கொடுக்கலாமெண்டு யோசிக்கிறன்..? அப்ப நீ வீட்டோட மாப்பிளயாய் இருக்கேக்க அந்த திருக்க வண்டி உதவும்டா..நீ கவலையை விட்டுட்டு வேலையை பாரடான்னா..

அதுக்கு பிறகு காட்டானுக்கு எங்க வேல ஓடபோது..!காட்டானுக்கும் அந்த கிளிய நல்லா தெரியும் அட அந்த கிளி காட்டாண்ட தங்கச்சியோடதான் படித்தது ஆனா ஊரில காட்டானை கண்டா..!!?

மாப்பிளங்களா அது வேற ஒன்னுமில்ல அவ அப்பண்ட தோட்டத்தில வெள்ளரிக்காய்கள் களவு போகுதாம்.. இதில காட்டான் சம்பந்தபட்டிருக்கலாமென யாரோ ஒரு நல்லவாயன் போட்டு கொடுத்திட்டான் இதுக்கெல்லாம் நாங்க என்ன மறுப்பறிக்கையா கொடுக்க முடியும்??இல்ல அந்த அறிக்கையை எழுதவாவுதல் காட்டானுக்கு தெரியுமா..?

இப்ப ஆச்சி திருக்கையை அட்வான்சா கொடுத்து காட்டான்மேல் இருக்கும் காட்டத்த குறைச்சு கிளிமேல கண்ண வைச்சிட்டா என்றவுடனேயே காட்டாண்ட பின் பக்கமெல்லாம் லா..லா என்று வெள்ள உடுப்பில பறக்கினம் தேவதைகள் ...!!

என்றாலும் காட்டானுக்கு ஒரு சந்தேகம் அந்த கிளி யாழ்பாணத்தில பெரிய படிப்பெல்லாம் படிக்க போகுதாமே என்றேன்  ஆச்சியிடம் அட காட்டுப்பயலே உனக்கென்னடா குறைச்சல்.!? நீயும் பெரிய பெரிய காரெல்லாம் வைச்சு ஓடுரேயே அவங்கதான் காட்டானின் குடும்பத்தில வர்றத்துக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமெண்டா அப்பதான் காட்டானுக்கு ஓடி விளங்கிச்சு..!!ஆச்சி படமனுப்பு என்று அடிக்கடி கேட்கேக்க காட்டான் புறாகூடு வீட்டில படமெடுத்து அனுப்பினா ஆச்சி கவலைப்படும்ன்னு ரோட்டில் பாக்கிங்பண்னி இருக்கும் ஒவ்வொரு காருக்கும் முன்னால நின்னு படமெடுத்து அனுப்பியது..!

என்றாலும் காட்டானின் மனசுக்க பிரான்சுக்கு வந்ததில ஒரு லாபம்..?பெரிய படிப்பு படிக்கும் பொண்டாட்டி கிடைக்கப்போறாள் அதுக்கு காட்டான் தன்னை தயார்படுத்த தொடங்கினான்..!?

அதன் முதல் படி ஆச்சி நம்பிக்கொண்டு இருப்பதுபோல் நானும் கார் வாங்கினால் என்ன..?மாட்டு வண்டியிலேயே காலத்தை கழித்தவனுக்கு கார் கனவு நடு இருட்டில துரத்துர நாயப்போல துரத்த தொடங்கியது..!?

அப்பதான் காட்டானுக்கு ஒரு உண்மை விளங்கியது பிரான்சில கார் வாங்குறது ஒன்றும் பெரிய விசயமில்ல ஊரில பல்லி முட்டா வாங்கிறமாதிரி வாங்கலாம் ஆனா அத ஓட்ட லைசன்சு வேனுமாம்..!அட இந்த காட்டான் மாட்டு வண்டி ஓட்டும்போது ஒரு கம்புதான் வைத்திருப்பான் வேற ஒன்றுமே தேவையில்ல..  இப்ப லைசன்சு வாங்கோனும்னா பள்ளிக்கூடம் போகவேனும்ன்னுட்டாங்க இஞ்சதான் காட்டானுக்கு வகுத்த கலக்கதொடங்கியது சின்ன வயசில பள்ளிக்கூடம் போவென்றாவே காச்சட்டையை நனைக்கிற காட்டான் ஒரு கிளிக்காக பள்ளிகூடம் விரும்பி போக தொடங்கினான்..!!

அடிப்படையிலேயே இங்கிலீசு தெரியாத காட்டான் பிரன்சை பக்கென்று பிடித்ததற்கு காரணம் வேலைத்தலத்தில் எல்லோருமே பிரன்சுக்காரர்கள் அத்தோட நாலைஞ்சு பொண்ன்னுங்க வேற அவங்க எதைப்பற்றி கதைத்தாலும் காட்டானிக்கு தன்னைப்பற்றிதானோ கதைக்கிறார்கள் என்று யோசிப்பான் அதனால காட்டான் பிரன்சை மெல்ல மெல்ல அவர்களுடன் கதைத்து பழகிற்றான் காட்டான் அடிப்படையிலேயே வெக்கப்படமாட்டான் அதுவும் அவனுக்கு கை கொடுத்தது ..!

என்றாலும் பள்ளிகூடத்தில சொல்லி தருகிறது விளங்குவது கஸ்ரமாகத்தான் இருந்தது அப்பதான் இந்த வாத்திமார்களின் சைக்கில் காத்த புடிங்கி விட்டதெல்லாம் தேவையில்லாமல் ஞாபகபடுத்திசென்றன..!?

என்றாலும் காட்டானா கொக்கா எழுத்து தேர்வு நடந்த கோலில் நின்று எல்லோரையும் நோட்டம் விட்டான் இலுப்பகட வைரவரை நினைத்துக்கொண்டு  ஒரு சைனீஸ் பெண்னுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்..!?தேர்வும் முடிந்தது நாற்பது கேள்விகளுக்கு முப்பதொன்பது சரியாக செய்து விட்டான் இந்த காட்டான் சந்தோசத்தில் அந்த பெண்னை திரும்பி பார்த்தான் ஒரு வித நன்றியுணர்வோடு ஆனால் இந்த காட்டானுக்கு இன்றும் விளங்கவில்லை ஏன் அந்த பெண் தேர்வில் தோற்றாள் என்று..!!

அடுத்த தேர்வு காரை ஓட்டி காட்டுவது ஏனோ தெரியவில்லை காட்டான் இதில சுலபமாக வென்று விட்டான்..!??அப்புறமென்ன ஊரில சங்க கட கூப்பன் காட் போல ஒன்றை தந்து இதுதான் உன்ர லைசன் இனி நீ கார் ஓடலாமென அனுப்பி வைத்தார்கள்..

  அடுத்து கார் வாங்கும் படலம் ஒரு பழைய R19 காரையும் வாங்கிவிட்டேன் அதன் முன்னால நின்று ஒரு படத்த எடுத்து ஆச்சிக்கு அனுப்பினா அங்க இருந்து அச்சி சொல்கிறா என்னடா இந்த காட்டானுக்கு என்ன கிறுக்கு பிடிச்சிடிச்சோ? நல்ல நல்ல காரெல்லாம் வைச்சிருந்தான் இப்ப என்னடான்னா பேரீசம் பழத்திற்குகூட பெறுமதியில்லாத கார் வாங்கியிக்கிறான்னா..!!

ஆனா பாருங்கோ ஆச்சி கிளிய பிடிச்சு பிரான்சுக்கு அனுப்பும்வரை அந்த படத்த கண்னுல காட்டல்ல கிளிக்கு..!? இப்பதான் யோசிக்கிறன் கிளி படத்த பார்த்திருந்தா ஏர்போட்டிலேயே யோசித்து பார்த்து பறந்திருக்கும்..?இப்ப பாருங்கோ இந்தகாட்டானோட இன்னும் ரெண்டு காட்டான் குட்டிகளை பெத்துபோட்டு....விட்டு சொல்லுறாள் இஞ்ச பாருங்கோ இரவுசாப்பாட்டிற்கு இடியப்பத்த அவிச்சு வையுங்கோ நானும் லைசன்சுக்கு படிக்க பள்ளிகூடம் போட்டு வாரேன்கிறாள்..! ஆச்சிய நினைச்சிகொண்டு இரவுச்சாப்பாட்ட ரெடி பண்னபோறேன்..அது சரி கறி என்ன வைக்கிறதெண்டு சொல்லாம போட்டாளே.. மாப்பிளைங்களா இண்டைக்கு நான் அடிவாங்காம படுக்கபோறதில்லைன்னு தெரியுது எப்புடி இருந்த நான்.!!!?

Wednesday 6 July 2011

ஆசை நூறுவகை...!!??

நீண்ட நாள் எனக்கு ஒரு ஆசை பாரீசின் புகழ் பெற்ற தமிழ் கடை வீதியில் அந்த ஆசையை நிறை வேற்றுவதற்காக காத்திருந்தேன்..

ஆடி மாத சம்பளமும் ஆடியசைந்து என் கைக்கு வர புறப்படி  விஸ்வமடுவிற்கு என்ற மாதிரி (அதை விட கொஞ்சம் பணிவாக..!?)மனைவியிடம் கூறி விட்டு  பிள்ளைகளை தயார் படுத்தினேன் அட ஆமாயா உந்த வேலையெல்லாம் நான் தான் செய்ய வேண்டியிருக்கு..

என்னுடய  மனைவி இதை செய்ய சென்றால் பொடியங்கள் அனுமதிப்பதில்லை கேட்டால் இவங்கள் குட்டி காட்டான்கள் அப்பா செல்லம் என்கிறாள் இதுவும் ஒரு யுக்திதானப்பு..! அப்புறம் வண்டியை எடுத்துக்கொண்டு பாரீஸ் வந்து சேர்ந்தேன் அட என்ர மாட்டு வண்டிக்கே பாரீசில் மணித்தியாலத்திற்கு இரண்டு யூரோக்கள் வசூலிக்கிறார்கள் என்ன கொடுமை சார் இது..!?  இத தட்டிக்கேட்க ஆளில்லையா..?இதற்காகவே  வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரீஸ் மேயர் பெர்தொன் து நோயே சார்ந்திருக்கும் பார்டி சோசியால் கட்சிக்கு வோட்டு போடுவதில்லை என என்ர அப்புச்சி போட்டோ மேல் சத்தியம் செய்திருக்கிறேன்..??

பின்ன என்னப்பு இரண்டு மணித்தியாலங்கள் மாட்டு வண்டிய நிப்பாட்டியதற்கே நாலு யூரோக்கள் காலி  சம்பளம் வாங்கியதிலிருந்து பத்து நாளைக்கு இதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை இந்த காட்டான்..!!?(அதுக்கு பிறகு வரவு எட்டணா செலவு பத்தணாதான்..!?)ஆனால் அதை விட இந்த காட்டானுக்கே ஆட்டையை போட்டு விட்டார்கள் நம்மவர் நம்மவர் என்று கூவிகொண்டு திரியும் நம்மவர்கள்..?? ஆமாயா கடைகளில் சாமான்கள் வாங்கும் போது மிக கவனமாய் இருங்கோ மாப்பிளங்க... இவர்கள் எல்லா மரகறிகளுக்கும் ஒரே விலையை ஏன் அடிக்கிறார்கள்..? அதுவும் ஒரே சாமான்களை இரண்டுதரம் அடிக்கிறார்கள்..!  நான் கேட்கிறேன் இந்த காட்டானாலேயே ஒரு பதிவை தமிழில் போட முடியுமெண்டால் உங்கள் பண பட்டறை இயந்திரத்தை ஏன் ஒவ்வோர் பொருட்களின் பெயர்களையும் தனி தனியாக அடிக்க முடியாது..?

ஆம் இவர்கள் ஆட்டையைபோட வேண்டுமென்றே முடிவெடுத்து விட்டே பட்டறையை தொடுகிறார்கள் போலும்?? இதல் இவர்களிடம் பணிபுரியும் புதிதாய் வந்தவர்களை நினைத்து பார்கவே பயமாக இருக்கிறது இவர்களை பார்கும்போது வேண்டாம்...!?உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்..!?எனது மகனுக்கு ரொட்டி(பரோட்டா)என்றால் உயிர் லாச்சப்பல் செல்லும் ஒவ்வொரு முறையும் அவனுக்கு இவற்றை வாங்கி கொடுக்காமல் வருவதில்லை வழமையாய் செல்லு சாப்பாட்டு கடைக்கே சென்றேன் அது கிழமைக்கொரு முதலாளி மாறும் கடபோலும்..? இரண்டு ரொட்டிக்கு இரண்டு யூரோக்களும் கொஞ்ச பருப்புக்கு இரண்டரை யூரோக்களும் எடுத்து எனை சிதம்பர சக்கரத்தை பேய் பார்தது போலாக்கிவிட்டார்கள்.

இதை விட இஞ்ச ஒரு கூத்து நடந்தது இலங்கை பொருட்களை புறக்கனிங்கோ புறக்கனியுங்கோவெண்டு நானும் இரண்டாண்டுகளாக இலங்கையிலிருந்து வரும் சோம பாணங்களை தொடுவதில்லை..? அட புறக்கனிக சொன்னவங்களே அத விக்கும்போது இந்த காட்டான் என்ன கேனையனா அவர்கள் கடயிலேயே அந்த சோம பாணத்த வாங்கிக்கொண்டு வரும்போதுதான் காட்டானின் ஆசை??நினைவுக்கு வந்தது அவர்களிடமே பாக்கு வெத்தலை சுண்னாம்பு வாங்கி போட்டுக்கொண்டு வெளியில் வந்து துப்புவதற்கு இடத்தை தேடினால் இந்த காட்டானே வெக்கபடுமளவு மரத்தை சுத்தி துப்போ துப்பென்று துப்பி வைத்துள்ளார்கள் இந்த காட்டானின் முன்னோடிகள்..இதோ காட்டான் சுத்தி சுத்தி துப்பிய இடம்..?