வணக்கம்..!!
டிஸ்கி- எல்லாரும் டிஸ்கியை கடைசியாக தான் எழுதுவாங்க. ஆனா நான் பதிவு எழுதணும் எண்டு எழுதல, என்ர மாப்பிள எழுதுற சங்கிலியன் தொடர் பிடிச்சிருக்கு.. இது கட்டாயம் அதிகமான பேரை சென்றடையவேண்டும் என்ற காரணத்தால அது பற்றி என் வலைத்தளத்திலே அறிமுகத்துடன்; என்ர மூஞ்சி புத்தகத்தில் போட்ட இரு தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த தொடர் உண்மையிலே நாம தெரிஞ்சுக்க வேண்டியது. யாரும் தவறவிடாதேங்கோ.
நான் பார்த்தவரை இலங்கை இந்தியா போன்ற கீழத்தேய நாடுகளில்தான் பெண் அதிபர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அல்லது இருந்திருக்கிறார்கள்...!!??
இன்னும் குறிப்பாய் வல்லரசுகள் என்னும் வீட்டோ அதிகார நாடுகளில் அதிபர்கள் அனைவருமே ஆண்கள்.. பிரான்சில் அதிபர் தேர்தலில் (அங்கேலா மேர்கர் அம்மையார் போன்றோர் விதி விலக்கு..).போட்டியிடும் பிரதான இரண்டு வேட்பாளர்களும் ஆண்களே...! ஆகையால் இன்னும் ஐந்து வருடம் இங்கும் பெண் அதிபர்கள் வரமாட்டார்கள்...!!!
ஐயா நான் காட்டானுங்க.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..?
மேலை நாட்டுக்காரர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறார்கள் என்றாலும் அதி முக்கிய பதவிகள் ஆண்களுக்கே ஒதுக்குகிறார்கள்..!!
ஆனால் கீழத்தேய நாட்டில் பெண்களுக்கு சம உரிமை இல்லை.. ஆனால் பெரிய பதவிகளில் பெண்கள் அலங்கரிக்கிறார்கள். உலகத்தின் முதல் பிரதமர் சிறீமாவோ தொடக்கம் முதலாவது இஸ்லாமிய பிரதமர் பெனாஷிர் பூட்டோ வரை பட்டியல் நீளம்
ஐயா..!
எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிபர்களாக இல்லாததுதான் காரணமா
டிஸ்கி:- நான் பெண்களின் எதிரி இல்லைங்கோ!!!)))
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊரில் ஆச்சி அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை தை பிறந்தால் வழி பிறக்கும் என்று.??!!
இதை நான் பல இடங்களில் வெவ்வேறு அர்த்தத்தில் பேசுவதை கேள்விப்பட்டிருக்கிறேன்..
1 :-தை பிறந்தால் விவசாயிகள் அறுவடை முடித்து தானியங்களை விற்பனை செய்து வரும் வருமானத்தில் சந்தோஷமாய் நற் காரியங்கள் செய்வார்கள்.(திருமணங்கள் கூடுதலாக தை மாதத்தில்தான் செய்கிறார்கள்..!!! அப்போதுதான் ஆடி மாதத்தில் மாசமான பெண்னை பிரித்து வைக்கலாம்.. ஹி ஹி ஹி!!)
2:-இப்படியும் சொல்கிறார்கள் அந்த காலத்தில ஒவ்வோர் ஊருக்கும் இடையில் இப்ப இருப்பது போல் சாலை வசதி இல்லை.. விவசாய நிலங்களாலும் நீராலும் சூழப்பட்ட கிராமத்தில் மாரி காலத்தில் பாதை அடைபட்டு போகின்றது.
தை மாதத்தில் நீரும் வற்றி அறுவடையும் முடியும்போது பாதை அதாவது வழி தெரிகின்றது.. ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் சொல்கிறார்கள்...!!!!!!)))
எது சரி? இக்காலத்திலும் இந்த பழமொழி எமக்கு சரி வருமா..? தை பிறந்தால் இப்போ இருக்கும் விவசாயிகளும் முன்னைப்போல் சந்தோஷமாய் இருக்கிறார்களா..?