முகப்பு

Tuesday 14 June 2011

இதுதாண்டா பிரான்ஸ்.....!!?


டொமினிக் பொரஸ்கான் இந்தப்பெயரை ..
உச்சரிக்காதவர்கள்..இன்று இங்கு இல்லையெனலாம் .....!!??.உலக நாணய நிதியத்தின் முன்னால்..!?தலைவர்
கிறீஸ்,அயர்லாந்து,போத்துக்கள்,...
போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை
தூக்கி நிறுத்த வந்த சோசலிச தூதன்(பாருங்கோ ஏழநாடுகளுக்கு உதவி செய்யமாட்டார்கள் அப்படி செய்தாலும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள்...!!??)
88-91இல் நிதி,வர்த்தக அமைச்சர், வர்த்தக பேராசிரியர்
90களின் ஆரம்பத்தில் பிரன்சு மக்களை கட்டிப்போட்ட 7sur7 என்னும்  நிகழ்சியை நடத்தியஅழகி(நிசம்தாங்கோ..பெரும்செல்வந்தர் அக்காலத்தில் இவர் செய்த நிகழ்சிகளின் பார்வையாளர்களை வட்டத்தை இதுவரை எந்த ஒரு நிகழ்சியும்
முறியடிக்கவில்லை என நினைக்கிறேன்)

அன்சங்கிலரின் கணவர்,முன்னால் சோசலிச அரசின் கேபினட் அமைச்சர்
பாரிசின் புறநகர் சார்சலின் முன்னால் மேயர் அடுத்தவருடம் மே மத்தியில் நடக்கவுள்ள
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருந்த பிரதான சோசலிச கட்சி வேட்பாளர்(புள்ளி விபரங்களின்படி இவர்தான்அடுத்த ஜனாதிபதி...இவர் ஜனாதிபதித்தேர்தலில்
போட்டியிட்டால்..!?நம்ம சித்தப்பு.....?தற்போதய ஜனாதிபதி சார்கோசி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுவாராம் இஞ்சதான்
நிக்கிறார்....!!??நம்ம சித்தப்பு ..? மூன்றாம் இடம் வருபவர் இரண்டாம் சுற்றில் போட்டியிட முடியாது..!) இப்படிப்
பட்ட திறமைகள் நிறைந்த பொரஸ்கான்..!?
நம்ம நித்தியானந்த சாமி மாதிரி பாலான விசயத்தில் மாட்டி(வைக்கப்பட்டு...?)நிற்கிறார்.
நியோக்கின் பிரபலமான உல்லாச ஓட்டல்
ஒன்றின் பணிப்பெண் இவர்மீது கற்பழிப்பு,வன்புனர்ச்சி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்(இங்கேயும் பாருங்கோ ரஞ்சிதா மாதிரி ஒரு கறுப்பழகிதான்?)இதற்கு தண்டணை கிடைத்தால்..?மாப்புவின் ஆயுசு முழுவதும் ஜெயில்தான்..கழிதான்...!!? இத்தனைக்கும் பிறகு ஒரு புள்ளி விவரப்படி பிரன்ஸ்சு மக்கள் 67வீதமானவர்கள் இதனை நம்பவில்லை..!! ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கு
என்கிறார்கள்...?ஒரு கற்பனைக்குத்தான்..
பொரஸ்கான் ஜனாதிபதியாகினால்..?
பெரியண்ணாச்சி அமெரிக்காவின் கைப்புள்ளமாதிரி நடந்துகொள்ளமாட்டார்
(சோசலிச கட்சிக்கென்று சில கொள்கைகள் உண்டு )மறுபுறம் நம்ம மாப்புவும் ஏகபத்தினி விரதனில்லை இவர் மீது ஒரு பெண் நிருபர் பாலியல் புகார் அளித்துள்ளார் அத்துடன் சோசலிச கட்சியின்தொண்டணின் மகளுடனும் கசமுசாவென பத்திரிகைகள் கூறுகின்றன.!
வழக்கு நடக்கும் வரை மாப்பு அமெரிக்காவுலதான் நிற்கனும் .???அதற்குல்லாற ஜனாதிபதி தேர்தல் முடிந்து போயிடும்(சித்தப்புக்கு இதுதானே வேண்டும்..!?) இதில நாங்க கவனிக்க வேண்டியது சோசலிச கட்சியின் தலைவி
மாட்டினோ பிரியைதான் அம்மாவிற்குத் தெரியும் தான் ஜனாதிபதியாக முடியாதென்று...!? மாப்புவை ஜனதிபதியாக்கிவுட்டு...?தான் பிரதமர் பதவியை பிடிப்போமென்று (மாப்பு உலகம் சுத்தட்டும் தான் உள்ளுர் சுத்துவோமெண்டு )இரண்டு பேருக்கும்
ஆப்புத்தான்..சித்தப்பு ஒரு அரசியல் புலி முன்னால் ஜனாதிபதியாலேயே(ஜக்சிராக் ) ஒன்றும் செய்ய முடியவில்லை (இதைப் பற்றி பின்னர் ஒரு பதிவிடுகிறேன்) மொத்தத்தில் சித்தப்பு ஜனாதிபதியாவது
உறுதியாகிறது ..!? இத்துடன் ஜரோப்பாவில் இப்பொழுது வலதுசாரிகள்
வெற்றி பெற்றுக்கொண்டு வருகிறார்கள்!?
சித்தப்பு காட்டில மழைதான் ........எதற்குமிருக்கட்டும் 2012ல்மீண்டும்.?ஜனாதிபதியாய் பொறுப்பேற்கவுள்ள சார்கோசிக்கு எனது வாழ்த்துக்கள்.!?

No comments: