வணக்கமுங்கோ............
இப்பிடித்தாங்கோ ஒரு நாள் ஊரில என்ர சிவலயயோட வீட்ட போகேக்க அங்க அப்புச்சி தலைமையில அவசர அமைச்சரவை கூட்டம் நடந்துகிட்டிருந்தது.. அதில அடிக்கடி காட்டான்னு என்ர பேர சொல்லேக்க எனக்கு விளங்கீற்று இண்டைக்கு என்னைப்பற்றித்தான் முக்கிய மந்திராலோசனை நடக்குதெண்டு..
இதில வேற எனக்கு உள்ளூர ஒரு பயம் விளம்பரத்துக்கு எழுதி போட்ட மாதிரி எழுதி எல்லா பொம்புளபிள்ளைகளின் சைக்கிளிள் போட்டு வைச்ச கடிதங்கள யாராவது கொண்டு வந்து கொடுத்திட்டாங்களோன்னு...
அப்புறமா அப்புச்சி கூப்பிட்டார்.. என்னன்னு போனா என்னடா காட்டான் உன்ர சிவவல கந்தையண்ட காட்டுக்குள்ள மேய்சிட்டாம் நீ அப்ப என்னத்த புடுங்கிக்கொண்டு இருந்தான்னார்.. இப்பிடித்தாங்க என்ர சிவலயன் எப்பவும் என்னை மாட்டி விட்டுடுவான்..
இதில வேற காலையில கந்தையர் காட்டுப்பக்கமாதான் சிவலய ஓட்டிக்கொண்டு போகோனும் அவன மேயவிட.... நானும் என்ர யிம்மியும் சிவலய பிடிச்சுக்கொண்டு கந்தயர் காட்டுப்பக்கம் போனா வடலீக்க செம்போட ஒதுங்கிற கந்தையர் முடிச்சது பாதி முடிக்காதது பாதின்னு ஓடிவருவார் தன்ர காட்ட மேயவிடுடுடவானோன்னு ஒரு பயத்தோட..
நாங்க ஒன்னும் சிவலய சும்மா கூட்டிற்று போறதில்லைங்கோ பழைய நீத்து பெட்டிய(புட்டு அவிக்க பனை ஓலையால் செய்த ஒரு கூம்பு வடிவிலான பாத்திரம்...!!??)அவன் வாயில கட்டித்தான் கொண்டுபோவோம் அவன் அதையும் சாப்பிட்டுவிட்டு கந்தையர் தோட்டத்திலேயும் கொஞ்சம் மேஞ்சிட்டான் அதுதான் இப்ப நடந்த அவசர கூட்டம்...
கந்தையர் வந்து கூச்சல் போட்டது அப்புச்சிக்கு கொஞ்சம் சூடாப்போச்சு சிவலயனயே மேய்க்க தெரியாத உனக்கு எதிர்கால வாழ்க்கை இஞ்ச சிரமம் உன்ன வெளிநாட்ட அனுப்ப போறம்ன்னு முடிவெடுத்திட்டோம்ன்னார்.. அப்புச்சியிட்ட இன்னோரு சான்ஸ் கேட்டேன்.. சிவலயனபோல பத்து பேர மேய்ப்பேன்னு உந்த கதையெல்லாம் வேண்டாம் இப்ப நான் சொல்லுறத செய்பாப்போம்ன்னு ஊற வைச்ச எள்ளு புண்ணாக்க நிறைய தண்ணி விட்டு தந்தார் இத உன்ர சிவலயன் முழுக்க குடிச்சா மேற்கொண்டு பேசுவோம்ன்னார்..
நானும் சிவலயனிட்ட அப்புச்சி தந்த புண்ணாக்க கொடுத்தேங்க.. அண்டைக்கு எனக்கு அடிச்சாங்க சிவலயன் ஆப்பு.. ஆமாங்க மூக்க புண்ணாக்கு தண்ணியில விட்டு சுழியோடி புண்ணாக்க மட்டும் சாப்பிட்டுட்டு தண்ணிய விட்டுட்டான்யா என்ர சிவலயன்....
அதுக்கு பிறகு அப்புச்சியிண்ட பேச்ச மீற முடியாமதாங்க நான் வெளிநாடு வந்தேனுங்க... என்ன அனுப்பேக்க மணியண்ணயிட்டதான் அனுப்போனும்ன்னு பிரான்சுக்கு அனுப்பி வச்சாங்க... பிரான்ஸ் வந்த முதல் நாள் மணியண்ண கேட்ட கேள்வி.. என்னடா காட்டான் உன்ர கோத்தைக்கும் கொப்பருக்கும் (அம்மா,அப்பா) அறிவு இருக்கோன்னு..
ஏன்னா நான் சின்ன புள்ளையாம் தனியா இப்பிடி அனுப்பக்கூடாதாம்.. அப்ப எனக்கு ஆகுலனை விட அரும்பு மீசை கூட இருந்திச்சு... அதவிட 18வயசு வேற... நானும் வந்தபோது இஞ்ச நாந்தான் வயதில குறைஞ்சவன்...
இப்ப நானும் பாக்கிறேன் 12,13 வயசி பொடியள தனியா அனுப்புறாங்க... அட மாடு மேச்ச காட்டானே இஞ்ச வரேக்க அவங்க வரக்கூடாதோன்னு நீங்க கேப்பீங்க.. யாரையா வரவேண்டாம்ன்னு சொல்லுறது ஆனா ஒண்ட மட்டும் யோசிச்சு பாருங்கோ இப்பிடி வருகிற பொடியங்கள அவங்க சொந்தக்காரங்க தன்ர பிள்ளைபோல நடத்துவார்களா..!!? அடுத்து வருகிற பொடியங்க கொஞ்சம் குழப்படியானவங்கன்னா இஞ்ச கண்டிச்சு வளர்க்க முடியுமோ..!!??
சில தாய்மார்கள் இப்பிடி வருகிற பொடியங்கள வீட்ட வித்து காணியவித்து அனுப்புறாங்க அங்க காச கொடுத்தவன் இறுக்கேக்க இவங்க இஞ்ச இருக்கிற சின்ன பொடியன இறுக்குவாங்க...!!!? அவங்க என்ன செய்வாங்க..? தொல்லை தாங்க முடியாம வயச கூட்டி விசாவ பதிவாங்க... விசாவும் கிடைச்சு வேலை செய்த முதல் மாச சம்பளத்தையும் பார்தா அவங்க என்ன செய்வாங்க.. அதுவும் எதையுமே செய்யும் சுதந்திரமுள்ள ஒரு நாட்டில..!!!??
தவறானபாதையில சிறுவர்கள போக விட்டுட்டு அங்க இருந்து குய்யோ முறையோன்னு கத்துறத்தில ஒரு பிரயோசனமும் இல்லீங்க.. ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..
ஒரு சிறுவனை அவன் வயதில் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கவிடாது.. குருவி தலையில் பணங்காய வைக்கும் எங்கட ஆட்கள் சொல்லக்கூடாது எங்கட பொடியங்கள் வன்முறைப்பாதையில் செல்கிறாங்கன்னு... அதை சொல்ல இப்பிடியான சிறுவர்களை அனுப்பும் மனிதப்பேய்களுக்கு உரிமையில்லை..??
எனக்கும் தெரியும் இப்பிடி வரும் சிறுவர்கள் மட்டும்தான் இப்பிடி செய்கிறார்களா..? இங்கு பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்காது வேலை வேலைன்னு ஓடுபவர்களின் பிள்ளைகளில் சிலரும் இப்படி இருக்கிறார்கள்தான் அதை நான் மறுக்கவில்லைத்தான்... ஆனால் இவர்களை கண்டிச்சு திருத்தக்கூடிய சூழலலில் இங்கு பெற்றோர் இருப்பதால் திருந்துவதற்கு ஓரளவு சாத்தியம் இருக்கின்றது... ஆனால் பெற்றோர்களே இல்லாமல் தனித்து இருக்கும் சிறுவர்களை யார் மாற்றுப்பாதையில்அழைத்துச்செல்வது..?
இதெல்லாம் காட்டான் சொன்னா எடுபடப்போறதில்லைங்கோ... ஆனா இத எழுத காரணம் என்ன பாதிச்ச ஒரு சம்பவம்தாங்கோ..என்ர மணியண்ண எப்பிடின்னா ஊரில சொல்லுவாங்களே பக்கத்து இலைக்கு பருப்பு வேணுன்னு(தனக்கு இலையில் பருப்பு இல்லைன்னா சாப்பாடு பரிமாறுபவரை அழைத்து தம்பி பக்கத்து இலைக்கு பருப்பு இல்லைன்னு சொல்லுவாங்க அவரும் பருப்புச் சட்டியோடு வரும்போது வந்தது வந்திட்டீங்க எனக்கும் போடுங்க என்பார்கள்..!!??) அதபோல என்னடா காட்டான் ஒருகிழமைதான் லீவெண்டு பரிசில நிக்கிறாய் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு லண்டன் பக்கம் போகலாமேன்னார்... நானும் பார்தன் இவருக்கு ஒரு சொந்தகாரன் லண்டனில இருக்கிறார்தானே ஓசியில ஓட்டுமடம் போகலாம்ன்னு...!!? லீவ பிள்ளைகளோட இன்பச்சுற்றிலா சுத்தி வருவோமெண்டு மாட்டுவண்டிய எடுத்தா ஒரு உரவாக்கோட மணியண்ண வந்து நிக்கிறார்.. அட காட்டான் சின்னவங்களோட போகேக்க நீ கஷ்டப்படுவாய் அதுதான் நானும் உன்கூட வர்ரேன்னுட்டார்...!!??
இனி என்ன செய்ய முடியும் மாட்டு வண்டியில மணியண்ணையையும் கூட்டிக்கொண்டு லண்டனுக்கு போனா அங்க அவங்கள் மணியண்ணைக்கு நெரிங்கிய சொந்தமாம்.. மணியண்ணையின் மனிசியின் சகோதரியின் கணவரின் தாயின் அண்ணனின்.......... வேண்டாம் விட்டுடுறன் இப்பிடிபட்ட நெரிங்கிய சொந்தக்காரங்களின் வீட்டில் நான் கண்ட காட்சிதான்யா என்ர மனச குடைஞ்சு இந்த பதிவ எழுத தூண்டியது....!!
அந்த வீட்டில் ஒரு நாப்பது நாப்பத்தைந்து வயசு மதிக்கக்கூடியவர் ஒரு பத்து பதினொன்னு வயசு மதிக்கதக்க தன்ர மகளோடு வந்து இருக்கிறார்.. நமக்குதானே பேச்சுக்கு ஒரு ஆள்தேவை எல்லோரும் வேலை வேலைன்னு ஓடுறாங்க இவர் வந்து ஒரு மாசம் பேச்சுக்கு நடுவே நான் கேட்டேன் என்னங்க உங்க மனிசி இல்லையோன்னு அவரு சொல்லுறார்.. இஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுவம்ன்னு...!!?? எப்ப ..!!?? முதல்ல இவருக்கு விசா கிடைக்கோனும்.. அதுக்கு பிறகுதானே ஸ்பொன்சரப்பற்றி கதைக்கலாம்.. இஞ்ச எவ்வளவு பேருக்கு பத்து பதினைஞ்சு வருசமா விசா இல்லாம இருக்கிறாங்க...!!?
என்ர மனச குடையிற கேள்வி என்னான்னா பூப்படையும் வயசில இருக்கிற தாயின் ஆலோசனைகள் தேவைப்படுகிற ஒரு சிறுமியை இங்கு தாயில்லாமல் அழைத்து வரவேண்டிய தேவை என்னையா.. ஏன் இவர் மட்டும் தனியாய் வந்து மற்றவர்களைபோல் விசா கிடைத்தவுடன் குடும்பத்தையே அழைத்திருக்கலாமே..!? அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!
நாளைக்கு நல்லதபோல ஒரு கெட்டது நடந்தா யாரையா பதில் சொல்லுறது..!? இந்த பச்ச புள்ளைய அனுப்பியதாய் ஒருகணம் நினைச்சுப்பாத்தாவா..
இதன் பாதிப்புக்களை... ?? வெளிநாட்டு மோகத்திற்கு ஒரு அளவே இல்லையாப்பா..??
எனக்கு இந்த முட்டாள் பெற்றோறை இப்பிடி எழுதி திட்டுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுப்பா..நாங்க எங்க போறோமையா....!!??
நல்லா பாருங்கையா மணியண்ண இதுக்குள்ள தான்யா இருக்கிறார் வண்டிய கப்பலுக்கதானாம் ஏத்தோனும் லண்டன் போறத்துக்கு... இததான் பெரியவங்க சொல்லுவா ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறுமுன்னு....