முகப்பு

Sunday 26 February 2012

ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காது....!!!!

வணக்கம்!
நீண்ண்ண்ண்ண்ட நாட்களின் பின்னர் எனது பிளாக்கை திறந்து பார்த்த பின்னர்தான் விளங்குது  2012  இல் ஒருபதிவுமே போடல என்று! ('ஆமா, நீ ஒவ்வொரு நாளும் பதிவு போடுற ஆள்தானே!' என்று கேட்பது காதில் விழுகிறது ..!! ஹி ஹி ) அப்பிடியெல்லாம் இல்லீங்க பதிவு போட்டாதான் பதிவராம்! அதுதான் எதாவது பதிவு போடலாம் என்று பார்த்தேன். :-) சரி நான் கேள்விப்பட்ட ஒரு கதைய சொல்லி நானும் ஒரு பதிவர்தான் என்று நிருபிக்கிறேன்..  


முன்னொரு காலத்தில (இப்பிடித்தான் ஆரம்பிக்கனுமாம்.) வாழ்ந்த அரசனிடம் ஒருவர் வேலை கேட்டு வந்தாராம். 'தனக்கு சம்பளமோ, சாப்பாடோ வேண்டாம் வேலை மட்டும் தந்தால் போதும்' என்று ஒரு கோரிக்கையை வைத்தார் அந்த மனிதர். அரசனுக்கு ஆச்சரியம் "அட! சாப்பாடும் வேண்டாம் சம்பளமும் வேண்டாம் என்கிறானே இப்பிடிப்பட்டவர்களால் அரசுக்கு எவ்வளவு லாபம்?'....மந்திரியாரே உடனே இவருக்கு வேலை கொடுங்கள்" என்று உத்தரவிட்டார் ..
மந்திரிக்கோ இவரின் நடத்தை மீது  சந்தேகம்! அதனால  இவரை ஏமாற்ற வேண்டும் என்றே ஒரு வேலையை தேர்தெடுத்தார்.  வேலை கேட்டு வந்த மனிதரிடம் "இன்று தொடக்கம் உன்னை அரசாங்க வேலைக்காரனாக ஏற்றுக்கொள்கிறோம்! இதோ உனது அரச முத்திரையுடன் கூடிய உடை, இன்று தொடக்கம் உனது வேலை எங்கள் நாட்டு கடற்கரையில் ஒரு நாளுக்கு எத்தனை அலைகள் வருகின்றது என்று கணக்கெடுப்பதே" என்றார்.
மகிழ்சியோடு வேலையை ஏற்ற அந்த மனிதரும் கடற்கரையை நோக்கி சென்றார். அங்கு அலைகளை எண்ண தொடங்கியவருக்கு நாட்டின் துறை முகங்களுக்கு வரும் கப்பல்கள் இடையூராக இருப்பதால் அவற்றை உள்ளே விட அனுமதிக்கவில்லை. தான் ஓர்    அரச ஊழியன் எனவும் கப்பல்களால் தனது கடமை பாதிப்படைவதாகவும் இதனால் அரச கட்டளைகளை தன்னால் நிறைவேற்ற முடியாது இருப்பதாகவும் கூறினார்.. இவரால் பதிக்கப்பட்ட கப்பல் முதலாளிகள் இவருக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை லஞ்சமாக கொடுத்து தங்கள் தொழிலை தொடர்ந்தார்கள். இதை அறிந்த மன்னருக்கு அப்போதுதான் விளங்கியது அவர் ஏன் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய முன்வந்தார் என்று.;-)
உடனடியாக அவரின் வேலையை மாற்ற அரசர் உத்தரவிட்டார். அவரின் புதிய வேலை என்னன்னா வணிக நிலையங்களிலும் தெருக்களிலும் இருக்கும் எலிகளை எண்ண வேண்டும் என்பதே.(ஆமா, அரசருக்கு ரெம்ப பெரிய தண்டனை கொடுத்ததா நினைப்பு..) நம்மாளு என்ன லேசுப்பட்டவரா? கடைமை வீரனாச்சே! காலையில்  கடைகள் திறக்க முன்னரே கடை வாசலில்  காத்திருப்பார்..  அங்கு இருக்கும் எலிகளை எண்ணுவதற்காக! காலையில் கடையை திறக்கும் முதலாளியிடம் தான் ஓர் அரச ஊழியன் எனவும் அங்கு காணப்படும் 500 மூட்டை அரிசிகளையும் நகர்த்தி அங்கு இருக்கும் எலிகளை எண்ண அனுமதிக்குமாறும் கேட்பார். பிறகென்ன அங்கும் தொடங்கும் லஞ்சம்.. ஹா ஹா இப்பிடிதாங்க சம்பளம் வேண்டாம் என்று வேலைக்கு வருபவர்கள்..!!
லஞ்சமும்  இப்படித்தானோ உருவாகின்றது?  அரசாங்க ஊழியன் என்றால் "கொம்பு" முளைத்தவர் என்ற எங்கள் நினைப்புதான் லஞ்சத்துக்கு வழி கோலுகின்றதோ? (ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று இதை தான் சொல்வார்களோ?)

139 comments:

ஆகுலன் said...

கன நாளைக்கு பிறகு மாமாட..முதலாவதா வந்திருகுரன்...

ஆகுலன் said...

மிச்சம் வசிச்சுடு வாறன்...

ஆகுலன் said...

மாமா இது ஊழலுக்கு எதிரான பதிவா எண்டு என்னால் சரியாக சொல்ல முடியவில்லை....

ஆகுலன் said...

ஐயையோ நானும் பதிவு எழுதி கன நாள் ஆச்சு...அப்ப நான் பதிவர் இல்லையா...

காட்டான் said...

ஆகுலன் said...

கன நாளைக்கு பிறகு மாமாட..முதலாவதா வந்திருகுரன்..//

வாய்யா மருமோனே! நீ லைன்ல நிக்கிறாய் என்று தெரிஞ்சு பதிவு போட்டதபோல வரப்போறாங்கையா உணர அண்ணன்மார்.. !! ஹி ஹி

காட்டான் said...

மிச்சம் வாசிச்சுடு வாறன்...//
அவசரம் இல்லைய்யா ஆறுதலா வாங்கோ..

ஆகுலன் said...

ஆகுலன் said...

கன நாளைக்கு பிறகு மாமாட..முதலாவதா வந்திருகுரன்..//

வாய்யா மருமோனே! நீ லைன்ல நிக்கிறாய் என்று தெரிஞ்சு பதிவு போட்டதபோல வரப்போறாங்கையா உணர அண்ணன்மார்.. !! ஹி ஹி////

ஆமால்ல..அவங்களுக்கும் எனக்கும் போடியில்ல...மறந்தே போடன்...

காட்டான் said...

Blogger ஆகுலன் said...

ஐயையோ நானும் பதிவு எழுதி கன நாள் ஆச்சு...அப்ப நான் பதிவர் இல்லையா...//

ஆமாய்யா இவங்க தொல்லை தாங்க முடியல பதிவு எழுதினாதான் பதிவராம். ரெம்ப அக்கிரமா இருக்குள்ள?

காட்டான் said...

Blogger ஆகுலன் said...

மாமா இது ஊழலுக்கு எதிரான பதிவா எண்டு என்னால் சரியாக சொல்ல முடியவில்லை...//

நான் எங்கையா சொன்னேன் இது ஊழலுக்கு எதிரான பதிவுன்னு.? ஊழல் செய்யணும் என்று நினைககிறவனை தடுக்க முடியாது..!!

KANA VARO said...

மாமா சுகமோ? பொறுங்கோ படிச்சிட்டு வாறன்.

காட்டான் said...

KANA VARO said...

மாமா சுகமோ? பொறுங்கோ படிச்சிட்டு வாறன்.//

ஆஹா இண்டைக்கு எல்லா மருமோனும் லைன்ல நிக்கிறாங்களா, அப்ப நான் எஸ்கேப்..!! ஹி ஹி

ஹேமா said...

காட்டான் மாமா..நானும் மாமா எண்டு சொல்லலாமோ !

சரி....சுகமா இருக்கிறியள்தானே.கன நாளாய்ப் பதிவில்ல.என்ன நடந்தது இப்பிடி ஒரு நீதிக்கதையோட வந்திருக்கிறியள் !

ஹேமா said...

எங்கேயோ எதுக்கோ ஆரோ லஞ்சம் கேட்டுப்போட்டினம்போல மாமாட்ட.அதான் ஞானம் பிறந்த பதிவு.லஞ்சம் குடுக்கிறவையாலதானே வாங்கிறவை பாத்துக்கொண்டிருக்கினம்.குடுக்கிறதை நிப்பாட்டுங்கோ.அப்ப லஞ்சம் நிக்கும் !

காட்டான் said...

காட்டான் மாமா..நானும் மாமா எண்டு சொல்லலாமோ !

சரி....சுகமா இருக்கிறியள்தானே.கன நாளாய்ப் பதிவில்ல.என்ன நடந்தது இப்பிடி ஒரு நீதிக்கதையோட வந்திருக்கிறியள் ! //

ஹா ஹா தாராளமாய் சொல்லலாம் மாமா எண்டு..
அதனால என்ற மருமோன்கள் அக்காச்சின்னு ஓடி வருகிறத பாக்கிறன்தானே!!

காட்டான் said...

எங்கேயோ எதுக்கோ ஆரோ லஞ்சம் கேட்டுப்போட்டினம்போல மாமாட்ட.அதான் ஞானம் பிறந்த பதிவு.லஞ்சம் குடுக்கிறவையாலதானே வாங்கிறவை பாத்துக்கொண்டிருக்கினம்.குடுக்கிறதை நிப்பாட்டுங்கோ.அப்ப லஞ்சம் நிக்கும்.//

ம் சொந்த கதை சோகக்கத.. ஆனா அது பிரான்சில நடக்கல வைக்கேசன் போன இடத்தில கொடுக்க வேண்டியதா போச்சு.. ஹி ஹி இல்லைன்னா நாடு(பிரான்ஸ்) திருப்புவது கஷ்டமாய் இருந்திருக்கும்..!

ஹேமா said...

எனக்கு விளங்கிட்டுது.ஊருக்கு அதான் இலங்கைக்குப் போனீங்கள்போல.அவங்களிட்ட குடுக்காட்டிக் கொஞ்சம் கஸ்டம்தான்.இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்லுவாங்கள்.வேற எந்த நாட்டிலயும் இல்லாத கேவலம் எங்களுக்கே எங்களுக்கு.நாங்கள் பிறந்த நாட்டிலதான் எங்களுக்குக் கஸ்டம் !

காட்டான் said...

ஹேமா said...

எனக்கு விளங்கிட்டுது.ஊருக்கு அதான் இலங்கைக்குப் போனீங்கள்போல.அவங்களிட்ட குடுக்காட்டிக் கொஞ்சம் கஸ்டம்தான்.இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்லுவாங்கள்.வேற எந்த நாட்டிலயும் இல்லாத கேவலம் எங்களுக்கே எங்களுக்கு.நாங்கள் பிறந்த நாட்டிலதான் எங்களுக்குக் கஸ்டம் !//

ஹா ஹா உங்களுக்கும் விளங்கீற்று போல;-) பாஸ்போட்டை கையில வைச்சுக்கொண்டு லஞ்சம் கேட்டா கொடுக்காம சட்டப்படி சந்திக்கிறன் என்று எங்கட நாட்டில சொன்னா அடுப்படியில பூனைதான் படுக்கும். இதுக்கு என்ன செய்யலாம் ஹேமா?

ஹேமா said...

ஃபிரான்சில சுவிஸ்ல சத்தம்போட்டு எங்கட உரிமைகளைக் கேக்கலாம்.அந்தளவு சுதந்திரம் தந்திருக்கினம் வேற்று நாட்டில.உண்மைதான் எங்கட நாட்டில எங்களுக்கு ஆயிரத்தெட்டுக் கேள்விகள்.அதோட அவங்கட பாஷையும் ஒரு கேடு.பூனையை அடுப்படிக்க படுக்க விட்டாக் காணாதே.காணாமல் போன பூனையாக்கிடுவாங்கள்.கடவுளே.

எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு.உண்மையா நான் குடுக்கேல்ல.என்னோட வந்த அக்கா ஒரு சொக்லேட்டும் 20ஃபிராங் காசும் குடுத்தவ.நான் கேக்கிறதுக்கெல்லாம் பதில் குடுத்துக்கொண்டிருந்தன்.ஆனா ஒரு மணித்தியாலம் மினக்கெட வச்சிட்டு போ எண்டு விட்டாங்கள்...கள் !

காட்டான் said...

ஹேமா said...

ஃபிரான்சில சுவிஸ்ல சத்தம்போட்டு எங்கட உரிமைகளைக் கேக்கலாம்.அந்தளவு சுதந்திரம் தந்திருக்கினம் வேற்று நாட்டில.உண்மைதான் எங்கட நாட்டில எங்களுக்கு ஆயிரத்தெட்டுக் கேள்விகள்.அதோட அவங்கட பாஷையும் ஒரு கேடு.பூனையை அடுப்படிக்க படுக்க விட்டாக் காணாதே.காணாமல் போன பூனையாக்கிடுவாங்கள்.கடவுளே.

எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு.உண்மையா நான் குடுக்கேல்ல.என்னோட வந்த அக்கா ஒரு சொக்லேட்டும் 20ஃபிராங் காசும் குடுத்தவ.நான் கேக்கிறதுக்கெல்லாம் பதில் குடுத்துக்கொண்டிருந்தன்.ஆனா ஒரு மணித்தியாலம் மினக்கெட வச்சிட்டு போ எண்டு விட்டாங்கள்...கள் !//

ஓம் ஓம் .. அடுப்படியில பூனைய விட உயிர்தான் முக்கியம். லஞ்சம் என்பது கீழத்தேய நாடுகளின் சாபம்.. மண்டபம் அகதி முகாமில் ஒரு நண்பரை சந்திக்க அனுமதி வாங்க பாஸ்போட்டையும் கொடுத்து அத்தோட லம்பமா ஒரு தொகையையும் கொடுத்துதான் சந்திச்சேன்.. பரவாயில்ல நான் ஒரு தீவிரவாதி இல்ல இதையே ஒரு தீவிரவாதி செய்ய முடியாது என்பது என்ன நிச்சயம்?

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
ஆடிய காலும் பாடிய வாயும்
வாங்கிய கையும் சும்மா இருக்காதுதான்
அந்த அரசாங்க முத்திரை கூட பணியாற்ற்க் கிடைத்த
அடையாளம் என்பதைவிட லஞ்சம் வாங்க உள்ள
உரிமையைச் சொல்லும் பட்டயம் என்பதுதானிங்க்கு
எல்லா அரசுப் பணியாளரின் மனோ பாவமும்
அதை அழகாகச் சொல்லிப் போகுது தங்கள் பதிவு

உங்கள் பதிவின் ரசிகர்களை எல்லாம் ரொம்ப
ஏஙக விடாம கொஞ்சம் அடிக்கடி வாங்க

முத்தரசு said...

சரி.. சரி... நீங்களும் பதிவர் தான்.

முத்தரசு said...

லஞ்சம் - நதி மூலம் ரிஷி மூலம் தெரிந்துகொண்டேன்

தனிமரம் said...

லஞ்சம் சில இடங்களில் சிலரை அதிகம் வளர்க்கின்றது .ஒழிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

தனிமரம் said...

நீண்ட இடைவெளிவிட்டால் வலைப்பக்கம் வருவோர் இடம் மாறிப்போய் விடுவார்கள். ஹீ ஹீ

தனிமரம் said...

அட ஆகுலன்  வேற முதலில் வந்திருக்கின்றார் .அவரும் பதிவாளர் இல்ல .

முற்றும் அறிந்த அதிரா said...

அச்சச்சோ.. நான் லேட்டாயிட்டனே:)).. இப்போதைக்கு என் கண்ணில உந்தச் சுண்டெலி மட்டும்தான் தெரியுது.... திரும்ப வாறேன் பதிவு படிக்க...

ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கால்தானே பதிவு போடுறீங்க... அதையும் ஒழுங்காப் படிக்காட்டில் நான் பூனையே.. சே..சே...என்னப்பா இது கொயம்புது:) மனிஷனே இல்ல எனச் சொல்ல வந்தேன்.

காட்டான் said...

Ramani said...

அருமை அருமை
ஆடிய காலும் பாடிய வாயும்
வாங்கிய கையும் சும்மா இருக்காதுதான்
அந்த அரசாங்க முத்திரை கூட பணியாற்ற்க் கிடைத்த
அடையாளம் என்பதைவிட லஞ்சம் வாங்க உள்ள
உரிமையைச் சொல்லும் பட்டயம் என்பதுதானிங்க்கு
எல்லா அரசுப் பணியாளரின் மனோ பாவமும்
அதை அழகாகச் சொல்லிப் போகுது தங்கள் பதிவு

உங்கள் பதிவின் ரசிகர்களை எல்லாம் ரொம்ப
ஏஙக விடாம கொஞ்சம் அடிக்கடி வாங்க


வணக்கமையா.! வருகைக்கு நன்றி ஐயா. என்னது எனது ரசிகர்களா? ஐயாவுக்கு ரெம்பத்தான் குசும்பு.. ஹா ஹா ஹா!!

காட்டான் said...

Blogger மனசாட்சி said...

சரி.. சரி... நீங்களும் பதிவர் தான்.//
அட மனசாட்சியே சொல்லிட்டீங்க அப்ப நான் நம்புறன் என்ன இருந்தாலும் இத வெளிய சொல்லிடாதிங்கோ..!! ஹி ஹி ஹி

அம்பலத்தார் said...

இவ்வளவு அடிக்கடி பதிவுகள் எழுதவேண்டாம் காட்டான் என்னால் அவ்வளவையும் படிக்கமுடியவில்லை. செம ஸ்பீட்.

அம்பலத்தார் said...

அந்த ஆளை ஜேர்மனிப்பக்கம் எந்த ஒரு வேலையும் கொடுத்து அனுப்பவேண்டம் என்று ராஜாவை பணிவாக கேட்டுக்கொள்கிறேன். என்னால் லஞ்சம் கொடுக்க முடியாது

முற்றும் அறிந்த அதிரா said...

மீ ரிரேன்ஸ்ஸ்
//அப்பிடியெல்லாம் இல்லீங்க பதிவு போட்டாதான் பதிவராம்! அதுதான் எதாவது பதிவு போடலாம் என்று பார்த்தேன். :-)//

உண்மையாகவோ நல்லவேளை உங்கள்மூலம் தெரிஞ்சு கொண்டேன்..:)))

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பர் கதை...அவர் என்ன லஞ்சமா கேட்டார்.. தன்னை இடைஞ்சல் பண்ணவேண்டாம், தன் வேலையை ஒழுங்காகச் செய்ய விடுங்கள் எனத்தானே கேட்டார்? இவர்கள் எதுக்கு.. பணத்தைக் கொடுத்து அவரைக் கெட்டவராக்கிட்டினம்.... அப்பூடி கேட்குது என் கிட்னி:)).. சரி இதுக்கெல்லாம் முறைக்கப்படது:))..

//லஞ்சமும் இப்படித்தானோ உருவாகின்றது? அரசாங்க ஊழியன் என்றால் "கொம்பு" முளைத்தவர் என்ற எங்கள் நினைப்புதான் லஞ்சத்துக்கு வழி கோலுகின்றதோ?///

காட்டான் அண்ணன் எங்கயோ வசமா மாட்டி நொந்து நூடில்சாகிப்போய்த்தான்... இப்பதிவையே போட்டார் எனப் புரியுது.

முற்றும் அறிந்த அதிரா said...

அதுசரி எல்லோரும் மாமா என்பது பத்தாதென, ஹேமாவும் மாமாவாமே அவ்வ்வ்வ்வ்வ்:))..
அந்தக்காலம் போல வஞ்சகமில்லாமல்தான் குழந்தைகள் பெத்திருக்கிறீங்கபோல அதுதான் சிரிச்சுக்கொண்டிருக்கிறீங்க:)).

K said...

ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காது....!!!!:///////

அப்ப நடந்த கால்களும் பேசிய வாயும் சும்மா இருக்குமோ அன்ணர்?

K said...

வணக்கம்!
நீண்ண்ண்ண்ண்ட நாட்களின் பின்னர் எனது பிளாக்கை திறந்து பார்த்த பின்னர்தான் விளங்குது 2012 இல் ஒருபதிவுமே போடல என்று! //////

அப்போ, எங்கள் முகத்தில் உள்ள சந்தோசத்தை வைத்து, நீங்கள் கண்டுபிடிக்கேலையோ! ஹி ஹி ஹி ஹி அண்ணர் அடிக்க வராதீங்கோ!

K said...

('ஆமா, நீ ஒவ்வொரு நாளும் பதிவு போடுற ஆள்தானே!' என்று கேட்பது காதில் விழுகிறது ..!! ஹி ஹி ) ///////

அது லண்டன் தேம்ஸ் நதிக்குப் பக்கத்தில இருந்துதான் ஆரோ கேட்டிருக்கினம்! உங்களுக்கு எப்பிடி விளங்கிச்சுது?

K said...

அப்பிடியெல்லாம் இல்லீங்க பதிவு போட்டாதான் பதிவராம்! அதுதான் எதாவது பதிவு போடலாம் என்று பார்த்தேன். :-) /////

இதான் அண்ணர் கொடுமை! ஒருவாட்டி களவெடுத்தா, ஆயுசு முழுக்க கள்ளன் எண்டு சொல்லுவாங்க! ஆனா 10 நாளைக்குப் பதிவு போடாட்டி, பதிவருன்னே ஒத்துக்க மாட்டாய்ங்க!

K said...

அண்ணர், அந்தக் கதை சூப்பர்! கதைக்கும் பழமொழிக்கும் நல்ல தொடர்பு! அண்ணர் நீங்க வேலை செய்யும் இடத்தில் எனக்கும் ஒரு வேலை வாங்கித்தாங்கோ.... சம்பளம் இல்லாமல் :-)

ஹேமா said...

பூனைக்குட்டிக்குப் பொறாமைபோல நான் காட்டான் மாமாவை மாமா எண்டு கூப்பிடுறது !

தனிமரம் said...

ஹேமாsaid...
பூனைக்குட்டிக்குப் பொறாமைபோல நான் காட்டான் மாமாவை மாமா எண்டு கூப்பிடுறது !// உண்மைதான் அக்காள் இந்த பூனைக்குட்டிக்கு தனிமரம் ஒரு பதிவாளர் என்று தெரியாது போல?

காட்டான் said...

லஞ்சம் - நதி மூலம் ரிஷி மூலம் தெரிந்துகொண்டேன் //

ஹா ஹா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனச்சாட்சி!!

காட்டான் said...

தனிமரம் said...

நீண்ட இடைவெளிவிட்டால் வலைப்பக்கம் வருவோர் இடம் மாறிப்போய் விடுவார்கள். ஹீ ஹீ//

அப்பிடிங்களா நேசன். நான் உங்களுக்கு அதிக சிரமம் வைக்க கூடாதுன்னுதான் அடிக்கடி பதிவு போடுவதில்லை. ..;-))

காட்டான் said...

அட ஆகுலன் வேற முதலில் வந்திருக்கின்றார் .அவரும் பதிவாளர் இல்ல .//
அவர் பதிவர் இல்லைன்னு சொல்லுறிங்களா? ஆமான்னு சொல்லுறிங்களா நேசன்.?.;-))

காட்டான் said...

அட ஆகுலன் வேற முதலில் வந்திருக்கின்றார் .அவரும் பதிவாளர் இல்ல .

27 February 2012 00:29
Delete
Blogger athira said...

அச்சச்சோ.. நான் லேட்டாயிட்டனே:)).. இப்போதைக்கு என் கண்ணில உந்தச் சுண்டெலி மட்டும்தான் தெரியுது.... திரும்ப வாறேன் பதிவு படிக்க...

ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கால்தானே பதிவு போடுறீங்க... அதையும் ஒழுங்காப் படிக்காட்டில் நான் பூனையே.. சே..சே...என்னப்பா இது கொயம்புது:) மனிஷனே இல்ல எனச் சொல்ல வந்தேன்.//

அட நம்ம மியாவ்! வாங்கோ வாங்கோ. எப்பிடி இருக்கீங்க ? அட ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்காவாவது பதிவு போடுறனேன்னு சந்தோஷப்படுங்கோ. காட்டான் வீட்டில அடிக்கடி விஷேசம் இல்லைங்கோ.!!))

காட்டான் said...

Blogger அம்பலத்தார் said...

இவ்வளவு அடிக்கடி பதிவுகள் எழுதவேண்டாம் காட்டான் என்னால் அவ்வளவையும் படிக்கமுடியவில்லை. செம ஸ்பீட்.//

வாங்கோ அம்பலத்தார்!
இப்பிடித்தான் நீங்க அடிக்கடி என்னை புகழுறீங்க. இனி இந்த ஸ்பீட்ட குறைக்கிறேங்க.. ஹா ஹா

காட்டான் said...

மீ ரிரேன்ஸ்ஸ்
//அப்பிடியெல்லாம் இல்லீங்க பதிவு போட்டாதான் பதிவராம்! அதுதான் எதாவது பதிவு போடலாம் என்று பார்த்தேன். :-)//

உண்மையாகவோ நல்லவேளை உங்கள்மூலம் தெரிஞ்சு கொண்டேன்..:)))

பார்த்தீங்களா எவ்வளவு பெரிய உண்மைய தெரிந்து கொண்டீங்க.. ))

காட்டான் said...

அந்த ஆளை ஜேர்மனிப்பக்கம் எந்த ஒரு வேலையும் கொடுத்து அனுப்பவேண்டம் என்று ராஜாவை பணிவாக கேட்டுக்கொள்கிறேன். என்னால் லஞ்சம் கொடுக்க முடியாது//

அப்பிடிங்களா அம்பலத்தார் ஓகே அவர அனுப்பாம பாக்கிறதுக்கு நீங்க எவ்வளவு வெட்டுவீங்க,? ;-))

காட்டான் said...

சூப்பர் கதை...அவர் என்ன லஞ்சமா கேட்டார்.. தன்னை இடைஞ்சல் பண்ணவேண்டாம், தன் வேலையை ஒழுங்காகச் செய்ய விடுங்கள் எனத்தானே கேட்டார்? இவர்கள் எதுக்கு.. பணத்தைக் கொடுத்து அவரைக் கெட்டவராக்கிட்டினம்.... அப்பூடி கேட்குது என் கிட்னி:)).. சரி இதுக்கெல்லாம் முறைக்கப்படது:))..

//லஞ்சமும் இப்படித்தானோ உருவாகின்றது? அரசாங்க ஊழியன் என்றால் "கொம்பு" முளைத்தவர் என்ற எங்கள் நினைப்புதான் லஞ்சத்துக்கு வழி கோலுகின்றதோ?///

காட்டான் அண்ணன் எங்கயோ வசமா மாட்டி நொந்து நூடில்சாகிப்போய்த்தான்... இப்பதிவையே போட்டார் எனப் புரியுது.///

சொந்த கத சோகக் கத அதிரா!! ;-((

காட்டான் said...

அதுசரி எல்லோரும் மாமா என்பது பத்தாதென, ஹேமாவும் மாமாவாமே அவ்வ்வ்வ்வ்வ்:))..
அந்தக்காலம் போல வஞ்சகமில்லாமல்தான் குழந்தைகள் பெத்திருக்கிறீங்கபோல அதுதான் சிரிச்சுக்கொண்டிருக்கிறீங்க:)).//

அதிரா ஒரு பழமொழி சொல்லுவாங்க "ஐஞ்சு பொம்பிள பிள்ள பெத்தா அரசனும் ஆண்டின்னு" ஆனா இஞ்ச ஐஞ்சில்ல ஐம்பதும் பெறலாம் விசா இருந்தா நான் ராஜாதான்.. ஹி ஹி !!

காட்டான் said...

ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காது....!!!!:///////

அப்ப நடந்த கால்களும் பேசிய வாயும் சும்மா இருக்குமோ அன்ணர்?//

வாயா மணி! அட அது பழமொழி ரசிப்பாயா.. ஹி ஹி

காட்டான் said...

Blogger ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

வணக்கம்!
நீண்ண்ண்ண்ண்ட நாட்களின் பின்னர் எனது பிளாக்கை திறந்து பார்த்த பின்னர்தான் விளங்குது 2012 இல் ஒருபதிவுமே போடல என்று! //////

அப்போ, எங்கள் முகத்தில் உள்ள சந்தோசத்தை வைத்து, நீங்கள் கண்டுபிடிக்கேலையோ! ஹி ஹி ஹி ஹி அண்ணர் அடிக்க வராதீங்கோ!//

அட நீங்க நீண்ட நாள் சந்தோஷமாய் இருக்க கூடாதுன்னுதான் பதிவு போட்டேன் மணி.. ;-)))))

காட்டான் said...

('ஆமா, நீ ஒவ்வொரு நாளும் பதிவு போடுற ஆள்தானே!' என்று கேட்பது காதில் விழுகிறது ..!! ஹி ஹி ) ///////

அது லண்டன் தேம்ஸ் நதிக்குப் பக்கத்தில இருந்துதான் ஆரோ கேட்டிருக்கினம்! உங்களுக்கு எப்பிடி விளங்கிச்சுது?//

அட தேம்ஸ் நதிக்கு அப்பால இருக்கிறவங்களோட ஒண்டுக்க மண்டாயிட்டம் அவங்கல்லாம் அப்பிடி கேக்கமாட்டான்கடா..!!

காட்டான் said...

அண்ணர், அந்தக் கதை சூப்பர்! கதைக்கும் பழமொழிக்கும் நல்ல தொடர்பு! அண்ணர் நீங்க வேலை செய்யும் இடத்தில் எனக்கும் ஒரு வேலை வாங்கித்தாங்கோ.... சம்பளம் இல்லாமல் :-)//

அட இதுவும் நல்ல ஐடியாதான்போல அப்பிடியாவது மணிய பார்க்கலாமே.. பக்கத்தில இருக்கிறாய் என்றுதான் பேச்சு தம்பிய நான் பார்த்ததேயில்ல அப்பிடியாச்சும் பார்ப்போமே!!.. ;-)))

காட்டான் said...

Blogger ஹேமா said...

பூனைக்குட்டிக்குப் பொறாமைபோல நான் காட்டான் மாமாவை மாமா எண்டு கூப்பிடுறது !

அதுதானே இதென்ன பழக்கம் அதிரா? ஹி ஹி மீ எஸ்கேப் பூனைக்காரி வந்தா ருத்ர தாண்டவம்தான்.. ;-))))

காட்டான் said...

உண்மைதான் அக்காள் இந்த பூனைக்குட்டிக்கு தனிமரம் ஒரு பதிவாளர் என்று தெரியாது போல?//


இங்கே விளம்பரம் செய்ய கட்டணம் அறவிடப்படும் என்பதை அறியத்தருகிறோம்..!! ;-))

KANA VARO said...

மாமா கதை சூப்பரா இருக்கு..

மகேந்திரன் said...

வணக்கம் மாமா
நலமா?
நீண்ட நாட்களுக்கு பின் பதிவுகளின் ஊடாக
தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

மகேந்திரன் said...

"ஆட வந்த நாட்டியமென்ன..
அந்தம புத்திரனே
ஆடிய காலில் ஒன்றெங்கே
தங்கம புத்திரனே
ஒன்றைக்காலு தரையிலேயும்
மற்றகாலு உச்சியிலேயும்
போனது ஏன்
மந்தம புத்திரனே...
நிற்கும் இடம்
புரியலியோ சொல்லிடு இங்கே
சங்கம புத்திரனே....."

இப்படி அற்பனுக்கு வாழ்வு வந்தால்
அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்
என்பது போல...
அரசு ஊழியர்கள் ஏதோ..
அர்த்த மண்டபத்தில் இருப்பது போல
உட்கார்ந்து அவர்கள் காட்டும்
பந்தாவிற்கு அளவே இல்லை மாமா...

லஞ்சத்தின் மொத்த உருவங்கள்...

அழகான கதையினூடே தெளிவான
கருத்தை பகிர்ந்திருக்கிறீர்கள்..
நன்றிகள் பல..

சுதா SJ said...

என்னாலே... என் மாம்ஸும் பதிவு போட்டு இருக்காலே..... சொல்லவே இல்லலே.......... இருலே.... வாரேனேலே.... :)

சுதா SJ said...

மாமா கதை நல்லாத்தான் இருக்கு...... மணிக்கும் எனக்கும் உங்க கடையில் ஒரு சம்பளம் இல்ல வேலையை ஏன் நீங்க எடுத்து தரப்படாது :)

சுதா SJ said...

என்னது நீங்களும் பதிவரா???? இந்து கூத்து எப்போல இருந்து..... போங்க மாம்ஸ் நான் நம்ப மாட்டேன் !( பதிவர் என்பதை நீங்க இன்னும் நிருபிக்கனுமாம் :)

சுதா SJ said...

ஆனாலும் பதிவு போடாமலே பிரபல பதிவர் ஆனது நீங்க மட்டும்தான் மாம்ஸ்.... ஹீ ஹீ

வலையுகம் said...

காட்டான் அண்ணே நலமா

கதை சொல்லும் நீதி என்னவோ?

கீ போர்டில் டைப் அடிச்ச கையும்
பதிவுகளை பார்வையிட்ட கண்ணும் சும்மா இருக்காதுன்னு சொல்ல வர்றீங்களா?

முற்றும் அறிந்த அதிரா said...

//ஹேமா said...
பூனைக்குட்டிக்குப் பொறாமைபோல நான் காட்டான் மாமாவை மாமா எண்டு கூப்பிடுறது !///

ஹா..ஹா...ஹா.... இருக்காதோ பின்ன?:)) நான் அவசரப்பட்டு முந்திரிக்கொட்டைபோல “அண்ணன்” எனக் கூப்பிடு விட்டனோ என... நொந்து நூடில்ஸ்சாகிட்டன்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

//27 February 2012 04:30
தனிமரம் said...
ஹேமாsaid...
பூனைக்குட்டிக்குப் பொறாமைபோல நான் காட்டான் மாமாவை மாமா எண்டு கூப்பிடுறது !// உண்மைதான் அக்காள் இந்த பூனைக்குட்டிக்கு தனிமரம் ஒரு பதிவாளர் என்று தெரியாது போல///

அவ்வ்வ்வ்வ்வ்வ்... பதிவு எழுதினால்தானாம் பதிவாளர்:))) காட்டான் அண்ணன் சொல்லியிருக்கிறார்:))...

“தனிமரம் தோப்பாகாது” என பலதடவை, பெயரைப் பார்க்கும்போதெல்லாம் வாய் வரும்:)), ஆனாலும் சொல்லப்பயத்தில அடடடடடடக்கிடுவேன்:))).. ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).

முற்றும் அறிந்த அதிரா said...

//அதிரா ஒரு பழமொழி சொல்லுவாங்க "ஐஞ்சு பொம்பிள பிள்ள பெத்தா அரசனும் ஆண்டின்னு" ஆனா இஞ்ச ஐஞ்சில்ல ஐம்பதும் பெறலாம் விசா இருந்தா நான் ராஜாதான்.. ஹி ஹி !!///

ஒரு தடவை.. ஜேர்மனியில் இருந்து ஒரு குடும்பம் கொழும்புக்கு வந்தவையாம்... அப்போ ஹோட்டல் புக் பண்ணி, அவர்களுக்கு ஹெல்ப் பண்ணப் போனவர், எங்களுக்குத் தெரிந்த ஒருவர், அவர் வந்து சொன்னார், வான் வந்து நின்றுதாம், மூத்த பிள்ளை மட்டும் இறங்கினதாம், மற்றதெல்லாம்... நித்திரையாம்.... ஒவ்வொன்றாக தூக்கி ரூமுக்குள் கொண்டுபோனவராம்...இன்னும் ஒன்றுதானாக்கும்... இன்னும் ஒன்றுதானாக்கும் என, தானும் எண்ண எண்ண 6 பிள்ளைகளாம் மொத்தம்...

அப்போதான் தந்தை சொன்னாராம்... ஜேர்மனியில் அதிகம் குழந்தைகள் பிறந்தால் நாங்கள் செல்வந்தர்கள் என:))

முற்றும் அறிந்த அதிரா said...

//காட்டான் said...
('ஆமா, நீ ஒவ்வொரு நாளும் பதிவு போடுற ஆள்தானே!' என்று கேட்பது காதில் விழுகிறது ..!! ஹி ஹி ) ///////

அது லண்டன் தேம்ஸ் நதிக்குப் பக்கத்தில இருந்துதான் ஆரோ கேட்டிருக்கினம்! உங்களுக்கு எப்பிடி விளங்கிச்சுது?//

அட தேம்ஸ் நதிக்கு அப்பால இருக்கிறவங்களோட ஒண்டுக்க மண்டாயிட்டம் அவங்கல்லாம் அப்பிடி கேக்கமாட்டான்கடா..!//

அப்பூடிக் கேழுங்கோ காட்டான் அண்ணன், அதோட எண்ட சங்கிலியின் முடிவென்ன எனவும் ஒருக்கால் கேட்டுச் சொல்லுங்கோ:)).

முற்றும் அறிந்த அதிரா said...

///காட்டான் said...
உண்மைதான் அக்காள் இந்த பூனைக்குட்டிக்கு தனிமரம் ஒரு பதிவாளர் என்று தெரியாது போல?//


இங்கே விளம்பரம் செய்ய கட்டணம் அறவிடப்படும் என்பதை அறியத்தருகிறோம்..!! ;-))///

ஹா..ஹா...ஹா... என்னால முடியேல்லை சாமீஈஈஈஈஈஈஈ:))).. அது விளம்பரம் அல்ல காட்டான் அண்ணன்... அது அவர் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா சொன்னவர்:).

ஹேமா said...

ஓம் ஓம் தனிமரம் நேசன்.பூனைக்குட்டிக்கெண்டு கும்மியடிக்க சில இடங்கள் இருக்கு.கூட்டம் சேர்த்து அங்க நிண்டு கும்மியடிக்கும்.நாங்களும் அவைய்ளின்ர ஆக்கள்தான்.எங்கட பக்கம் வாறேல்ல.

சரியெண்டு பூனைக்குட்டின்ர பதிவுக்குப் போனால் அங்க 150 தாண்டிடும் கும்மி.பிறகெப்பிடி நாங்கள் பின்னூட்டம் போடுறது.பாத்துச் சிரிச்சபடியே வந்திருக்கிறன் கனதரம் !

ஹேமா said...

பூனைக்குட்டி இப்பவும் ஒரு பிரச்சனையுமில்ல.காட்டான் மாமாவை மாமாண்ணா எண்டு கூப்பிடுங்கோ.மாமன்னன் ஆயிடுவார் மாமா.நல்லாருக்கோ யோசனை !

Unknown said...

நலமா நண்பரே!
பதிவும் அதிகமில்லே! நம்
பக்கமும் வரதில்லே!

புலவர் சா இராமாநுசம்

முற்றும் அறிந்த அதிரா said...

காட்டான் மாமாஆஆஆஆஆஆஆஅ காட்டான் மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ.. சே..சே... இது நல்லாவே இல்லை:)) வாணாம் நான் காட்டான் அண்ணன் என்றே கூப்பிடுறேன்:))...
-------------------------

// ஹேமா said...
ஓம் ஓம் தனிமரம் நேசன்.பூனைக்குட்டிக்கெண்டு கும்மியடிக்க சில இடங்கள் இருக்கு.கூட்டம் சேர்த்து அங்க நிண்டு கும்மியடிக்கும்.நாங்களும் அவைய்ளின்ர ஆக்கள்தான்.எங்கட பக்கம் வாறேல்ல///


காட்டான் அண்ணன் பிடிங்க பிடிங்க ஹேமாவைப் பிடிச்சு கட்டணம் அறவிடுங்கோ:)) இலவச விளம்பரம் போடுறா அப்பூடின்னு நான் சொல்லுவேனோ? ஏனெண்டால் நான் தான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே 6 வயசிலிருந்து....

இந்தப் பின்னூட்டமெல்லாம் காவிப்போய் என் பக்கம் போடப்போறேன்:))) ஹா..ஹா..ஹா..:))

காட்டான் said...

KANA VARO said...

மாமா கதை சூப்பரா இருக்கு..

நன்றி மருமோனே!

காட்டான் said...

@மகேந்திரன்!

அழகான கவிதையோடு வந்து விமர்சனம் செய்ததற்கு நன்றி மாப்பிள.

காட்டான் said...

ஹேமா said...

ஓம் ஓம் தனிமரம் நேசன்.பூனைக்குட்டிக்கெண்டு கும்மியடிக்க சில இடங்கள் இருக்கு.கூட்டம் சேர்த்து அங்க நிண்டு கும்மியடிக்கும்.நாங்களும் அவைய்ளின்ர ஆக்கள்தான்.எங்கட பக்கம் வாறேல்ல.

சரியெண்டு பூனைக்குட்டின்ர பதிவுக்குப் போனால் அங்க 150 தாண்டிடும் கும்மி.பிறகெப்பிடி நாங்கள் பின்னூட்டம் போடுறது.பாத்துச் சிரிச்சபடியே வந்திருக்கிறன் கனதரம் !//

ஹி ஹி உண்மைதான் ஹேமா பூசார் வீடு திறந்தவுடனேயே கொமொன்ஸ் மழைதானே..)) இப்ப அது இங்கேயும் நடக்கப்போது போல அடிக்கடி பூசார் இங்கேயும் தென்படுகிறார் என்ற வீடும் நிறையப்போது.. ;-))

ஹேமா said...

பூனையாருக்கு அதென்ன அடிக்கடி 6 வயசுக் கணக்கு வருது.இண்டைக்கு ஐபிசி ரேடியோவில கேட்டிச்சினம் உங்களுக்கு விடை தெரியாத விஷயம் என்னெண்டு.நான் இந்த 6 வயசுப் பிரச்சனையைத்தான் சொன்னன்.அவைக்கும் விளங்கேல்ல !

காட்டான் said...

ஹேமா said...

ஓம் ஓம் தனிமரம் நேசன்.பூனைக்குட்டிக்கெண்டு கும்மியடிக்க சில இடங்கள் இருக்கு.கூட்டம் சேர்த்து அங்க நிண்டு கும்மியடிக்கும்.நாங்களும் அவைய்ளின்ர ஆக்கள்தான்.எங்கட பக்கம் வாறேல்ல.

சரியெண்டு பூனைக்குட்டின்ர பதிவுக்குப் போனால் அங்க 150 தாண்டிடும் கும்மி.பிறகெப்பிடி நாங்கள் பின்னூட்டம் போடுறது.பாத்துச் சிரிச்சபடியே வந்திருக்கிறன் கனதரம் !//

பூசாருக்கு தெரியும் நீங்க அவைய்ளின்ர ஆக்கள் என்று... ஆனா உங்கள் கவிதை மிக தரம் வாய்த்தது நானே அடிக்கடி வந்து ஓட்டு மட்டும் போட்டிருக்கிறேன் கொமொன்ஸ் போட பயந்து... ;-)) நம்ம அறிவு அப்படி!!

ஆனா பூசார் கும்மி பதிவுகளில் நல்லா நின்று கும்மி அடிப்பார்.. அரசியல் பதிவில நான் பூசாரை காணவில்லை.. ஆனா பூசாருக்கு என்றே உப்புமடசந்தியில் நீங்கள் எழுதுவது தெரியலையோ.. கர்ர்ர்ர்ர்ர்ர் ;-))

காட்டான் said...

Blogger துஷ்யந்தன் said...

என்னாலே... என் மாம்ஸும் பதிவு போட்டு இருக்காலே..... சொல்லவே இல்லலே.......... இருலே.... வாரேனேலே.... :)//

அட மருமோனே உன்னட்ட இத முதல்லேயே சொல்லி இருந்தா நீ படலைய பிடிச்சுக்கொண்டு நீ மட்டும் வந்து கும்மி அடிச்சிருப்பாய் அதுதான் விட்டுட்டன். அது சரி இப்ப உனக்கு மூக்கு வேர்த்தோ வந்தாய்? மாமன் வீட்டில ஈநுழைஞ்சா கூட கண்டு பிடிக்கிறியே என்னன்னுடா முடியுது உன்னால?;-))

காட்டான் said...

Blogger புலவர் சா இராமாநுசம் said...

நலமா நண்பரே!
பதிவும் அதிகமில்லே! நம்
பக்கமும் வரதில்லே!

புலவர் சா இராமாநுசம்//

வணக்கமையா நலமே நீங்கள் எப்படி? கட்டாயம் உங்கள் பக்கம் வருவேன் பணிச்சுமையால் முடியாதிருந்தது. இனி தொடர்வேன். வருகைக்கு நன்றி ஐயா.

காட்டான் said...

துஷ்யந்தன் said...

மாமா கதை நல்லாத்தான் இருக்கு...... மணிக்கும் எனக்கும் உங்க கடையில் ஒரு சம்பளம் இல்ல வேலையை ஏன் நீங்க எடுத்து தரப்படாது :)//

"துட்டரைக் கண்டால் தூர விலகு என்பார்கள்" உண்மையவாட மருமோனே?;-)))))))))))))))))))

காட்டான் said...

Blogger துஷ்யந்தன் said...

என்னது நீங்களும் பதிவரா???? இந்து கூத்து எப்போல இருந்து..... போங்க மாம்ஸ் நான் நம்ப மாட்டேன் !( பதிவர் என்பதை நீங்க இன்னும் நிருபிக்கனுமாம் :)//

நான் ஏன்யா நிருபிக்கணும்? நான் தூர நின்னாவே விடாம பதிவுலக மேடையில தூக்கி வைச்சு,மாமனும் ஒரு பதிவர்தான்னு சண்டைக்கு போறவங்க யார்? ஹி ஹி ஹி

காட்டான் said...

துஷ்யந்தன் said...

ஆனாலும் பதிவு போடாமலே பிரபல பதிவர் ஆனது நீங்க மட்டும்தான் மாம்ஸ்.... ஹீ ஹீ//

அட அப்பிடி ஒரு விளம்பரத்த எனக்கு தந்ததே நீதானே? ஹி ஹி உன்னால இப்ப எனக்கு அதிக மருமக்கள்டா.;-))

தனிமரம் said...

“தனிமரம் தோப்பாகாது” என பலதடவை, பெயரைப் பார்க்கும்போதெல்லாம் வாய் வரும்:)), ஆனாலும் சொல்லப்பயத்தில அடடடடடடக்கிடுவேன்:))).. ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).//
நான் றொம்ப நல்லவன் இல்லை என்பதை இப்படி சொல்லக்கூடாது பூனைக்குட்டி! ஹீ 

காட்டான் said...

ஹைதர் அலி said...

காட்டான் அண்ணே நலமா

கதை சொல்லும் நீதி என்னவோ?

கீ போர்டில் டைப் அடிச்ச கையும்
பதிவுகளை பார்வையிட்ட கண்ணும் சும்மா இருக்காதுன்னு சொல்ல வர்றீங்களா?//

வணக்கம் ஹைதர் அலி! வாங்கோ வாங்கோ.. எல்லோரும் கத சொல்கிறார்கள் என்று நானும் சொல்லபோனேன். ஹி ஹி சொல்லிய விதம் பிசகிச்சோ? அடுத்த தடவை இன்னும் ஆழமா சொல்ல முயற்சிக்கிறேன். வருகைக்கு நன்றி.!!

தனிமரம் said...

ஓம் ஓம் தனிமரம் நேசன்.பூனைக்குட்டிக்கெண்டு கும்மியடிக்க சில இடங்கள் இருக்கு.கூட்டம் சேர்த்து அங்க நிண்டு கும்மியடிக்கும்.நாங்களும் அவைய்ளின்ர ஆக்கள்தான்.எங்கட பக்கம் வாறேல்ல.

சரியெண்டு பூனைக்குட்டின்ர பதிவுக்குப் போனால் அங்க 150 தாண்டிடும் கும்மி.பிறகெப்பிடி நாங்கள் பின்னூட்டம் போடுறது.பாத்துச் சிரிச்சபடியே வந்திருக்கிறன் கனதரம் !
// ஓம் ஹேமா அக்காள்  எட்டிப்பார்தாலே பயம் வரும் எனக்கு பின்னூட்டம் போட பலநிமிடம் காத்திருக்கனும் பூனையம்மா வீட்டில் அதற்குள் யாழ்தேவி காத்திருக்காது தனிமரத்திற்காக. நாங்கள் 
கும்மியடிக்க மாட்டம் என்று அவங்களுக்கு நினைப்புப் போல உப்புமடச்சந்தியில் வந்து பார்த்தா தெரியும் ஹீ ஹீ

காட்டான் said...

athira said...

//ஹேமா said...
பூனைக்குட்டிக்குப் பொறாமைபோல நான் காட்டான் மாமாவை மாமா எண்டு கூப்பிடுறது !///

ஹா..ஹா...ஹா.... இருக்காதோ பின்ன?:)) நான் அவசரப்பட்டு முந்திரிக்கொட்டைபோல “அண்ணன்” எனக் கூப்பிடு விட்டனோ என... நொந்து நூடில்ஸ்சாகிட்டன்:)))

ஹா ஹா.. அதிரா இப்பிடித்தான் மணியும் நிருபனும் மாட்டீட்டாங்க அண்ணர் அண்ணர் என்று சொல்லி.. இனி நீங்க மாமா என்று சொன்னா உங்களுக்கே ஒருமாதிரி இருக்கும். அதுதான் கீழ உள்ள உங்க கொமொன்ஸ் சொல்லுதே.. ;-))))

காட்டான் said...

//காட்டான் said...
உண்மைதான் அக்காள் இந்த பூனைக்குட்டிக்கு தனிமரம் ஒரு பதிவாளர் என்று தெரியாது போல?//


இங்கே விளம்பரம் செய்ய கட்டணம் அறவிடப்படும் என்பதை அறியத்தருகிறோம்..!! ;-))///

ஹா..ஹா...ஹா... என்னால முடியேல்லை சாமீஈஈஈஈஈஈஈ:))).. அது விளம்பரம் அல்ல காட்டான் அண்ணன்... அது அவர் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா சொன்னவர்:).//


நீங்க வேற ஹேமா பதிவு போட்டா நேசன் தொல்லை தாங்க முடியாது. அடிக்கடி டெலிபோன் எடுத்து பதிவை பார்த்தியா? பதிவை பார்த்தியான்னு ஒரே தொல்லை.. அவனுக்கு பிடிச்ச பதிவர்களில் ஹேமா முதலிடம் அவன் சொன்னத வைச்சு சொல்கிறேன்.!!

காட்டான் said...

Blogger ஹேமா said...

பூனையாருக்கு அதென்ன அடிக்கடி 6 வயசுக் கணக்கு வருது.இண்டைக்கு ஐபிசி ரேடியோவில கேட்டிச்சினம் உங்களுக்கு விடை தெரியாத விஷயம் என்னெண்டு.நான் இந்த 6 வயசுப் பிரச்சனையைத்தான் சொன்னன்.அவைக்கும் விளங்கேல்ல !//

ஹா ஹா அதெல்லாம் ஒண்ணுமில்ல சின்ன வயசில எதாவது ஒரு முக்கியமான சம்பவம் நடந்தால் நாங்க மறக்கமாட்டம். அத போல அவங்களுக்கு ஆறு வயசில எதோ நடந்திருக்கு என்னை போல? கிணத்துக்குள் விழுந்த சாரை பாம்பை கல்லெடுத்து கொன்னோம் எட்டு வயசில.. அது இன்னும் மறக்கல ஏன்னா அண்டைக்குதனே அம்மா தென்னையில கட்டி வைச்சு அடிச்சாங்க.. நானும் எட்டு வயசில இருந்து நல்லவன்தான். ;-)))

முற்றும் அறிந்த அதிரா said...

//ஹேமா said...
பூனையாருக்கு அதென்ன அடிக்கடி 6 வயசுக் கணக்கு வருது.இண்டைக்கு ஐபிசி ரேடியோவில கேட்டிச்சினம் உங்களுக்கு விடை தெரியாத விஷயம் என்னெண்டு.நான் இந்த 6 வயசுப் பிரச்சனையைத்தான் சொன்னன்.அவைக்கும் விளங்கேல்ல //

ஹா..ஹா..ஹா... ச்ச்ச்ச்சோஓஓஓ சிம்பிள்:)) இதுக்கெல்லாம் எதுக்கு ஐபிசி வரை போனனீங்க?:).. எங்கட அம்மம்மாவுக்கு ஒரு கோல் போட்டிருந்தால் சொல்லியிருப்பாவே:)).. அவ இப்ப எங்க இருக்கிறா எனக் கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

ஹையோ..ஹையோ.. காட்டான் அண்ணன் நீங்கள் இதை விட, சிவலையனைக் குளிப்பாட்டியிருக்கலாம்:), இப்போ பின்னூட்டத்துக்குப் பதில் சொல்லுறதுக்கே நேரமில்லாமல் திண்டாடுறிங்கள்போல இருக்கே:):)))

முற்றும் அறிந்த அதிரா said...

//தனிமரம் said...
ஓம் ஓம் தனிமரம் நேசன்.பூனைக்குட்டிக்கெண்டு கும்மியடிக்க சில இடங்கள் இருக்கு.கூட்டம் சேர்த்து அங்க நிண்டு கும்மியடிக்கும்.நாங்களும் அவைய்ளின்ர ஆக்கள்தான்.எங்கட பக்கம் வாறேல்ல.

சரியெண்டு பூனைக்குட்டின்ர பதிவுக்குப் போனால் அங்க 150 தாண்டிடும் கும்மி.பிறகெப்பிடி நாங்கள் பின்னூட்டம் போடுறது.பாத்துச் சிரிச்சபடியே வந்திருக்கிறன் கனதரம் !
// ஓம் ஹேமா அக்காள் எட்டிப்பார்தாலே பயம் வரும் எனக்கு பின்னூட்டம் போட பலநிமிடம் காத்திருக்கனும் பூனையம்மா வீட்டில் அதற்குள் யாழ்தேவி காத்திருக்காது தனிமரத்திற்காக. நாங்கள்
கும்மியடிக்க மாட்டம் என்று அவங்களுக்கு நினைப்புப் போல உப்புமடச்சந்தியில் வந்து பார்த்தா தெரியும் ஹீ ஹீ///

காட்டான் அண்ணன்.. நீங்கதான் காப்பாத்தோணும்:)).. ஒரு அப்பாவியைப் பார்த்து(அது நாந்தேன்:))எனக்கென்னமோ பயம்ம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கு:))..

இது ஏதோ கூட்டுச் சேர்ந்து நடக்குது:))).... நான் மாட்டேன்.. நான் மாட்டேன்.... என்னைக் கூட்டிப்போய் உப்புப் போடப்போயினம்:))... முருகா என்னைக் காப்பத்தப்பா.. நான் காணாமல் போன அந்த 5 பவுண் சங்கிலியைக் கண்டு பிடிட்டு:)) எப்படியாவது வள்ளி கழுத்தில போடுவேன்:))

முற்றும் அறிந்த அதிரா said...

//தனிமரம் said...
“தனிமரம் தோப்பாகாது” என பலதடவை, பெயரைப் பார்க்கும்போதெல்லாம் வாய் வரும்:)), ஆனாலும் சொல்லப்பயத்தில அடடடடடடக்கிடுவேன்:))).. ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).//
நான் றொம்ப நல்லவன் இல்லை என்பதை இப்படி சொல்லக்கூடாது பூனைக்குட்டி! ஹீ///

உஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாச் சொல்லுங்கோ.... காதில கேட்டிடப்போகுது:))... எல்லோருக்கும் பாம்புக் காது:)) ஹையோ.. இனியும் இங்கின நிண்டால் ஆபத்தூஊஊஊஊஊ:)

ஹேமா said...

பூனைக்குட்டியார்போல ஒரேயடியாக் கும்மியடிக்க எங்களுக்கு ஏலாது.பாருங்கோ காட்டான் மாமா கனநாளுக்குப்பிறகு பதிவு போட 3 நாளாக் கும்மியடிக்கிறம் இன்னும் 100 கூட வரேல்ல.காட்டான் மாமான்ர அடுத்த பதிவுவரைக்கும் விட்டு விட்டுக் கும்மியடிச்சு ஒப்பேத்தலாம் !

இப்பகூட 6 வயசின்ர மர்மம் தெரியேல்ல.அதோட இப்ப கொஞ்ச நாளா 5 பவுண் சங்கிலியாம்.அப்பாவிப் பூனைக்குட்டி தன்ர லவ்வரிட்ட குடுத்திருக்கும்.அதைப் போய் தேம்ஸ்ல தேடினாக் கிடைக்குமோ !

ஓம் ஓம் பின்ன நேசனுக்கு என்னைப் பிடிக்காமப் போகுமோ.எழுத்துப்பிழைக்கு வாங்கிறவரெல்லே நல்ல பேச்சு.ஆனா திரு(த்)ந்தவே
மாட்டார் !

காட்டான் மாமாவுக்கும் 6 வயசு 8 வயசு எல்லாம் ஞாபகம் வருது.

athira said...

ஹேமா said...
பூனைக்குட்டியார்போல ஒரேயடியாக் கும்மியடிக்க எங்களுக்கு ஏலாது.பாருங்கோ காட்டான் மாமா கனநாளுக்குப்பிறகு பதிவு போட 3 நாளாக் கும்மியடிக்கிறம் இன்னும் 100 கூட வரேல்ல.காட்டான் மாமான்ர அடுத்த பதிவுவரைக்கும் விட்டு விட்டுக் கும்மியடிச்சு ஒப்பேத்தலாம் ////

அடுத்த பதிவுவரை கும்மியடிச்சால் ஆயிரத்தைத் தாண்டிடும், ஏனெனில் இனி அடுத்த மே மாதம் அமாவாசைக்குத்தான் அடுத்த பதிவு வெளிவரும்:)))... உஸ்ஸ் நான் இப்பவும் கட்டிலுக்குக் கீழதான்:)

athira said...

ஹேமா said...
///
இப்பகூட 6 வயசின்ர மர்மம் தெரியேல்ல.அதோட இப்ப கொஞ்ச நாளா 5 பவுண் சங்கிலியாம்.அப்பாவிப் பூனைக்குட்டி தன்ர லவ்வரிட்ட குடுத்திருக்கும்.அதைப் போய் தேம்ஸ்ல தேடினாக் கிடைக்குமோ !///

நோ.. நோஒ... லவ்வர் பூஸுக்குப் போட்டதை:)), ஆரோ மணி கட்டின ஆட்கள் களவெடுத்திட்டினம், பூஸ் பிரான்ஸ் பக்கமா தலையைத் தலையை ஆட்டத் தொடங்கிட்டுது:)).. அதை வச்சே கையும் களவுமாப் பிடிச்சாச்சு ஆளை:)).. ஆனா சங்கிலி இன்னும் கிடைக்கேல்லை:(... அது எப்போ கிடைச்சு, நான் எப்போ வள்ளிக்குப் போட்டு என் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதாம்:)).. அதால நொந்து நூடில்சாகிப்போய் இருக்கிறன், நீங்க அவிங்களுக்குச் சப்போர்ட் பண்ணலாமோ?:)))))கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

athira said...

ஹேமா said...//
ஓம் ஓம் பின்ன நேசனுக்கு என்னைப் பிடிக்காமப் போகுமோ.எழுத்துப்பிழைக்கு வாங்கிறவரெல்லே நல்ல பேச்சு.ஆனா திரு(த்)ந்தவே
மாட்டார் !///

உண்மையாகவோ? திருந்தவே மாட்டாராமோ?:))).. கொஞ்சம் நில்லுங்க.. தி.க.பி சட்டம் 345 ..ப்படி... அவருக்குச் சங்கிலி போட்டிடலாம்:)) இது வேற சங்கிலி:))



/////காட்டான் மாமாவுக்கும் 6 வயசு 8 வயசு எல்லாம் ஞாபகம் வருது//

அது வயசு ஏற ஏறப்...பருவமேறி இளமை திரும்புதூஊஊஊஊஊ:)) ஐ மீன்.. இளைய நினைவெல்லாம் வருகுதென்னேன்:))).. எவ்ளோ நல்ல விஷயம் சொன்ன என்னைப்பார்த்து உப்பூடி முறைக்கலாமோ:)))...

பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் எனச் சிலர் ஏசுவினம்... அதாலதான் அடிக்கடி காட்டான் அண்ணனின் பெயரையும் இழுத்துக் கதைக்கிறேன்:)).. அப்போ சம்பந்தம் இருக்குதுதானே?:) எப்பூடி என் கிட்னி யா?:)))))..

மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))... இடையில நிரம்பட்டும் நான் சதமடிக்க வருவன்:)).. மேள தாளத்தோடு:)).

ஹேமா said...

ஓ...5 பவுண் சங்கிலிக் கதை அப்பிடியே.ஆளைப் பிடிச்சாச்சோ.அதுவும் பிரான்சிலையோ.எனக்கு 2-3 பேரைத் தெரியும்.சொல்லி மாட்டி வைப்பம்.ஐடியா மணியத்தார்,துஷியன்,காட்டான் மாமா,நேசன்....இன்னும் இருக்கினம்.இவைக்குள்ள அந்தக் கள்ளன் ஆரப்பா ?

பூனையாரின்ர கிட்னி சூப்பராத்தான் வேலை செய்யுது !

தனிமரம் said...

ஓ...5 பவுண் சங்கிலிக் கதை அப்பிடியே.ஆளைப் பிடிச்சாச்சோ.அதுவும் பிரான்சிலையோ.எனக்கு 2-3 பேரைத் தெரியும்.சொல்லி மாட்டி வைப்பம்.ஐடியா மணியத்தார்,துஷியன்,காட்டான் மாமா,நேசன்....இன்னும் இருக்கினம்.இவைக்குள்ள அந்தக் கள்ளன் ஆரப்பா ?

பூனையாரின்ர கிட்னி சூப்பராத்தான் வேலை செய்யுது !

தனிமரம் said...

இது ஏதோ கூட்டுச் சேர்ந்து நடக்குது:))).... நான் மாட்டேன்.. நான் மாட்டேன்.... என்னைக் கூட்டிப்போய் உப்புப் போடப்போயினம்:))... முருகா என்னைக் காப்பத்தப்பா.. நான் காணாமல் போன அந்த 5 பவுண் சங்கிலியைக் கண்டு பிடிட்டு:)) எப்படியாவது வள்ளி கழுத்தில போடுவேன்:)) இது யோகா ஐயாவிற்கு கடியாக்கும்.ஹீ ஹீ

தனிமரம் said...

ஹேமா said...
பூனைக்குட்டியார்போல ஒரேயடியாக் கும்மியடிக்க எங்களுக்கு ஏலாது.பாருங்கோ காட்டான் மாமா கனநாளுக்குப்பிறகு பதிவு போட 3 நாளாக் கும்மியடிக்கிறம் இன்னும் 100 கூட வரேல்ல.காட்டான் மாமான்ர அடுத்த பதிவுவரைக்கும் விட்டு விட்டுக் கும்மியடிச்சு ஒப்பேத்தலாம் ////

அடுத்த பதிவுவரை கும்மியடிச்சால் ஆயிரத்தைத் தாண்டிடும், ஏனெனில் இனி அடுத்த மே மாதம் அமாவாசைக்குத்தான் அடுத்த பதிவு வெளிவரும்:)))... உஸ்ஸ் நான் இப்பவும் கட்டிலுக்குக் கீழதான்:)
// இப்படி பூனைக்குட்டியார் உண்மையைச் சொன்னதற்கு வெள்ளிச் சங்கிலி வாங்கித்தாரன் வீட்டுக்காரியிடம் கடன் வாங்கி. அவ்வ்வ்

தனிமரம் said...

ஓம் ஓம் பின்ன நேசனுக்கு என்னைப் பிடிக்காமப் போகுமோ.எழுத்துப்பிழைக்கு வாங்கிறவரெல்லே நல்ல பேச்சு.ஆனா திரு(த்)ந்தவே 
மாட்டார் !///

உண்மையாகவோ? திருந்தவே மாட்டாராமோ?:))).. கொஞ்சம் நில்லுங்க.. தி.க.பி சட்டம் 345 ..ப்படி... அவருக்குச் சங்கிலி போட்டிடலாம்:)) இது வேற சங்கிலி:))// இப்படி இவன் திருந்த மாட்டானோ என்று முப்திரண்டு வருசமா ஒரு தாய்க்குலம் களைத்துப்போய் மருமகளிடம் கொடுத்து அவளும் ஒரு ஜொஞ்சவருசம் இதே பல்லவி கேட்டே பாதிக்காது செவிடாப்போச்சு !ஹீ ஹீ

ஹேமா said...

101....அப்பாடி !

தனிமரம் said...

ஓம் ஓம் பின்ன நேசனுக்கு என்னைப் பிடிக்காமப் போகுமோ.எழுத்துப்பிழைக்கு வாங்கிறவரெல்லே நல்ல பேச்சு.ஆனா திரு(த்)ந்தவே 
மாட்டார் !///

உண்மையாகவோ? திருந்தவே மாட்டாராமோ?:))).. கொஞ்சம் நில்லுங்க.. தி.க.பி சட்டம் 345 ..ப்படி... அவருக்குச் சங்கிலி போட்டிடலாம்:)) இது வேற சங்கிலி:))// இப்படி இவன் திருந்த மாட்டானோ என்று முப்திரண்டு வருசமா ஒரு தாய்க்குலம் களைத்துப்போய் மருமகளிடம் கொடுத்து அவளும் ஒரு கொஞ்சவருசம் இதே பல்லவி கேட்டே பாதிக்காது செவிடாப்போச்சு !ஹீ ஹீ

28 February 2012 15:28

தனிமரம் said...

101....அப்பாடி !
 அக்காள் வேலை முடிந்துவிட்டது யாழ்தேவி 5.30 வெளிக்கிடவேனும்.ஹீ ஹீ 

ஹேமா said...

பூனைக்குட்டியார் உங்களுக்குச் சங்கிலி தாறதாச் சொல்லிக்கிடக்கு.வாங்கிக்கொள்ளுங்கோ நேசன்.இனி எழுத்துப்பிழை வரக்கூடாது சரியோ !

காட்டான் said...

ஹையோ..ஹையோ.. காட்டான் அண்ணன் நீங்கள் இதை விட, சிவலையனைக் குளிப்பாட்டியிருக்கலாம்:), இப்போ பின்னூட்டத்துக்குப் பதில் சொல்லுறதுக்கே நேரமில்லாமல் திண்டாடுறிங்கள்போல இருக்கே:):)))//

ஹா ஹா உண்மைதான் அதிரா.. ஆனாலும் எப்பிடியோ அடுத்த பதிவுக்குள்ள பதில் சொல்லிடுவன்;-)) பூசார் குழப்படி செய்யாமல் இருந்தால்)))

காட்டான் said...

Blogger athira said...

ஹேமா said...
பூனைக்குட்டியார்போல ஒரேயடியாக் கும்மியடிக்க எங்களுக்கு ஏலாது.பாருங்கோ காட்டான் மாமா கனநாளுக்குப்பிறகு பதிவு போட 3 நாளாக் கும்மியடிக்கிறம் இன்னும் 100 கூட வரேல்ல.காட்டான் மாமான்ர அடுத்த பதிவுவரைக்கும் விட்டு விட்டுக் கும்மியடிச்சு ஒப்பேத்தலாம் ////

அடுத்த பதிவுவரை கும்மியடிச்சால் ஆயிரத்தைத் தாண்டிடும், ஏனெனில் இனி அடுத்த மே மாதம் அமாவாசைக்குத்தான் அடுத்த பதிவு வெளிவரும்:)))... உஸ்ஸ் நான் இப்பவும் கட்டிலுக்குக் கீழதான்:)//

உஸ் அதிரா.. அண்ணனுக்கு அமாவாசைக்குதான் பதிவெழுத வரும்ன்னு அண்ணன காட்டி கொடுக்காத.. இவங்கல்லாம் நான் எதோ நல்ல மனநிலையில்தான் பதிவெழுவதாக நினைக்கிறாங்க.. ;-))))

athira said...

அச்சச்சோ.. 100 போச்சே:))... 100 ஐ எடுத்துக்கொண்டு யாழ்தேவியில் எஸ்கேப்பான ”...”க்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

athira said...

//ஹேமா said...
ஓ...5 பவுண் சங்கிலிக் கதை அப்பிடியே.ஆளைப் பிடிச்சாச்சோ.அதுவும் பிரான்சிலையோ.எனக்கு 2-3 பேரைத் தெரியும்.சொல்லி மாட்டி வைப்பம்.ஐடியா மணியத்தார்,துஷியன்,காட்டான் மாமா,நேசன்....இன்னும் இருக்கினம்.இவைக்குள்ள அந்தக் கள்ளன் ஆரப்பா ?

பூனையாரின்ர கிட்னி சூப்பராத்தான் வேலை செய்யுது //

ஹேமா...ஹேமா... உங்கட கிட்னியை இப்பூடியெல்லாம் ச்ச்ச்சும்மா..ச்ச்சூஊம்மா யோசிக்க வைத்து வேஸ்ட் பண்ணாதீங்க:)) அதை வேறேதும் தேவைக்குப் பாவிக்கலாம், பத்திரம்:).

இந்த லிஸ்ட்ல யோகா அண்ணனும் இருக்கிறார். ஆனா நான் கையும் களவுமா ஆளைப் பிடிச்சிட்டேன்... அதுதான் சொன்னேனே “மணி” கட்டின ஆட்கள் என:)).

எங்கிட்டயேவா... என் 5 பவுணை எடுத்து, இப்போ, தான் பத்துப் பவுணில முருகனுக்குப் போடப்போவதாக, நிரூபன் பக்கத்தில பேசினதை ஒட்டுக்கேட்டேன்... விட்டிடுவனோ நான்?:)) என்ர கை என்ன புளியங்காய் பிடுங்கப் போயிடுமோ?:))

athira said...

//தனிமரம் said...
////


// இப்படி பூனைக்குட்டியார் உண்மையைச் சொன்னதற்கு வெள்ளிச் சங்கிலி வாங்கித்தாரன் வீட்டுக்காரியிடம் கடன் வாங்கி. அவ்வ்////

இல்ல இல்ல வெள்ளி வாணாம் அது அலர்ஜி:)) அது வாணாம், நீங்க அவட காதில இருக்கிற வைரத்தோட்டைக் கழட்டிக் கொடுங்கோவன்:))

athira said...

///தனிமரம் said...
/ இப்படி இவன் திருந்த மாட்டானோ என்று முப்திரண்டு வருசமா ஒரு தாய்க்குலம் களைத்துப்போய் மருமகளிடம் கொடுத்து அவளும் ஒரு ஜொஞ்சவருசம் இதே பல்லவி கேட்டே பாதிக்காது செவிடாப்போச்சு !ஹீ ஹீ///

இப்பத்தானே தெரியுது, ஹேமா எப்பூடித் திட்டினாலும், இவர் ஏன் சிரிச்சுக்கொண்டு திரிகிறவர் என:)).... ஏனெண்டால் காது காட்கிறேல்லையாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

athira said...

//ஹேமா said...
பூனைக்குட்டியார் உங்களுக்குச் சங்கிலி தாறதாச் சொல்லிக்கிடக்கு.வாங்கிக்கொள்ளுங்கோ நேசன்.இனி எழுத்துப்பிழை வரக்கூடாது சரியோ !///

ஹையோ ஹையோ... இதெல்லாம் வாங்கிப் போடுற சங்கிலி இல்ல:))).... கையில போட்டுக்கூட்டிப்போய் கம்பி எண்ண வைக்கிற சங்கிலி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))

athira said...

//உஸ் அதிரா.. அண்ணனுக்கு அமாவாசைக்குதான் பதிவெழுத வரும்ன்னு அண்ணன காட்டி கொடுக்காத.. இவங்கல்லாம் நான் எதோ நல்ல மனநிலையில்தான் பதிவெழுவதாக நினைக்கிறாங்க.. ;-))))///

உந்தக் கதையை விட்டுப்போட்டு அடுத்த பதிவை ரெடி பண்ணுங்கோ:))), யாழ்தேவி திரும்பி வரமுன்னர்:), பெளர்ணமிக்குப் போடிடலாம்:))

நிரூபன் said...

மக்களே! ஜனங்களே! பெரியோர்களே! பல நாள் தூசு தட்டாம இருந்த ப்ளாக்கை நான் ஏலத்தில விட்டிருந்தேன். ப்ளாக் ஓனரும் சம்மருக்கு கோவணத்தை கட்டிக்கிட்டு ஊர் சுத்த போயிட்டாரு! ஆனால்...மறுபடியும் இப்போ ஏலத்தில கொடுத்த ப்ளாக்கில எழுதி தானும் ஓர் பதிவருன்னு நிரூபிச்சிட்டாரே! இன்னைக்கு முழுக்க மழையாம் பிரான்ஸில!
ஒரு வேளை இதற்கு அது தான் காரணமாக இருக்குமோ?

நிரூபன் said...

வணக்கம்!
நீண்ண்ண்ண்ண்ட நாட்களின் பின்னர் எனது பிளாக்கை திறந்து பார்த்த பின்னர்தான் விளங்குது 2012 இல் ஒருபதிவுமே போடல என்று! ('ஆமா, நீ ஒவ்வொரு நாளும் பதிவு போடுற ஆள்தானே!' என்று கேட்பது காதில் விழுகிறது ..!! ஹி ஹி ) /

யோவ்...எவண்டா அவன் ஏலம் கொடுத்த ப்ளாக்கில கையை வைச்சது! பிச்சுப் புடுவேன் பிச்சு!

நிரூபன் said...

என்ன மாதிரியெல்லாம் யோசித்து லஞ்சம் வாங்கிறாங்க பாருங்க!

அண்ணர், உங்களுக்கும் சம்பளம் இல்லாத வேலை ஒன்று என் கைவசம் இருக்கு! ஆனால் நீங்க லஞ்சம் வாங்க முடியாது! என்ன வேலை சொல்லவே!

என் ப்ளாக்கை மெயிண்டேன் பண்ணனும். நீங்க ஓக்கேன்னா இப்பவே பாஸ்வேர்ட்டை அனுப்பி வைக்கிறேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படியாச்சும் நாளுக்கு ஒரு பதிவு போட்டு பழைய மாதிரி ப்ளாக்கை குளிர்விக்கலாம் என்று ப்ளான் பண்ணியிருக்கேன்! லாச்சப்பல் விநாயகா! நீ தான் அருள் புரியனும்!

பி.அமல்ராஜ் said...

மாம்ஸ், நீங்களும் பதிவர் என்றத நிரூபிச்சிட்டீங்க... வாழ்த்துக்கள். கதை அருமை. நல்ல பாடம்.. எனக்கும் இந்த அரசாங்க உத்தியோகம் என்று பீத்திக்கொண்டு திரிபவர்களை பார்த்தாலே கடுப்புத்தான் வரும்.

நிரூபன் said...

athira said...
//ஹேமா said...
ஓ...5 பவுண் சங்கிலிக் கதை அப்பிடியே.ஆளைப் பிடிச்சாச்சோ.அதுவும் பிரான்சிலையோ.எனக்கு 2-3 பேரைத் தெரியும்.சொல்லி மாட்டி வைப்பம்.ஐடியா மணியத்தார்,துஷியன்,காட்டான் மாமா,நேசன்....இன்னும் இருக்கினம்.இவைக்குள்ள அந்தக் கள்ளன் ஆரப்பா ?

பூனையாரின்ர கிட்னி சூப்பராத்தான் வேலை செய்யுது //

ஹேமா...ஹேமா... உங்கட கிட்னியை இப்பூடியெல்லாம் ச்ச்ச்சும்மா..ச்ச்சூஊம்மா யோசிக்க வைத்து வேஸ்ட் பண்ணாதீங்க:)) அதை வேறேதும் தேவைக்குப் பாவிக்கலாம், பத்திரம்:).
//

அட்ரா....அட்ரா....அட்ரா...

என்னமோ சொல்லுறாங்கப்பா...எனக்கு ஒன்னுமே புரியலையே!

நிரூபன் said...

athira said...
//ஹேமா said...
ஓ...5 பவுண் சங்கிலிக் கதை அப்பிடியே.ஆளைப் பிடிச்சாச்சோ.அதுவும் பிரான்சிலையோ.எனக்கு 2-3 பேரைத் தெரியும்.சொல்லி மாட்டி வைப்பம்.ஐடியா மணியத்தார்,துஷியன்,காட்டான் மாமா,நேசன்....இன்னும் இருக்கினம்.இவைக்குள்ள அந்தக் கள்ளன் ஆரப்பா ?

பூனையாரின்ர கிட்னி சூப்பராத்தான் வேலை செய்யுது //

ஹேமா...ஹேமா... உங்கட கிட்னியை இப்பூடியெல்லாம் ச்ச்ச்சும்மா..ச்ச்சூஊம்மா யோசிக்க வைத்து வேஸ்ட் பண்ணாதீங்க:)) அதை வேறேதும் தேவைக்குப் பாவிக்கலாம், பத்திரம்:).
//

அடிக்கடி பாவிக்கனுமாம்! பாவிக்காம வைச்சிருந்தா சரியான நேரத்தில வேலை செய்யாது என்று சொல்லுகீனம்! உண்மையாமோ?
நான் கிட்னியை சொன்னேன்!

ஆமினா said...

என்னைய விட்டுட்டு எல்லாரும் கும்மி அடிச்சீங்களாக்கும்?????

நா சண்ட!

டுக்கா...

அழுவாச்சி அழுவாச்சியா வருது!

ஆமினா said...

நா இல்லாம கமென்ட் மழை பொழிந்த அதிரா,ஹேமா, நிரூ, மணிக்கு என் சாபங்கள் உரித்தாவதாக!

ஹேமா said...

ஆமினா...கவனிச்சீங்களோ நாங்கள் இரவோட இரவா அதுவும் தனியத் தனிய 3/4 நாளாக் கும்மியடிக்கிறம்.அதுக்குப் போய் இப்பிடிச் சாபம் போடுறதோ.காட்டன் மாமா அடுத்த பதிவு போடுறவரை இது தொடரும்.நீங்களும் தொடுத்துக்கொளுங்கோ ஆமினா !

என்ர கிட்னியைப் பக்குவம் பாக்கட்டாம் பூனைக்குட்டி.நன்றி நன்றி.அடுத்த கவிதைக்குக் கொஞ்சம் தேவையாத்தானிருக்கு !

ஏலம்விட்ட ப்ளாக்கிலயோ காட்டான் மாமா பதிவு போட்டவர்.அப்பிடிப் போடலாமோ நிரூ? !

ஓ...ஓ...மணி விளங்கிப்போச்சி.கிட்னியக் கொஞ்சம் சரியாக்கத்தான் வேணும் !

காட்டான் said...

அட கும்மி இன்னும் ஓயவில்லையா? சரி சரி நடத்துங்க நடத்துங்க........ ;-))

ஆமினா said...

//ஆமினா...கவனிச்சீங்களோ நாங்கள் இரவோட இரவா அதுவும் தனியத் தனிய 3/4 நாளாக் கும்மியடிக்கிறம்.அதுக்குப் போய் இப்பிடிச் சாபம் போடுறதோ.காட்டன் மாமா அடுத்த பதிவு போடுறவரை இது தொடரும்.நீங்களும் தொடுத்துக்கொளுங்கோ ஆமினா !//

என்னதான் ரீசன் சொன்னாலும் ஒத்துக்கப்படா...

நா அழுவுறேன்ன்ன்ன் ஆ........ஊ.............ஆ.............ஈ.............

நல்லா இருங்க மக்கா! நல்லா இருங்க!

தனிமரம் said...

இல்ல இல்ல வெள்ளி வாணாம் அது அலர்ஜி:)) அது வாணாம், நீங்க அவட காதில இருக்கிற வைரத்தோட்டைக் கழட்டிக் கொடுங்கோவன்:))//
பூனைக்குட்டிக்குத் தெரியாது போல இங்க கறுவல்,அடையான் ஒத்துக்கொண்டு போறதில் வீட்டுக்காரி வைரத்தோட்டை வட்டிக்கடையில் சீசீ வங்கியில் பத்திரமாக வைத்துவிட்டு வெள்ளித்தோட்டில் விதம் விதமாக போடுவதால் கழட்டிக்கொடுதுவிடுவாள் வாங்கி அனுப்புறன்.ஹீ ஹீ

தனிமரம் said...

இல்ல இல்ல வெள்ளி வாணாம் அது அலர்ஜி:)) அது வாணாம், நீங்க அவட காதில இருக்கிற வைரத்தோட்டைக் கழட்டிக் கொடுங்கோவன்:))//
பூனைக்குட்டிக்குத் தெரியாது போல இங்க கறுவல்,அடையான் ஒத்திக்கொண்டு போறதில் வீட்டுக்காரி வைரத்தோட்டை வட்டிக்கடையில் சீசீ வங்கியில் பத்திரமாக வைத்துவிட்டு வெள்ளித்தோட்டில் விதம் விதமாக போடுவதால் கழட்டிக்கொடுதுவிடுவாள் வாங்கி அனுப்புறன்.ஹீ ஹீ எழுத்துபிழை இப்படித்தான் வருகின்றது அவ்வ்வ்வ்

தனிமரம் said...

///தனிமரம் said...
/ இப்படி இவன் திருந்த மாட்டானோ என்று முப்திரண்டு வருசமா ஒரு தாய்க்குலம் களைத்துப்போய் மருமகளிடம் கொடுத்து அவளும் ஒரு ஜொஞ்சவருசம் இதே பல்லவி கேட்டே பாதிக்காது செவிடாப்போச்சு !ஹீ ஹீ///

இப்பத்தானே தெரியுது, ஹேமா எப்பூடித் திட்டினாலும், இவர் ஏன் சிரிச்சுக்கொண்டு திரிகிறவர் என:)).... ஏனெண்டால் காது காட்கிறேல்லையாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).
//காதில் ஒலிப்பது லங்காசிரி எப்.எம் ஒரு புறம் என்றால் அடுத்த சாப்பாடு ஒரு ஆட்டுக்கறி என்று இப்படி இருக்கும் நேரத்திலும் பின்னூட்டம் போடுவம் இல்ல! பூனைக்குட்டி அம்மனி ! ஹீ ஹீ

முற்றும் அறிந்த அதிரா said...

//நிரூபன் said...
வணக்கம்! ) /

யோவ்...எவண்டா அவன் ஏலம் கொடுத்த ப்ளாக்கில கையை வைச்சது! பிச்சுப் புடுவேன் பிச்சு!

/// காட்டான் அண்ணனைப் பற்றி, ஆரது கண்ட பாஷையில கதைக்கிறது.. தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன் ஜாக்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்தை:)).

முற்றும் அறிந்த அதிரா said...

//ஆமினா said...
//

என்னதான் ரீசன் சொன்னாலும் ஒத்துக்கப்படா...

நா அழுவுறேன்ன்ன்ன் ஆ........ஊ.............ஆ.............ஈ.............

/////

இந்த சவுண்டைப் பார்த்தா அழுகிறதுபோல தெரியல்லியே:)).. ஏதோ மட்டின் பிர்ர்ர்ர்ர்ராணி சாப்பிட்டு, ஏப்பம் விடும் சவுண்ட் போல இருக்கே அவ்வ்வ்வ்வ்:)))... உஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்:))

முற்றும் அறிந்த அதிரா said...

//தனிமரம் said...
//
//காதில் ஒலிப்பது லங்காசிரி எப்.எம் ஒரு புறம் என்றால் அடுத்த சாப்பாடு ஒரு ஆட்டுக்கறி என்று இப்படி இருக்கும் நேரத்திலும் பின்னூட்டம் போடுவம் இல்ல! பூனைக்குட்டி அம்மனி ! ஹீ //

அச்சச்சோ என்ன நடந்தது... தனியா இருக்கும் மரத்துக்கு:)).. என்னென்னமோ சொல்றார்.. ஆட்டுக்கறியாம்.. :)).

காட்டான் அண்ணன் ஓடிவாங்கோ, எனக்குப் புரிஞ்சுபோச்சூ... மேலே இருகிற உங்கட மே..மே.. இலதான்(அதுதான் ஆடு வச்சிருக்கிறீங்கள் எல்லோ:)) கண்ணை வச்சிட்டார் என நினைக்கிறேன்:), இப்போ சிவலயனைப் பற்றிக் கவலைப்படாமல், ஆட்டைப் பாதுகாக்கும் வேலையைப் பாருங்கோ,

போனாப்போகுது, புதுவீடு வாங்கிடலாம்:), ஆபத்துக்குப் பாவமில்லை, கொஞ்ச நாளைக்கு ஆட்டை வீட்டுகுள்ள கட்டி வையுங்கோ சொல்லிட்டன்:)) பிறகு கவலைப்பட்டுப் பிரயோசனமில்லை... ஆடு யாழ்தேவியில ஏறி, தனிமரத்துக்கு பிர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆணி ஆகப்போகுது.. முதல்ல அதைக் காப்பாத்துங்கோஓஓ:))

முற்றும் அறிந்த அதிரா said...

ஹேமாவை இந்தப் பக்கம் காணேல்லை:)) ஒருவேளை கிட்னியைப் பத்திரபடுத்தச் சொன்னதிலிருந்து:), கவனமாகப் பாவிக்கிறாபோல:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்:))... நான் ஊர் வம்பெல்லாம் பேசுறேல்லை:), 6 வயசிலிருந்தே நான் ரொம்ப நல்ல பொண்ணு:).

ஹேமா said...

இருக்கிறன் இருக்கிறன் அங்க சுத்தி இங்க சுத்தி காட்டான் மாமான்ர கொட்டிலுக்கதான்.என்ர கிட்னி சரில்ல.உங்களைப்போல சிரிக்கச் சிரிக்க ஏதாவது சொல்ல வருதில்ல.அதான் யோசிச்சுக்கொண்டிருக்கிறன்.

ஆமினா...பாவம் உண்மையாத்தான் அழுதவ.அதான் காட்டான் மாமா அடுத்த பதிவு போடுற வரைக்கும் கும்மியடிக்கிறம் எண்டு காட்டான் மாமாட்ட கேட்டிருக்கிறன்.எங்கட ஆக்கினை தாங்காம பாருங்கோ அடுத்த பதிவு டக் எண்டு போடுவார்.இல்லாட்டி கோமணத்தோட பழனி மலை உச்சிக்குப் பக்கத்து மலைக்குப் போனாலும் போய்டுவார் சிலநேரம் !

அதுசரி தெரியுமோ உங்கட 5 பவுண்/மணி....நாங்க பொன்னாடை போத்தப்போறம் மாத்தியோசி வடையண்ணாவுக்கு.அவர் லண்டனில வச்சு தனக்குப் பொன்னாடை போர்த்த ஒழுங்கு செய்யட்டாம்.இதில ஏதாவது உள்குத்து இருக்கோ பூனைக்குட்டி !

நேசன் லங்காஸ்ரீ ரேடியோ சரி காட்டான் மாமான்ர ஆடோ....கடவுளே.அநியாயம் இது.

தனிமரம் said...

நினைவுச்சின்னம் படத்தில் செந்தில் பாடுவது போல ஒரு காட்சிப்பாடல் கோழி தின்று  நாள் ஆச்சு நல்ல கோழி தின்று என் பதைக்கேட்கும் போது பங்கஜம் பாட்டியின் ஆட்டுக்கறி சாப்பிட்டு நல்ல நாள் ஆச்சு என்று பாடிக்கொண்டே சாப்பிடுவது நல்லம் தானே ஹேமா அக்காள்.
பூனைக்குட்டியார் நல்லா ஆட்டுப்புரியானி வைப்பா என்று யாரோ மாத்தியோசிக்கின்றவர் புலம்பியிருக்கிறார் தனிமரம் விடாது  ஆட்டையும் பூனையையும் ஹீ ஹீ கொர்ர்ர்ர்ர்ர்ர்!

ராஜி said...

லஞ்சம் எப்படி ஆரம்பிக்குதுன்னு உங்க கதை நல்லாவே வெளக்கிடுச்சு ஐயா. பகிர்வுக்கு நன்றி

எஸ் சக்திவேல் said...

அரசாங்க ஊழியன் என்றாலே நக்கல் உங்களுக்கு :-)

இருக்கட்டும் நான் தனியார் ஊழியனாக்கும்.

vimalanperali said...

அவனை லஞ்சம் வாங்க வழி வகுத்துக்கொடுத்தது எது? ஏன் மந்திரிக்கு தெரியாத கடல் அலகளை கணக்கிட முடியாது எனவும் அதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவுமாய்/

ராஜி said...

ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துக்கள். ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் நல்ல பதிவு போட்டிருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி

arul said...

nalla kathai

Athisaya said...

அருமையான கதை..பின்னூட்டம் வாசித்து மிகவும் களைப்பு....!

செங்கோவி said...

அட..மாம்ஸ் எப்போ திரும்பி வந்தாரு?...ஒரே நாள்ல 3 பதிவு..அப்போ அடுத்த பதிவு அடுத்த வருசமா ஐயா?